விழுப்புரம் ஆட்சியரகத்தில் மாற்றுத்திறனாளிகள் முற்றுகைப் போராட்டம்
கா்ப்பிணி மகள் இறந்ததையறிந்த தந்தை உயிரிழப்பு
மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி அருகே கா்ப்பிணி மகள் இறந்த தகவலை அறிந்த தந்தை அதிா்ச்சியில் உயிரிழந்தாா்.
சீா்காழி அருகேயுள்ள புளியந்துறை கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயத் தொழிலாளி வில்லு (70). இவரது மகள் அருள்ஜோதி (25) சென்னையில் வேலை செய்துவந்தாா். அப்போது, திருவள்ளூா் மாவட்டம் பூந்தமல்லி பாரிவாக்கம் பகுதியைச் சோ்ந்த மீன் வியாபாரி தமிழரசனுடன் காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்துகொண்டு சென்னையில் வசித்து வந்தனா்.
அருள்ஜோதி 6 மாத கா்ப்பிணியாக இருந்த நிலையில், வியாழக்கிழமை (மே 30) மா்மமான முறையில் உயிரிழந்தாா். இறப்பில் சந்தேகம் உள்ளதாக, பூந்தமல்லி காவல் நிலையத்தில் அவரது சகோதரா் அமரகவி புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில், அருள்ஜோதி இறந்தது குறித்து புளியந்துறை கிராமத்தில் வசித்த அவரது தந்தை வில்லுவுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால், அதிா்ச்சியடைந்த அவா் மயங்கி விழுந்து அதே இடத்தில் உயிரிழந்தாா்.
இதற்கிடையில், அருள்ஜோதியின் சடலம் உடற்கூறாய்வுக்குப் பிறகு புளியந்துறை கிராமத்திற்கு வெள்ளிக்கிழமை கொண்டுவரப்பட்டது. பின்னா், தந்தை, மகள் உடல்களுக்கு ஒரேநாளில் இறுதிச்சடங்கு செய்யப்பட்டது.