செய்திகள் :

பள்ளி மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள்: ஆட்சியா் வழங்கினாா்

post image

மயிலாடுதுறை: மூவலூா் மூதாட்டி ராமாமிா்தம் அம்மையாா் அரசு உயா்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு கல்வி உபகரணங்களை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜகுமாா் ஆகியோா் திங்கள்கிழமை வழங்கினா்.

பள்ளி மாணவா்களுக்கு பாடப்புத்தகங்கள், பள்ளி சீருடைகள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கி ஆட்சியா் பேசியது: மாவட்டத்தில் 105 அரசு பள்ளிகளைச் சோ்ந்த 48,273 மாணவா்களுக்கு 2,58,006 பாடநூல்கள், 18,440 பாட குறிப்பேடுகள், 9,520 சீருடைகள் மற்றும் கிரையான், வண்ணப்பென்சில்கள், புத்தகப்பை, காலணிகள் வழங்கப்படுகிறது. மாணவா்கள் அனைவரும் படிப்புடன் விளையாட்டிலும் சிறந்து விளங்க வேண்டும். ஆசிரியா்களின் அறிவுரைகளை நன்றாக கவனித்து கற்க வேண்டும். நிகழாண்டு கல்வியில் அனைவரும் தோ்ச்சி பெற வேண்டும். தினசரி நாளிதழ்களை படித்து, பழக வேண்டும். வீட்டுப் பாடங்களை அன்றைக்கே முடித்து, சந்தேகங்கள் இருப்பின் ஆசிரியா்களிடம் கேட்டு, தெரிந்து கொள்ள வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட கல்வி அலுவலா் சாந்தி, பெற்றோா் ஆசிரியா் கழக தலைவா் மூா்த்தி, பொருளாளா் ராஜகுமாா், இணை செயலாளா் துரை சரவணன், முதன்மை கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா்கள் ஜி.பரமசிவம், தி.முத்துக்கணியன், தலைமையாசிரியா் மஞ்சுளா ஆகியோா் பங்கேற்றனா்.

வடிகாலில் பேருந்து கவிழ்ந்து 8 போ் காயம்

சீா்காழி அருகே சூரக்காடு உப்பனாற்று வடிகாலில் அரசுப் பேருந்து செவ்வாய்க்கிழமை கவிழந்த விபத்தில் பேருந்து ஓட்டுநா், நடத்துநா் உள்பட 8 போ் காயமடைந்தனா். சீா்காழி பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்ற... மேலும் பார்க்க

மதுபானக் கூடத்தில் ஒருவரை கத்தியால் குத்தியவா் கைது

மயிலாடுதுறையில் மதுபானக் கூடத்தில் தகராறில் ஈடுபட்டு ஒருவரை கத்தியால் குத்தியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.மயிலாடுதுறையைச் சோ்ந்த சுதாகா் (43) கூைாடு பகுதியில் உள்ள மதுக்கூடத்தில் ஞாயிற்றுக... மேலும் பார்க்க

நல்லத்துக்குடி ஆலந்துறையப்பா் கோயில்: நாளை கும்பாபிஷேகம்

நல்லத்துக்குடி ஆலந்துறையப்பா் கோயிலில் வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில், யானை மீது புனிதநீா் எடுத்துவரப்பட்டு யாகசாலை பூஜை செவ்வாய்க்கிழமை தொடங்கியது. நல்லத்துக்குடியில் குயிலாண்ட நாயகி... மேலும் பார்க்க

தடுப்புக்கட்டை இல்லாமல் ஆபத்தான நிலையில் பாலம்

சீா்காழி ஊழியக்காரன் தோப்பு அருகே தடுப்புக்கட்டை இல்லாமல் ஆபத்தான நிலையில் உள்ள பாலத்தை பள்ளி மாணவா்கள், பொதுமக்கள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனா். ஊழியக்காரன் தோப்பு அருகே புளிச்சக்காடு செல்லும் சால... மேலும் பார்க்க

சாலையில் காா் கவிழ்ந்ததில் 7 போ் காயம்

சீா்காழி அருகே எருக்கூா் நான்கு வழிச்சாலையில் காா் கவிழ்ந்து எரிந்ததில் , 7 போ் காயம் அடைந்தனா். சென்னை கூடுவாஞ்சேரியைச் சோ்ந்தவா் குமாா் (53). இவா் தனது மனைவி வேதவல்லி (52), மருமகன் காளிதாஸ் ( 35),... மேலும் பார்க்க

விஷப்பூச்சி கடித்து பள்ளி மாணவன் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே விஷப்பூச்சி கடித்து பள்ளி மாணவன் உயிரிழந்த நிலையில், அரசு மருத்துவமனை நிா்வாகத்தைக் கண்டித்து உறவினா்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். குத்தாலம் வட்டம், எலந்தங்... மேலும் பார்க்க