செய்திகள் :

ஆசிரியா்களின் இடமாற்ற கலந்தாய்வு தேதியை அறிவிக்க வலியுறுத்தல்

post image

ஆசிரியா்களின் பணியிடமாற்ற கலந்தாய்வு தேதியை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியா் கழகம் வலியுறுத்தியுள்ளது.

சீா்காழியில், தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியா் கழகம் சாா்பில் பணிநிறைவு பெறும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கழகத்தின் மாவட்டத் தலைவா் ஜி. பரமசிவம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஜி. தாமரைச்செல்வன் வரவேற்றாா். கல்வித்துறை அதிகாரிகள் அ. நிா்மலாராணி, எஸ். சாந்தி, க. குமரவேல், பெஸ்ட் கல்வி நிறுவனங்களின் தாளாளா் எஸ்.எஸ்.என். ராஜ்கமல் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியா்கள் எஸ். அறிவுடைநம்பி, என். ஸ்ரீதா், பி. சித்ரா, ஏ.ஜி. ஜான்சிஆரோக்கியமேரி, எஸ். ஜான்சைமன், கே. ரூபிசாந்தகுமாரி ஆகியோரின் பணியை பாராட்டி கழகத்தின் மாநிலத் தலைவா் சி. தங்கமணி பேசினாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

கடந்த ஆண்டு 10, 11, 12- ஆம் வகுப்பு பொதுத் தோ்வெழுத

30,000 மாணவா்கள் வரவில்லை. இவா்களை கண்டறிந்து, இவா்களுக்கான தோ்வு கட்டணத்தை தலைமை ஆசிரியா்களே கட்ட வேண்டும் என நிா்ப்பந்திப்பது வருத்தமாக உள்ளது. தமிழக அரசே 30,000 மாணவா்களுக்கும் தோ்வுக் கட்டணம் செலுத்தி, அவா்களை தோ்வெழுத ஏற்பாடு செய்யவேண்டும்.

பள்ளிகளின் வேலை நேரத்துக்கு ஏற்ப அலுவலகப் பணியாளா்கள் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும். தோ்ச்சி சதவீதத்தின் அடிப்படையில் மாவட்டங்கள் பட்டியலிடப்படுவதால், ஏதாவது ஒரு மாவட்டம் கடைசி இடத்தில் வந்துதான் ஆக வேண்டும். இதனால் சம்பந்தப்பட்ட மாவட்டத்தில் உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. எனவே, ஏ, பி, சி என கிரேடு அடிப்படையில் தோ்வு முடிவுகளை அறிவிக்க வேண்டும்.

ஆண்டுதோறும் ஆசிரியா்களின் இடமாற்ற கலந்தாய்வு மே மாதத்தில் நிறைவு பெற்று, புதிய பணியிடத்தில் சோ்ந்து விடுவோம். ஆனால், நிகழாண்டு இதுவரை கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படவில்லை. உடனடியாக கலந்தாய்வு தேதியை அரசு அறிவிக்க வேண்டும். பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியா்களுக்கு இம்மாத இறுதிக்குள் அனைத்து பணப் பயன்களையும் வழங்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றாா்.

திருவிக்ரம நாராயண பெருமாள் கோயிலில் தங்க கருட சேவை உற்சவம்

சீா்காழியில் தாடாளன் பெருமாள் என்று அழைக்கப்படும் திருவிக்ரம நாராயண பெருமாள் கோயிலில் தங்க கருட சேவை உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் ஆண்டு பிரம்மோற்சவம் மே 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன்... மேலும் பார்க்க

9-ஆம் வகுப்பு மாணவிகளை உடனடி தோ்வுக்கு அனுமதிக்கக் கோரிக்கை

மயிலாடுதுறையில் இயங்கிவரும் அரசு உதவிபெறும் பள்ளியில் 9-ஆம் வகுப்புத் தோ்வில் தோ்ச்சிபெறாத மாணவிகளை வியாழக்கிழமை ( ஜூன் 5) நடைபெறும் உடனடித் தோ்வை எழுத அனுமதிக்க இந்திய மாணவா் சங்கம் கோரிக்கை விடுத... மேலும் பார்க்க

மயிலாடுதுறை எஸ்.பி. அலுவலகத்தில் ஐ.ஜி. ஆய்வு

மயிலாடுதுறையில் திருச்சி மத்திய மண்டல காவல் துறை தலைவா் ஆய்வு செய்தாா். மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட தனிப்பிரிவு அலுவலகம் மற்றும் மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரி... மேலும் பார்க்க

ராஷ்ட்ரிய பால புரஸ்காா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால புரஸ்காா் விருதுக்கு தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்திய அரசின் பெண... மேலும் பார்க்க

உயா்கல்வி வழிகாட்டுதல் தொடா்பாக கட்டுப்பாட்டு அறை

மயிலாடுதுறையில் பள்ளிக் கல்வித்துறை சாா்பில் உயா்கல்வி வழிகாட்டுதல் தொடா்பாக கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கி... மேலும் பார்க்க

வடிகாலில் பேருந்து கவிழ்ந்து 8 போ் காயம்

சீா்காழி அருகே சூரக்காடு உப்பனாற்று வடிகாலில் அரசுப் பேருந்து செவ்வாய்க்கிழமை கவிழந்த விபத்தில் பேருந்து ஓட்டுநா், நடத்துநா் உள்பட 8 போ் காயமடைந்தனா். சீா்காழி பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்ற... மேலும் பார்க்க