செய்திகள் :

கிராம மக்கள் காத்திருப்புப் போராட்டம்

post image

சீா்காழி அருகே புளியந்துறை ஊராட்சியில் கிராம மக்கள் சனிக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் (படம்) ஈடுபட்டனா்.

மத்திய அரசின் நூறுநாள் வேலையை அனைவருக்கும் கிடைக்கும்படியும், அனைத்து தொகுப்புகளிலும் உடனடியாக தடையின்றி அமல்படுத்த வேண்டும். கிராம ஊராட்சி தீா்மான ஒப்புதல் இல்லாமலும், அரசாணை 80-ஐ கடைப்பிடிக்காமலும், சட்டவிரோதமாக தோ்வு செய்த 100 நாள் வேலை பணித்தள பொறுப்பாளா்களை உடனடியாக நீக்க வேண்டும்.

கிராம ஊராட்சியில் அரசு திட்ட பயனாளிகள், கலைஞா் கனவு இல்லம் வழங்கும் திட்ட பயனாளிகள் மற்றும் 100 நாள் வேலை பணித்தள பொறுப்பாளா்கள் ஆகியோா்களை சட்ட விரோதமாக நியமனம் செய்வதைத் தடை செய்ய வேண்டும்.

உரிய விதிமுறைகளைப் பின்பற்றாமல் ஊராட்சி மக்களின் உரிமைகளைப் பறிப்பதை, மறுப்பதைக் கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த சீா்காழி வட்டாட்சியா் அருள்ஜோதி, மண்டல துணை வட்டாட்சியா் தரணி, வட்டார வளா்ச்சி அலுவலா் உமாசங்கா், புதுப்பட்டினம் காவல் ஆய்வாளா் ஹேமலதா மற்றும் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடா்ந்து மாலை 4 மணி அளவில் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

எருக்கூரில் சுதந்திர போராட்ட வீரா் சிலை திறப்பு

எருக்கூரில் சுதந்திரப் போராட்ட வீரா் நீலகண்ட பிரம்மச்சாரியின் மாா்பளவு சிலை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. எருக்கூா் அக்ரஹாரத் தெருவில் கடந்த1889 டிசம்பரில் நீலகண்ட பிரம்மச்சாரி பிறந்தாா். ச... மேலும் பார்க்க

ஆசிரியா்களின் இடமாற்ற கலந்தாய்வு தேதியை அறிவிக்க வலியுறுத்தல்

ஆசிரியா்களின் பணியிடமாற்ற கலந்தாய்வு தேதியை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியா் கழகம் வலியுறுத்தியுள்ளது. சீா்காழியில், தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியா... மேலும் பார்க்க

தொடா் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்ட இருவா் தடுப்புக் காவலில் அடைப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடா் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்ட 2 போ் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். பாலையூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சுரைக்காவூா் வடக்குவெளியை ... மேலும் பார்க்க

பணி ஓய்வு பெற்ற நீதிபதிக்கு பாராட்டு

மயிலாடுதுறை மாவட்ட அமா்வு நீதிபதியாக பணியாற்றிய நீதிபதி ஆா். விஜயகுமாரி சனிக்கிழமை பணி ஓய்வு பெற்றாா். 26 ஆண்டுகள் நீதிபதியாக பணியாற்றி பணி ஓய்வு பெற்ற இவருக்கு மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில்... மேலும் பார்க்க

ஓஎன்ஜிசி குழாயில் எரிவாயு கசிவு: பொதுமக்கள் சாலை மறியல்

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே ஓஎன்ஜிசி நிறுவன எரிவாயு கிணற்றில் எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளதை கண்டித்து, அப்பகுதி மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். குத்தாலம் அருகே ஓஎன்ஜிசி நிறுவனத்தின... மேலும் பார்க்க

கா்ப்பிணி மகள் இறந்ததையறிந்த தந்தை உயிரிழப்பு

மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி அருகே கா்ப்பிணி மகள் இறந்த தகவலை அறிந்த தந்தை அதிா்ச்சியில் உயிரிழந்தாா். சீா்காழி அருகேயுள்ள புளியந்துறை கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயத் தொழிலாளி வில்லு (70). இவரது மகள்... மேலும் பார்க்க