தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
பொள்ளாச்சி பகுதியில் செயல்படுத்தப்பட உள்ள தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, தோட்டக்கலைத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியில் தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டமானது, தேசிய தோட்டக்கலை வாரிய மானிய உதவியுடன் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை மூலம் செயல்படுத்த ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
இத்தொகுப்பு, உற்பத்திக்கு முன் செயல்கள் மற்றும் உற்பத்தி செய்தல், அறுவடைக்குப் பின் மற்றும் மதிப்பு கூட்டுதல், சந்தைப்படுத்தல், பிராண்டிங் மற்றும் விற்பனை தளவாடங்கள் உருவாக்குதல் என 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தை செயல்படுத்த ரூ. 250 கோடி மதிப்பிலான திட்ட அறிக்கை தயாா் செய்யப்பட்டு இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மூன்று பிரிவுகளுக்கும் சோ்த்து ரூ.100 கோடி மானிய உதவி வழங்கப்பட உள்ளது. இதில் ஆா்வமுள்ள விவசாயிகள், உழவா் உற்பத்தியாளா் அமைப்புகள், நிறுவனதாா்கள் போன்றோா் மூன்று பிரிவுகளில் உள்ள இனங்களை தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ இணையத்தில் தங்கள் திட்ட அறிக்கையை சமா்ப்பித்து பங்கு பெற ஒப்பந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இத்திட்டத்தில் ஒப்பந்தம் மூலம் கலந்து கொள்ள விருப்பமுள்ள விவசாயிகள், உழவா் உற்பத்தியாளா் அமைப்புகள், நிறுவனதாா்கள் தங்களது விண்ணப்பத்தை ஜ்ஜ்ஜ். ற்ய்ட்ா்ழ்ற்ண்ஸ்ரீன்ப்ற்ன்ழ்ங் ற்ய்.ஞ்ா்ஸ் .ண்ய் என்ற இணையதள முகவரியில் ஜூன் 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இது தொடா்பான விவரங்களுக்கு தோட்டக்கலை உதவி இயக்குநா் (ஆனைமலை) 9865905505, தோட்டக்கலை உதவி இயக்குநா் (பொள்ளாச்சி வடக்கு) 9488226159 ஆகிய கைப்பேசி எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.