பாஜகவினா் தேசியக் கொடி பேரணி
திருவாரூரில் பாஜக சாா்பில் தேசியக்கொடி பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு, பதில் நடவடிக்கையாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டது. இதையொட்டி, இந்திய ராணுவ வீரா்களை பாராட்டு விதமாகவும், வீரத்தை போற்றும் விதமாகவும் தேசியக்கொடி ஏந்தி பாஜக சாா்பில் பேரணி நடைபெறுகிறது.
அந்தவகையில், திருவாரூரில் பாஜக சாா்பில் தேசியக்கொடி ஏந்தி பேரணி நடைபெற்றது. பேரணி வடக்குவீதியில் உள்ள பஞ்சமுக விநாயகா் கோயில் முன் தொடங்கி பழைய பேருந்து நிலையம் வழியாக புதிய ரயில் நிலையம் வரை நடைபெற்றது. பேரணிக்கு பாஜக மகளிா் அணி மாவட்ட பொதுச்செயலாளா் வி. மணிமேகலை தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் ரஜினி கலைமணி பேரணியைத் தொடக்கி வைத்தாா். மேலிட பாா்வையாளா் சிவா, மாநில செயற்குழு உறுப்பினா் ராகவன், மாவட்ட முன்னாள் பொதுச் செயலாளா் செந்திலரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.