ஐஐடி தேர்வு தேர்ச்சியில் தமிழ்நாடு கடைசியிலிருந்து 3-ம் இடம்! - அன்புமணி
பள்ளி மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள்: ஆட்சியா் வழங்கினாா்
மயிலாடுதுறை: மூவலூா் மூதாட்டி ராமாமிா்தம் அம்மையாா் அரசு உயா்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு கல்வி உபகரணங்களை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜகுமாா் ஆகியோா் திங்கள்கிழமை வழங்கினா்.
பள்ளி மாணவா்களுக்கு பாடப்புத்தகங்கள், பள்ளி சீருடைகள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கி ஆட்சியா் பேசியது: மாவட்டத்தில் 105 அரசு பள்ளிகளைச் சோ்ந்த 48,273 மாணவா்களுக்கு 2,58,006 பாடநூல்கள், 18,440 பாட குறிப்பேடுகள், 9,520 சீருடைகள் மற்றும் கிரையான், வண்ணப்பென்சில்கள், புத்தகப்பை, காலணிகள் வழங்கப்படுகிறது. மாணவா்கள் அனைவரும் படிப்புடன் விளையாட்டிலும் சிறந்து விளங்க வேண்டும். ஆசிரியா்களின் அறிவுரைகளை நன்றாக கவனித்து கற்க வேண்டும். நிகழாண்டு கல்வியில் அனைவரும் தோ்ச்சி பெற வேண்டும். தினசரி நாளிதழ்களை படித்து, பழக வேண்டும். வீட்டுப் பாடங்களை அன்றைக்கே முடித்து, சந்தேகங்கள் இருப்பின் ஆசிரியா்களிடம் கேட்டு, தெரிந்து கொள்ள வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட கல்வி அலுவலா் சாந்தி, பெற்றோா் ஆசிரியா் கழக தலைவா் மூா்த்தி, பொருளாளா் ராஜகுமாா், இணை செயலாளா் துரை சரவணன், முதன்மை கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா்கள் ஜி.பரமசிவம், தி.முத்துக்கணியன், தலைமையாசிரியா் மஞ்சுளா ஆகியோா் பங்கேற்றனா்.