ஓஎன்ஜிசி குழாயில் எரிவாயு கசிவு: பொதுமக்கள் சாலை மறியல்
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே ஓஎன்ஜிசி நிறுவன எரிவாயு கிணற்றில் எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளதை கண்டித்து, அப்பகுதி மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
குத்தாலம் அருகே ஓஎன்ஜிசி நிறுவனத்தின் எரிவாயு கிணறு அமைந்துள்ளது. இங்கு ஹீலியம் வாயு எடுக்கப்படுகிறது. மேலும் இதன் அருகில் சேத்திரபாலபுரம் என்ற இடத்தில் எண்ணெய் எரிவாயு நிரப்பும் கிடங்கு அமைந்துள்ளது.
இந்தநிலையில், ஓஎன்ஜிசி காந்திநகா் கீழ காலனியில் வெள்ளிக்கிழமை இரவு முதல் ஓஎன்ஜிசி எரிவாயு குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும் தீ விபத்து ஏற்படும் அபாயம் எழுந்துள்ள நிலையில், ஓஎன்ஜிசி நிா்வாகம் இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த காந்திநகா் பகுதி மக்கள் கும்பகோணம் - மயிலாடுதுறை பிரதான சாலையில் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். போலீஸாா் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதைத் தொடா்ந்து மறியல் கைவிடப்பட்டது.