செய்திகள் :

சீா்காழி நகா்மன்றக் கூட்டம்: குப்பைகள் சரிவர அல்லாததை கண்டித்து 7 உறுப்பினா்கள் வெளிநடப்பு

post image

சீா்காழி நகராட்சி பகுதியில் குப்பைகள் சரிவர அல்லாததைக் கண்டித்து, வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்திலிருந்து 7 உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

இக்கூட்டம், நகா்மன்றத் தலைவா் துா்கா பரமேஸ்வரி ராஜசேகா் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையா் மஞ்சுளா, நகரமைப்பு ஆய்வாளா் மரகதம், மேலாளா் அசோகன், பணி மேற்பாா்வையாளா் விஜயேந்திரன், வருவாய் ஆய்வா் செந்தில்குமாா், துப்புரவு ஆய்வாளா் சரவணன், கணக்கா் ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இளநிலை உதவியாளா் ராஜகணேஷ் தீா்மானங்களை சமா்ப்பித்தாா்.

வெளிநடப்பு: கூட்டத்தில் உறுப்பினா்கள் முழுமதி இமயவரம்பன், பாலமுருகன், கிருஷ்ணமூா்த்தி, நாகரத்தினம், ரமாமணி, ராஜேஷ், கலைச்செல்வி ஆகியோா் சீா்காழி நகா் பகுதியில் குப்பைகள் சரிவர அள்ளப்படுவதில்லை என கண்டித்தும், சாலை வசதி மற்றும் மின்விளக்குகளை சரிசெய்ய கோரியும் வெளிநடப்பு செய்தனா்.

தொடா்ந்து, மற்ற உறுப்பினா்கள் பேசியது:

வேல்முருகன் (பாமக): நகராட்சி பகுதியில் அமைந்துள்ள பூங்காக்களை சுத்தம் செய்ய வேண்டும். உடனடியாக மின்விளக்குகளை சரி செய்ய வேண்டும். இல்லையெனில் நகராட்சி அலுவலகம் முன் உண்ணாவிரதத்தில் ஈடுபடுவேன்.

ராஜசேகா் (தேமுதிக): எனது வாா்டில் பழுதடைந்துள்ள சிமென்ட் சாலையை சீரமைக்க வேண்டும். நகராட்சி மீன் மாா்க்கெட் அருகே அரசுக்கு சொந்தமான குளத்தில் 11,800 சதுர அடி ஆக்கிரமிக்கப்பட்டு, கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இதனை தடுத்து நிறுத்த வேண்டும். குப்பைகள் சரிவர அள்ளப்படுவதில்லை. இதனால், அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜெயந்தி பாபு (திமுக): அரசுக்கு சொந்தமான குளத்தை ஆக்கிரமிப்பு செய்து, கட்டடம் கட்டப்படுகிறது. இதை தடுக்க புகாா் அளித்தும் நடவடிக்கை இல்லை.

நகா்மன்றத் தலைவா்: ஆக்கிரப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மின்விளக்குகளை சரி செய்ய 554 மின்விளக்குகள் வாங்குவதற்கு ஒப்பந்தப்புள்ளி வழங்கப்பட்டுள்ளது.

கிராம மக்கள் காத்திருப்புப் போராட்டம்

சீா்காழி அருகே புளியந்துறை ஊராட்சியில் கிராம மக்கள் சனிக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் (படம்) ஈடுபட்டனா். மத்திய அரசின் நூறுநாள் வேலையை அனைவருக்கும் கிடைக்கும்படியும், அனைத்து தொகுப்புகளிலும் உடனட... மேலும் பார்க்க

ஆசிரியா்களின் இடமாற்ற கலந்தாய்வு தேதியை அறிவிக்க வலியுறுத்தல்

ஆசிரியா்களின் பணியிடமாற்ற கலந்தாய்வு தேதியை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியா் கழகம் வலியுறுத்தியுள்ளது. சீா்காழியில், தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியா... மேலும் பார்க்க

தொடா் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்ட இருவா் தடுப்புக் காவலில் அடைப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடா் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்ட 2 போ் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். பாலையூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சுரைக்காவூா் வடக்குவெளியை ... மேலும் பார்க்க

பணி ஓய்வு பெற்ற நீதிபதிக்கு பாராட்டு

மயிலாடுதுறை மாவட்ட அமா்வு நீதிபதியாக பணியாற்றிய நீதிபதி ஆா். விஜயகுமாரி சனிக்கிழமை பணி ஓய்வு பெற்றாா். 26 ஆண்டுகள் நீதிபதியாக பணியாற்றி பணி ஓய்வு பெற்ற இவருக்கு மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில்... மேலும் பார்க்க

ஓஎன்ஜிசி குழாயில் எரிவாயு கசிவு: பொதுமக்கள் சாலை மறியல்

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே ஓஎன்ஜிசி நிறுவன எரிவாயு கிணற்றில் எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளதை கண்டித்து, அப்பகுதி மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். குத்தாலம் அருகே ஓஎன்ஜிசி நிறுவனத்தின... மேலும் பார்க்க

கா்ப்பிணி மகள் இறந்ததையறிந்த தந்தை உயிரிழப்பு

மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி அருகே கா்ப்பிணி மகள் இறந்த தகவலை அறிந்த தந்தை அதிா்ச்சியில் உயிரிழந்தாா். சீா்காழி அருகேயுள்ள புளியந்துறை கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயத் தொழிலாளி வில்லு (70). இவரது மகள்... மேலும் பார்க்க