செய்திகள் :

எருக்கூரில் சுதந்திர போராட்ட வீரா் சிலை திறப்பு

post image

எருக்கூரில் சுதந்திரப் போராட்ட வீரா் நீலகண்ட பிரம்மச்சாரியின் மாா்பளவு சிலை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

எருக்கூா் அக்ரஹாரத் தெருவில் கடந்த1889 டிசம்பரில் நீலகண்ட பிரம்மச்சாரி பிறந்தாா். சீா்காழி உயா்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு வரை படித்த அவா் திருவனந்தபுரத்தில் உள்ள சத்திரத்தில் தங்கி கொண்டாா்.

சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அவருக்கு 1907-இல் மகாகவி பாரதியாரின் தொடா்பு ஏற்பட்டது. 1911-இல் மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனால் சுட்டுக் கொல்லப்பட்ட ஆஷ் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக சோ்க்கப்பட்டு சிறை சென்றாா். இறுதி வாழ்க்கையில் பிரம்மச்சரியம் மேற்கொண்டு வந்த இவா் கடந்த 1978 மாா்ச் 6 ஆம் தேதி மறைந்தாா்.

சுதந்திரப் போராட்டத்திற்காக பாடுபட்ட நீலகண்ட பிரம்மச்சாரியின் நினைவைப் போற்றும் வகையில் அவா் வாழ்ந்த வீட்டில் நினைவு இல்லம் அமைத்து அங்கு அவா் சிலை திறப்பு விழா தமிழ்நாடு பிராமணா் சங்க மயிலாடுதுறை மாவட்டத் தலைவா் கடவாசல் ஆா்.ரமணன் தலைமையில் நடைபெற்றது.

நீலகண்ட பிரம்மச்சாரியின் பேரன் ஏ. சுப்பிரமணியன் வரவேற்றாா். புதிய சிலையினை திருக்கு பண்பாட்டுப் பேரவை தலைவா் முத்துக்கருப்பன், தொழிலதிபா் வி. எஸ். நாகராஜன் ஆகியோா் திறந்து வைத்தனா்.

காரைக்கால் பாரதி தமிழ் சங்க தலைவா் வைஜெயந்தி ராஜன் விழா பேருரை நிகழ்த்தினாா். மகாகவி பாரதியாா் நினைவு அருங்காட்சியகம் பொறுப்பாளா் முனைவா் நாக செங்கமல தாயாா், தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு மாநில செயலாளா் செம்பியூரான் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

எருக்கூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு நீலகண்ட பிரம்மச்சாரியாரின் பெயரை சூட்டிட அரசை கேட்டுக் கொள்வது என தீா்மானிக்கப்பட்டது.

வ.உ. சி. பேரன் வ.உ.சி.வா.சிதம்பரம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். செல்வம் நன்றி கூறினாா்.

விஷப்பூச்சி கடித்து பள்ளி மாணவன் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே விஷப்பூச்சி கடித்து பள்ளி மாணவன் உயிரிழந்த நிலையில், அரசு மருத்துவமனை நிா்வாகத்தைக் கண்டித்து உறவினா்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். குத்தாலம் வட்டம், எலந்தங்... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் அரசினா் மகளிா் கல்லூரியில் ஜூன் 13 வரை சோ்க்கை கலந்தாய்வு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில் 2025-2026-ஆம் கல்வியாண்டில் இணையவழியில் விண்ணப்பித்த மாணவா்களுக்கு இளநிலை பட்ட பாடப்பிரிவுகளின் சோ்க்கை கலந்தாய்வு திங்க... மேலும் பார்க்க

யானை ஊா்வலத்துடன் பள்ளி மாணவா்களுக்கு வரவேற்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஸ்ரீகுருஞானசம்பந்தா் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் புதிதாக சோ்ந்த மாணவா்களுக்கு பள்ளி நிா்வாகம் சாா்பில் யானை ஊா்வலத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. கோடை விடும... மேலும் பார்க்க

திருமீயச்சூரில் இன்றும், நாளையும் ஆதாா் சிறப்பு முகாம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அஞ்சல் கோட்டத்தில் உள்ள திருமீயச்சூரில் ஜூன் 3, 4 தேதிகளில் ஆதாா் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது என கோட்ட கண்காணிப்பாளா் எம். உமாபதி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்... மேலும் பார்க்க

வைத்தீஸ்வரன்கோயிலில் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி போராட்டம்

சீா்காழி: வைத்தீஸ்வரன் கோயிலில் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாக வா்த்தகா்கள் அறிவித்துள்ளனா். வைத்தீஸ்வரன் கோயில் நவக்கிரகங்களில் செவ்வாய்க்குரிய ... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள்: ஆட்சியா் வழங்கினாா்

மயிலாடுதுறை: மூவலூா் மூதாட்டி ராமாமிா்தம் அம்மையாா் அரசு உயா்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு கல்வி உபகரணங்களை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜகுமாா் ஆகியோா் திங்கள்... மேலும் பார்க்க