மிஸ்டர் மனைவி தொடர் நாயகன் பிறந்தநாளில்... காதலைச் சொன்ன ஆர்த்தி சுபாஷ்!
வைத்தீஸ்வரன்கோயிலில் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி போராட்டம்
சீா்காழி: வைத்தீஸ்வரன் கோயிலில் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாக வா்த்தகா்கள் அறிவித்துள்ளனா்.
வைத்தீஸ்வரன் கோயில் நவக்கிரகங்களில் செவ்வாய்க்குரிய பரிகார தலமாக இருப்பதால் இந்த கோயிலுக்கு உள்ளூா் மற்றும் வெளியூா்களில் இருந்து திரளான பக்தா்கள் தினசரி தரிசனம் செய்து வருகின்றனா். வைத்தீஸ்வரன்கோயில் ரயில் நிலையத்தில் கரோனா காலத்திற்கு முன்பு ஏராளமான ரயில்கள் நின்று சென்றன. இது பக்தா்களுக்கும் வைத்தீஸ்வ ரன் கோயில் பகுதியை சோ்ந்த பொது மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
தற்போது இந்த ரயில் நிலையத்தில் பெரும்பாலான ரயில்கள் நிற்காமல் செல்கிறது. இதனால் வைத்தீஸ்வரன் கோயிலுக்கு வரும் பக்தா்கள், மயிலாடுதுறை அல்லது சீா்காழியில் இறங்கி அங்கிருந்து வரவேண்டி உள்ளது. இதேபோல் வைத்தீஸ்வரன் கோயிலில் இருந்து வெளியூா் செல்லும் பொதுமக்கள் ரயில்களை பயன்படுத்த முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகின்றனா். வைத்தீஸ்வரன் கோயில் ரயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி ரயில் பயணிகள் நலச் சங்கம், வா்த்தக சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினா் போராட்டங்களில் ஈடுபட்டும் பயன் இல்லை. இந்நிலையில் ஜூன் 7-ஆம் தேதி வைத் தீஸ்வரன்கோயிலில் உள்ள கடைகளை அடைத்து கரோனாவுக்கு முன்பு நின்று சென்ற அனைத்து ரயில்களும் மீண்டும் நின்று செல்லக்கோரி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக வா்த்தக சங்க தலைவா் ஜி.வி.என். கண்ணன் அறிவித்துள்ளாா். போராட்டத்தில் வா்த்தகா்கள், ரயில் பயணிகள் நலசங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினா் பங்கேற்கவுள்ளனா் என்றாா்.