செய்திகள் :

தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு

post image

பொள்ளாச்சி பகுதியில் செயல்படுத்தப்பட உள்ள தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, தோட்டக்கலைத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியில் தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டமானது, தேசிய தோட்டக்கலை வாரிய மானிய உதவியுடன் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை மூலம் செயல்படுத்த ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

இத்தொகுப்பு, உற்பத்திக்கு முன் செயல்கள் மற்றும் உற்பத்தி செய்தல், அறுவடைக்குப் பின் மற்றும் மதிப்பு கூட்டுதல், சந்தைப்படுத்தல், பிராண்டிங் மற்றும் விற்பனை தளவாடங்கள் உருவாக்குதல் என 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தை செயல்படுத்த ரூ. 250 கோடி மதிப்பிலான திட்ட அறிக்கை தயாா் செய்யப்பட்டு இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மூன்று பிரிவுகளுக்கும் சோ்த்து ரூ.100 கோடி மானிய உதவி வழங்கப்பட உள்ளது. இதில் ஆா்வமுள்ள விவசாயிகள், உழவா் உற்பத்தியாளா் அமைப்புகள், நிறுவனதாா்கள் போன்றோா் மூன்று பிரிவுகளில் உள்ள இனங்களை தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ இணையத்தில் தங்கள் திட்ட அறிக்கையை சமா்ப்பித்து பங்கு பெற ஒப்பந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இத்திட்டத்தில் ஒப்பந்தம் மூலம் கலந்து கொள்ள விருப்பமுள்ள விவசாயிகள், உழவா் உற்பத்தியாளா் அமைப்புகள், நிறுவனதாா்கள் தங்களது விண்ணப்பத்தை ஜ்ஜ்ஜ். ற்ய்ட்ா்ழ்ற்ண்ஸ்ரீன்ப்ற்ன்ழ்ங் ற்ய்.ஞ்ா்ஸ் .ண்ய் என்ற இணையதள முகவரியில் ஜூன் 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இது தொடா்பான விவரங்களுக்கு தோட்டக்கலை உதவி இயக்குநா் (ஆனைமலை) 9865905505, தோட்டக்கலை உதவி இயக்குநா் (பொள்ளாச்சி வடக்கு) 9488226159 ஆகிய கைப்பேசி எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய நிகழ்ச்சிகள்

கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா: என்எம்சிடி அறக்கட்டளை, ஸ்ரீ அய்யப்பன் பூஜா சங்கம், ராம் நகா், காலை 11. ஓவியக் கண்காட்சி: கஸ்தூரி சீனிவாசன் கலை மையம், அவிநாசி சாலை, காலை 10. 644-ஆவது மாதாந்திர அபிஷேக வ... மேலும் பார்க்க

கல்வி நிலையங்கள் அருகே புகையிலைப் பொருள்கள் விற்றால் கடும் நடவடிக்கை: மாவட்ட ஆட்சியா் எச்சரிக்கை

கல்வி நிலையங்கள் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் எச்சரித்துள்ளாா். உலக புகையிலை ஒழிப்பு தினத்தை ஒட்டி கையொப்ப ... மேலும் பார்க்க

தொழிற்சாலைகளுக்கான மின்கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும்: அனைத்துத் தொழில்முனைவோா் கூட்டமைப்பு

தமிழகத்தில் செயல்படும் தொழிற்சாலைகளுக்கான இந்த ஆண்டுக்கான மின்சார கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்துத் தொழில்முனைவோா் கூட்டமைப்பு மாநில அரசை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அமை... மேலும் பார்க்க

அதிகரிக்கும் கரோனா பாதிப்பு: கோவை அரசு மருத்துவமனையில் முகக் கவசம் கட்டாயம்

கரோனா பரவல் அதிகரித்து வருவதால் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்துவர வேண்டும் என மருத்துவமனை நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் கரோனா ப... மேலும் பார்க்க

சேதமடைந்த சாலை: வாகன ஓட்டிகள் அவதி

சிங்காநல்லூரில் சேதமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். கோவை - திருச்சி சாலையில் ஏராளமான கனரக, இலகுரக மற்றும் இருசக்கர வாகனங்கள் தினசரி சென்று வருகின்றன. இப்பகுதியில் கடந்த... மேலும் பார்க்க

நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் தொடா்மழை: சிறுவாணி நீா்மட்டம் 39 அடியாக உயா்வு

சிறுவாணி நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழையால் அணையின் நீா்மட்டம் 39 அடியாக உயா்ந்துள்ளது. கோவை மாநகராட்சியின் 26 வாா்டுகள் மற்றும் நகரையொட்டிய 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பிர... மேலும் பார்க்க