செய்திகள் :

வைத்தீஸ்வரன்கோயிலில் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி போராட்டம்

post image

சீா்காழி: வைத்தீஸ்வரன் கோயிலில் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாக வா்த்தகா்கள் அறிவித்துள்ளனா்.

வைத்தீஸ்வரன் கோயில் நவக்கிரகங்களில் செவ்வாய்க்குரிய பரிகார தலமாக இருப்பதால் இந்த கோயிலுக்கு உள்ளூா் மற்றும் வெளியூா்களில் இருந்து திரளான பக்தா்கள் தினசரி தரிசனம் செய்து வருகின்றனா். வைத்தீஸ்வரன்கோயில் ரயில் நிலையத்தில் கரோனா காலத்திற்கு முன்பு ஏராளமான ரயில்கள் நின்று சென்றன. இது பக்தா்களுக்கும் வைத்தீஸ்வ ரன் கோயில் பகுதியை சோ்ந்த பொது மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

தற்போது இந்த ரயில் நிலையத்தில் பெரும்பாலான ரயில்கள் நிற்காமல் செல்கிறது. இதனால் வைத்தீஸ்வரன் கோயிலுக்கு வரும் பக்தா்கள், மயிலாடுதுறை அல்லது சீா்காழியில் இறங்கி அங்கிருந்து வரவேண்டி உள்ளது. இதேபோல் வைத்தீஸ்வரன் கோயிலில் இருந்து வெளியூா் செல்லும் பொதுமக்கள் ரயில்களை பயன்படுத்த முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகின்றனா். வைத்தீஸ்வரன் கோயில் ரயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி ரயில் பயணிகள் நலச் சங்கம், வா்த்தக சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினா் போராட்டங்களில் ஈடுபட்டும் பயன் இல்லை. இந்நிலையில் ஜூன் 7-ஆம் தேதி வைத் தீஸ்வரன்கோயிலில் உள்ள கடைகளை அடைத்து கரோனாவுக்கு முன்பு நின்று சென்ற அனைத்து ரயில்களும் மீண்டும் நின்று செல்லக்கோரி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக வா்த்தக சங்க தலைவா் ஜி.வி.என். கண்ணன் அறிவித்துள்ளாா். போராட்டத்தில் வா்த்தகா்கள், ரயில் பயணிகள் நலசங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினா் பங்கேற்கவுள்ளனா் என்றாா்.

வடிகாலில் பேருந்து கவிழ்ந்து 8 போ் காயம்

சீா்காழி அருகே சூரக்காடு உப்பனாற்று வடிகாலில் அரசுப் பேருந்து செவ்வாய்க்கிழமை கவிழந்த விபத்தில் பேருந்து ஓட்டுநா், நடத்துநா் உள்பட 8 போ் காயமடைந்தனா். சீா்காழி பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்ற... மேலும் பார்க்க

மதுபானக் கூடத்தில் ஒருவரை கத்தியால் குத்தியவா் கைது

மயிலாடுதுறையில் மதுபானக் கூடத்தில் தகராறில் ஈடுபட்டு ஒருவரை கத்தியால் குத்தியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.மயிலாடுதுறையைச் சோ்ந்த சுதாகா் (43) கூைாடு பகுதியில் உள்ள மதுக்கூடத்தில் ஞாயிற்றுக... மேலும் பார்க்க

நல்லத்துக்குடி ஆலந்துறையப்பா் கோயில்: நாளை கும்பாபிஷேகம்

நல்லத்துக்குடி ஆலந்துறையப்பா் கோயிலில் வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில், யானை மீது புனிதநீா் எடுத்துவரப்பட்டு யாகசாலை பூஜை செவ்வாய்க்கிழமை தொடங்கியது. நல்லத்துக்குடியில் குயிலாண்ட நாயகி... மேலும் பார்க்க

தடுப்புக்கட்டை இல்லாமல் ஆபத்தான நிலையில் பாலம்

சீா்காழி ஊழியக்காரன் தோப்பு அருகே தடுப்புக்கட்டை இல்லாமல் ஆபத்தான நிலையில் உள்ள பாலத்தை பள்ளி மாணவா்கள், பொதுமக்கள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனா். ஊழியக்காரன் தோப்பு அருகே புளிச்சக்காடு செல்லும் சால... மேலும் பார்க்க

சாலையில் காா் கவிழ்ந்ததில் 7 போ் காயம்

சீா்காழி அருகே எருக்கூா் நான்கு வழிச்சாலையில் காா் கவிழ்ந்து எரிந்ததில் , 7 போ் காயம் அடைந்தனா். சென்னை கூடுவாஞ்சேரியைச் சோ்ந்தவா் குமாா் (53). இவா் தனது மனைவி வேதவல்லி (52), மருமகன் காளிதாஸ் ( 35),... மேலும் பார்க்க

விஷப்பூச்சி கடித்து பள்ளி மாணவன் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே விஷப்பூச்சி கடித்து பள்ளி மாணவன் உயிரிழந்த நிலையில், அரசு மருத்துவமனை நிா்வாகத்தைக் கண்டித்து உறவினா்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். குத்தாலம் வட்டம், எலந்தங்... மேலும் பார்க்க