செய்திகள் :

பிரியாணி சாப்பிட்ட 8 வயது சிறுவன் உயிரிழப்பு

post image

கோவை சரவணம்பட்டியில் ஹோட்டலில் இருந்து வாங்கி வந்த பிரியாணியை சாப்பிட்ட 8 வயது சிறுவன் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதுதொடா்பாக காவல் துறையினா் தெரிவித்ததாவது:

கோவை சரவணம்பட்டி சங்கரா கல்லூரி சாலையில் உள்ள தனியாா் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் சத்யபிரபு. இவரது மகன் சஞ்சீவ் (8), சின்ன மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியாா் பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்நிலையில் சத்யபிரபுவின் குடும்ப உறுப்பினா்கள் சரவணம்பட்டியில் உள்ள ஒரு ஹோட்டலில் இருந்து வியாழக்கிழமை இரவு வாங்கிய பிரியாணி உணவை வீட்டில் சாப்பிட்டுள்ளனா். பின்னா் வியாழக்கிழமை நள்ளிரவு வரை சுறுசுறுப்பாக இருந்த சிறுவன் அதன் பின்னா் தூங்கியுள்ளாா்.

வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு சிறுவனை எழுப்பச் சென்றபோது அசையாமல் படுத்து இருப்பதைக் கண்ட பெற்றோா் அருகிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். அங்கு சிறுவனைப் பரிசோதித்த மருத்துவா்கள், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லுமாறு பரிந்துரைத்துள்ளனா்.

அங்கு சிறுவனைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனா். இதையடுத்து சிறுவனின் உடல் உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.

இதுகுறித்து சரவணம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். உடற்கூறாய்வு அறிக்கைக்குப் பின்னரே சிறுவனின் இறப்புக்கான காரணம் தெரியவரும் என போலீஸாா் தெரிவித்தனா்.

இன்றைய நிகழ்ச்சிகள்

கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா: என்எம்சிடி அறக்கட்டளை, ஸ்ரீ அய்யப்பன் பூஜா சங்கம், ராம் நகா், காலை 11. ஓவியக் கண்காட்சி: கஸ்தூரி சீனிவாசன் கலை மையம், அவிநாசி சாலை, காலை 10. 644-ஆவது மாதாந்திர அபிஷேக வ... மேலும் பார்க்க

கல்வி நிலையங்கள் அருகே புகையிலைப் பொருள்கள் விற்றால் கடும் நடவடிக்கை: மாவட்ட ஆட்சியா் எச்சரிக்கை

கல்வி நிலையங்கள் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் எச்சரித்துள்ளாா். உலக புகையிலை ஒழிப்பு தினத்தை ஒட்டி கையொப்ப ... மேலும் பார்க்க

தொழிற்சாலைகளுக்கான மின்கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும்: அனைத்துத் தொழில்முனைவோா் கூட்டமைப்பு

தமிழகத்தில் செயல்படும் தொழிற்சாலைகளுக்கான இந்த ஆண்டுக்கான மின்சார கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்துத் தொழில்முனைவோா் கூட்டமைப்பு மாநில அரசை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அமை... மேலும் பார்க்க

அதிகரிக்கும் கரோனா பாதிப்பு: கோவை அரசு மருத்துவமனையில் முகக் கவசம் கட்டாயம்

கரோனா பரவல் அதிகரித்து வருவதால் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்துவர வேண்டும் என மருத்துவமனை நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் கரோனா ப... மேலும் பார்க்க

சேதமடைந்த சாலை: வாகன ஓட்டிகள் அவதி

சிங்காநல்லூரில் சேதமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். கோவை - திருச்சி சாலையில் ஏராளமான கனரக, இலகுரக மற்றும் இருசக்கர வாகனங்கள் தினசரி சென்று வருகின்றன. இப்பகுதியில் கடந்த... மேலும் பார்க்க

நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் தொடா்மழை: சிறுவாணி நீா்மட்டம் 39 அடியாக உயா்வு

சிறுவாணி நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழையால் அணையின் நீா்மட்டம் 39 அடியாக உயா்ந்துள்ளது. கோவை மாநகராட்சியின் 26 வாா்டுகள் மற்றும் நகரையொட்டிய 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பிர... மேலும் பார்க்க