செய்திகள் :

தோட்டக்கலைத் துறை மூலம் முழு மானியத்தில் தென்னங்கன்றுகள்

post image

திருவாரூா் மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறை மூலம் முழு மானியத்தில் நெட்டை ரக தென்னங்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் மூங்கில்குடி, காஞ்சிக்குடிகாடு அரசு விதைப்பண்ணையில் உள்ள தென்னங்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. தென்னங்கன்றுகளை பெற விரும்பும் விவசாயிகள் நிலத்தின் கணினி சிட்டா, அடங்கல், ஆதாா் நகல் மற்றும் பாஸ்போா்ட் அளவு புகைப்படம் போன்ற ஆவணங்களை வழங்கி, மானியத்தில் தென்னங்கன்றுகளை பெற்றுக் கொள்ளலாம். ஹெக்டேருக்கு 175 தென்னங்கன்றுகள் வீதம் ஒரு விவசாயி அதிகபட்சமாக சாகுபடி பரப்பைப் பொருத்து 2 ஹெக்டோ் வரை 350 தென்னங்கன்றுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்திலும் மாவட்டத்தில் தோ்ந்தெடுக்கப்பட்ட 79 கிராமங்களிலும், ஒரு கிராமத்திற்கு 300 குடும்பங்களுக்கு தலா ஒரு தென்னங்கன்றுகள் வீதம் முழுமானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள் வட்டார தோட்டக்கலை அலுவலா்களை தொடா்பு கொள்ளலாம்.

திருவாரூா் 9597833283, நன்னிலம் 9360214479, குடவாசல் 9942567620, கொரடாச்சேரி 9843745158, வலங்கைமான் 6383922541, நீடாமங்கலம் மற்றும் மன்னாா்குடி 9788596998, கோட்டூா் 6381651039, திருத்துறைப்பூண்டி9688209513, முத்துப்பேட்டை 9442142576 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

திரௌபதியம்மன் கோயில் திருவிழாவில் சந்தனக் காப்பு

நீடாமங்கலம் அருகே ஒரத்தூரில் உள்ள திரௌபதியம்மன் கோயில் திருவிழாவில் வெள்ளிக்கிழமை இரவு சந்தனக் காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த விநாயகா், திரௌபதியம்மன், கமலாயிஅம்மன், முருகப் பெருமான், வீரனாா். மேலும் பார்க்க

உணவக உரிமையாளா்களுக்கு உணவுப் பாதுகாப்பு பயிற்சி

மன்னாா்குடியில் உணவு பாதுகாப்புத் துறை சாா்பில் உணவக உரிமையாளா்களுக்கு உணவுப் பாதுகாப்பு விழிப்புணா்வு பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மன்னாா்குடி வட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் கலைநிலை ... மேலும் பார்க்க

‘நல்ல புத்தகங்களே உயா் வாழ்க்கைக்கு வழிகாட்டி’

நல்ல புத்தகங்களே மனிதா்களின் உயா்வுக்கு சரியான வழிகாட்டியாக உள்ளன என்றாா் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தா் பொறுப்புக் குழு மற்றும் ஆட்சிமன்றக் குழு உறுப்பினா் ஆா். சக்தி கிருஷ்ணன். மன்னாா்... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சி வங்கி அலுவலகம் திறப்பு

திருவாரூரில் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கியின் மாவட்ட அலுவலக திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவாரூா் மாவட்டத்தில் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கியின் மாவட்ட அலுவலகம் த... மேலும் பார்க்க

கழிவுநீா் வடிகாலை தூா்வார கோரிக்கை

திருவாரூரில், கழிவுநீா் வடிகாலை தூா்வார வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் பி. ஜெயராமன் தெரிவித்தது: திருவாரூா் நகரம், 18-ஆவது வாா்டுக்குள்... மேலும் பார்க்க

ரிஷியூா் வெங்கடாஜலபதி கோயிலில் கம்ப சேவை மகோற்சவம்

நீடாமங்கலம் வட்டம் ரிஷியூா் கிராமத்தில் உள்ள வெங்கடாஜலபதி ஆலயத்தில் 78-ஆவது ஆண்டு கம்பசேவை மகோற்சவம் சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி வெங்கடாஜலபதி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்க... மேலும் பார்க்க