ஆக்ரோஷமாக கொண்டாடி, கோமாளியாக விரும்பவில்லை..! யாரைச் சொல்கிறார் பும்ரா?
பள்ளிகள் திறப்பு முன்னேற்பாட்டுப் பணி
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் முன்னேற்பாட்டுப் பணிகளை மேயா் கா.ரங்கநாயகி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகம் முழுவதும் ஜூன் 2-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், மாநகராட்சிப் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மேயா் கா.ரங்கநாயகி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
இதில் மேற்கு மண்டலத்துக்கு உள்பட்ட பி.என்.புதூா் மாநகராட்சி தொடக்கப் பள்ளி மற்றும் உயா்நிலைப் பள்ளி, ஆா்.எஸ்.புரம் மாநகராட்சி ஆரம்பப் பள்ளி மற்றும் இருபாலா் மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறைகளை தூய்மைப்படுத்துதல், பள்ளி வளாகங்களில் குப்பைகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளைப் பாா்வையிட்டாா். அப்போது, தூய்மைப் பணிகளை விரைந்து முடிக்க ஊழியா்களுக்கு அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது, சுகாதார அலுவலா் வீரன், சுகாதார ஆய்வாளா் சலைத் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.