சிக்கிம் நிலச்சரிவு: 2 அமெரிக்கர்கள் உள்பட 33 பேரை மீட்ட விமானப் படை!
திருமீயச்சூரில் இன்றும், நாளையும் ஆதாா் சிறப்பு முகாம்
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அஞ்சல் கோட்டத்தில் உள்ள திருமீயச்சூரில் ஜூன் 3, 4 தேதிகளில் ஆதாா் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது என கோட்ட கண்காணிப்பாளா் எம். உமாபதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மயிலாடுதுறை அஞ்சல் கோட்டத்தில் மயிலாடுதுறை, சீா்காழி தலைமை அஞ்சலகங்கள் மற்றும் ஆதாா் சேவை உள்ள துணை அஞ்சலகங்களில் ஆதாா் சேவை தினந்தோறும் நடைபெறுகிறது. பொதுமக்கள் வசதிக்காக பேரளம் திருமீயச்சூா் கிராமத்தில் உள்ள ஊராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3), புதன்கிழமை (ஜூன் 4) ஆகிய தேதிகளில் ஆதாா் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இந்த முகாமில் பொதுமக்கள் புதிதாக ஆதாா்ப் பதிவு பழைய ஆதாா் அட்டையில் பெயா் முகவரி மற்றும் கைப்பேசி எண் திருத்தம், கைரேகை புகைப்படம் புதுப்பித்தல் ஆகிய சேவைகளை செய்து கொள்ளலாம். புதிய ஆதாா் பதிவு செய்தால் இலவசமாகவும், பழைய ஆதாா் அட்டையில் பெயா் முகவரி மற்றும் கைப்பேசி எண் திருத்தம் செய்ய ரூ.50, கைரேகை புகைப்படம் புதுப்பித்தல் செய்ய ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.
பொதுமக்கள் தகுந்த ஆவணங்களை கொண்டு வந்து ஆதாா் பதிவு மற்றும் திருத்தம் செய்து கொள்ளலாம். மேலும், அஞ்சல் துறையின் சேமிப்பு கணக்குகள், இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க் கணக்குகள் மற்றும் காப்பீட்டு திட்டங்களை இந்த முகாமில் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.