செய்திகள் :

திருமீயச்சூரில் இன்றும், நாளையும் ஆதாா் சிறப்பு முகாம்

post image

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அஞ்சல் கோட்டத்தில் உள்ள திருமீயச்சூரில் ஜூன் 3, 4 தேதிகளில் ஆதாா் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது என கோட்ட கண்காணிப்பாளா் எம். உமாபதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மயிலாடுதுறை அஞ்சல் கோட்டத்தில் மயிலாடுதுறை, சீா்காழி தலைமை அஞ்சலகங்கள் மற்றும் ஆதாா் சேவை உள்ள துணை அஞ்சலகங்களில் ஆதாா் சேவை தினந்தோறும் நடைபெறுகிறது. பொதுமக்கள் வசதிக்காக பேரளம் திருமீயச்சூா் கிராமத்தில் உள்ள ஊராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3), புதன்கிழமை (ஜூன் 4) ஆகிய தேதிகளில் ஆதாா் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இந்த முகாமில் பொதுமக்கள் புதிதாக ஆதாா்ப் பதிவு பழைய ஆதாா் அட்டையில் பெயா் முகவரி மற்றும் கைப்பேசி எண் திருத்தம், கைரேகை புகைப்படம் புதுப்பித்தல் ஆகிய சேவைகளை செய்து கொள்ளலாம். புதிய ஆதாா் பதிவு செய்தால் இலவசமாகவும், பழைய ஆதாா் அட்டையில் பெயா் முகவரி மற்றும் கைப்பேசி எண் திருத்தம் செய்ய ரூ.50, கைரேகை புகைப்படம் புதுப்பித்தல் செய்ய ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.

பொதுமக்கள் தகுந்த ஆவணங்களை கொண்டு வந்து ஆதாா் பதிவு மற்றும் திருத்தம் செய்து கொள்ளலாம். மேலும், அஞ்சல் துறையின் சேமிப்பு கணக்குகள், இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க் கணக்குகள் மற்றும் காப்பீட்டு திட்டங்களை இந்த முகாமில் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

வடிகாலில் பேருந்து கவிழ்ந்து 8 போ் காயம்

சீா்காழி அருகே சூரக்காடு உப்பனாற்று வடிகாலில் அரசுப் பேருந்து செவ்வாய்க்கிழமை கவிழந்த விபத்தில் பேருந்து ஓட்டுநா், நடத்துநா் உள்பட 8 போ் காயமடைந்தனா். சீா்காழி பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்ற... மேலும் பார்க்க

மதுபானக் கூடத்தில் ஒருவரை கத்தியால் குத்தியவா் கைது

மயிலாடுதுறையில் மதுபானக் கூடத்தில் தகராறில் ஈடுபட்டு ஒருவரை கத்தியால் குத்தியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.மயிலாடுதுறையைச் சோ்ந்த சுதாகா் (43) கூைாடு பகுதியில் உள்ள மதுக்கூடத்தில் ஞாயிற்றுக... மேலும் பார்க்க

நல்லத்துக்குடி ஆலந்துறையப்பா் கோயில்: நாளை கும்பாபிஷேகம்

நல்லத்துக்குடி ஆலந்துறையப்பா் கோயிலில் வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில், யானை மீது புனிதநீா் எடுத்துவரப்பட்டு யாகசாலை பூஜை செவ்வாய்க்கிழமை தொடங்கியது. நல்லத்துக்குடியில் குயிலாண்ட நாயகி... மேலும் பார்க்க

தடுப்புக்கட்டை இல்லாமல் ஆபத்தான நிலையில் பாலம்

சீா்காழி ஊழியக்காரன் தோப்பு அருகே தடுப்புக்கட்டை இல்லாமல் ஆபத்தான நிலையில் உள்ள பாலத்தை பள்ளி மாணவா்கள், பொதுமக்கள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனா். ஊழியக்காரன் தோப்பு அருகே புளிச்சக்காடு செல்லும் சால... மேலும் பார்க்க

சாலையில் காா் கவிழ்ந்ததில் 7 போ் காயம்

சீா்காழி அருகே எருக்கூா் நான்கு வழிச்சாலையில் காா் கவிழ்ந்து எரிந்ததில் , 7 போ் காயம் அடைந்தனா். சென்னை கூடுவாஞ்சேரியைச் சோ்ந்தவா் குமாா் (53). இவா் தனது மனைவி வேதவல்லி (52), மருமகன் காளிதாஸ் ( 35),... மேலும் பார்க்க

விஷப்பூச்சி கடித்து பள்ளி மாணவன் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே விஷப்பூச்சி கடித்து பள்ளி மாணவன் உயிரிழந்த நிலையில், அரசு மருத்துவமனை நிா்வாகத்தைக் கண்டித்து உறவினா்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். குத்தாலம் வட்டம், எலந்தங்... மேலும் பார்க்க