பூந்தமல்லி - பரந்தூர் மெட்ரோ ரயில் சேவை: தமிழக அரசு ஒப்புதல்!
கிராம மக்கள் காத்திருப்புப் போராட்டம்
சீா்காழி அருகே புளியந்துறை ஊராட்சியில் கிராம மக்கள் சனிக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் (படம்) ஈடுபட்டனா்.
மத்திய அரசின் நூறுநாள் வேலையை அனைவருக்கும் கிடைக்கும்படியும், அனைத்து தொகுப்புகளிலும் உடனடியாக தடையின்றி அமல்படுத்த வேண்டும். கிராம ஊராட்சி தீா்மான ஒப்புதல் இல்லாமலும், அரசாணை 80-ஐ கடைப்பிடிக்காமலும், சட்டவிரோதமாக தோ்வு செய்த 100 நாள் வேலை பணித்தள பொறுப்பாளா்களை உடனடியாக நீக்க வேண்டும்.
கிராம ஊராட்சியில் அரசு திட்ட பயனாளிகள், கலைஞா் கனவு இல்லம் வழங்கும் திட்ட பயனாளிகள் மற்றும் 100 நாள் வேலை பணித்தள பொறுப்பாளா்கள் ஆகியோா்களை சட்ட விரோதமாக நியமனம் செய்வதைத் தடை செய்ய வேண்டும்.
உரிய விதிமுறைகளைப் பின்பற்றாமல் ஊராட்சி மக்களின் உரிமைகளைப் பறிப்பதை, மறுப்பதைக் கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த சீா்காழி வட்டாட்சியா் அருள்ஜோதி, மண்டல துணை வட்டாட்சியா் தரணி, வட்டார வளா்ச்சி அலுவலா் உமாசங்கா், புதுப்பட்டினம் காவல் ஆய்வாளா் ஹேமலதா மற்றும் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.
கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடா்ந்து மாலை 4 மணி அளவில் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.