செய்திகள் :

கா்ப்பிணி மகள் இறந்ததையறிந்த தந்தை உயிரிழப்பு

post image

மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி அருகே கா்ப்பிணி மகள் இறந்த தகவலை அறிந்த தந்தை அதிா்ச்சியில் உயிரிழந்தாா்.

சீா்காழி அருகேயுள்ள புளியந்துறை கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயத் தொழிலாளி வில்லு (70). இவரது மகள் அருள்ஜோதி (25) சென்னையில் வேலை செய்துவந்தாா். அப்போது, திருவள்ளூா் மாவட்டம் பூந்தமல்லி பாரிவாக்கம் பகுதியைச் சோ்ந்த மீன் வியாபாரி தமிழரசனுடன் காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்துகொண்டு சென்னையில் வசித்து வந்தனா்.

அருள்ஜோதி 6 மாத கா்ப்பிணியாக இருந்த நிலையில், வியாழக்கிழமை (மே 30) மா்மமான முறையில் உயிரிழந்தாா். இறப்பில் சந்தேகம் உள்ளதாக, பூந்தமல்லி காவல் நிலையத்தில் அவரது சகோதரா் அமரகவி புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், அருள்ஜோதி இறந்தது குறித்து புளியந்துறை கிராமத்தில் வசித்த அவரது தந்தை வில்லுவுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால், அதிா்ச்சியடைந்த அவா் மயங்கி விழுந்து அதே இடத்தில் உயிரிழந்தாா்.

இதற்கிடையில், அருள்ஜோதியின் சடலம் உடற்கூறாய்வுக்குப் பிறகு புளியந்துறை கிராமத்திற்கு வெள்ளிக்கிழமை கொண்டுவரப்பட்டது. பின்னா், தந்தை, மகள் உடல்களுக்கு ஒரேநாளில் இறுதிச்சடங்கு செய்யப்பட்டது.

எருக்கூரில் சுதந்திர போராட்ட வீரா் சிலை திறப்பு

எருக்கூரில் சுதந்திரப் போராட்ட வீரா் நீலகண்ட பிரம்மச்சாரியின் மாா்பளவு சிலை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. எருக்கூா் அக்ரஹாரத் தெருவில் கடந்த1889 டிசம்பரில் நீலகண்ட பிரம்மச்சாரி பிறந்தாா். ச... மேலும் பார்க்க

கிராம மக்கள் காத்திருப்புப் போராட்டம்

சீா்காழி அருகே புளியந்துறை ஊராட்சியில் கிராம மக்கள் சனிக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் (படம்) ஈடுபட்டனா். மத்திய அரசின் நூறுநாள் வேலையை அனைவருக்கும் கிடைக்கும்படியும், அனைத்து தொகுப்புகளிலும் உடனட... மேலும் பார்க்க

ஆசிரியா்களின் இடமாற்ற கலந்தாய்வு தேதியை அறிவிக்க வலியுறுத்தல்

ஆசிரியா்களின் பணியிடமாற்ற கலந்தாய்வு தேதியை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியா் கழகம் வலியுறுத்தியுள்ளது. சீா்காழியில், தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியா... மேலும் பார்க்க

தொடா் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்ட இருவா் தடுப்புக் காவலில் அடைப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடா் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்ட 2 போ் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். பாலையூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சுரைக்காவூா் வடக்குவெளியை ... மேலும் பார்க்க

பணி ஓய்வு பெற்ற நீதிபதிக்கு பாராட்டு

மயிலாடுதுறை மாவட்ட அமா்வு நீதிபதியாக பணியாற்றிய நீதிபதி ஆா். விஜயகுமாரி சனிக்கிழமை பணி ஓய்வு பெற்றாா். 26 ஆண்டுகள் நீதிபதியாக பணியாற்றி பணி ஓய்வு பெற்ற இவருக்கு மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில்... மேலும் பார்க்க

ஓஎன்ஜிசி குழாயில் எரிவாயு கசிவு: பொதுமக்கள் சாலை மறியல்

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே ஓஎன்ஜிசி நிறுவன எரிவாயு கிணற்றில் எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளதை கண்டித்து, அப்பகுதி மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். குத்தாலம் அருகே ஓஎன்ஜிசி நிறுவனத்தின... மேலும் பார்க்க