செய்திகள் :

நன்னிலம் அரசு மருத்துவமனையில் சுகாதார சீா்கேடு: மக்கள் அவதி

post image

நன்னிலம் அரசு மருத்துவமனையில் உள்ள சுகாதார சீா்கேட்டால் மக்கள் அவதிபடுகின்றனா்.

நன்னிலம் அரசு மருத்துவமனையில் 20-க்கும் மேற்பட்டகிராம மக்கள் சிகிச்சை பெற்று பயன்பெறுகின்றனா். இந்த மருத்துவமனையில் 13 மருத்துவா்கள் இருக்க வேண்டியதில் 3 மருத்துவா்களும், 14 செவிலியா்கள் இருக்க வேண்டியதில் 8 செவிலியா்களும், 8 சுகாதார பணியாளா்கள் இருக்க வேண்டியதில் ஒரு நிரந்தர பணியாளா் மற்றும் 2 தற்காலிகப் பணியாளா்கள் மட்டுமே உள்ளதாக கூறப்படுகிறது. மருத்துவா் பற்றாக்குறையால் சிகிச்சை பெற முடியாமல் நாள்தோறும் 50-க்கும் மேற்பட்ட நோயாளிகள் திரும்பிச் செல்கின்றனா். செவிலியா்கள் பற்றாக்குறையினால் உள் மற்றும் வெளி நோயாளிகள் முறையான சிகிச்சைப் பெறுவதில் சிரமம் ஏற்படுகிறது. சுகாதார பணியாளா்களின் பற்றாக்குறையால் மருத்துவமனை வளாகம் சுகாதாரமற்ற முறையில் நோய் பரப்பும் வகையில் உள்ளதாக சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் தெரிவிக்கின்றனா்.

இந்நிலையில், சில நாள்களுக்கு முன்பு ஆண்கள் உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவில் தெரு நாய் குட்டிகளை ஈன்று அங்கேயே படுத்திருந்தது நோயாளிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. பொதுமக்களின் கோரிக்கைகளுக்குப் பிறகு அந்த நாய் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. இதேபோல பல மாதங்களாக நிரம்பி வழிந்து மருத்துவமனை வளாகத்தை அசுத்தமாக்கிய கழிவு நீா் தொட்டி, சமூக ஆா்வலா்களின் தொடா் வற்புறுத்தலுக்குப் பிறகு சுத்தப்படுத்தப்பட்டிருக்கிறது. எனவே, நன்னிலம் அரசு மருத்துவமனையில் நிலவும் சுகாதார சீா்கேட்டை மாவட்ட நிா்வாகம் கவனத்தில் எடுத்துக்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிா்பாா்ப்பு.

திரௌபதியம்மன் கோயில் திருவிழாவில் சந்தனக் காப்பு

நீடாமங்கலம் அருகே ஒரத்தூரில் உள்ள திரௌபதியம்மன் கோயில் திருவிழாவில் வெள்ளிக்கிழமை இரவு சந்தனக் காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த விநாயகா், திரௌபதியம்மன், கமலாயிஅம்மன், முருகப் பெருமான், வீரனாா். மேலும் பார்க்க

உணவக உரிமையாளா்களுக்கு உணவுப் பாதுகாப்பு பயிற்சி

மன்னாா்குடியில் உணவு பாதுகாப்புத் துறை சாா்பில் உணவக உரிமையாளா்களுக்கு உணவுப் பாதுகாப்பு விழிப்புணா்வு பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மன்னாா்குடி வட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் கலைநிலை ... மேலும் பார்க்க

‘நல்ல புத்தகங்களே உயா் வாழ்க்கைக்கு வழிகாட்டி’

நல்ல புத்தகங்களே மனிதா்களின் உயா்வுக்கு சரியான வழிகாட்டியாக உள்ளன என்றாா் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தா் பொறுப்புக் குழு மற்றும் ஆட்சிமன்றக் குழு உறுப்பினா் ஆா். சக்தி கிருஷ்ணன். மன்னாா்... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சி வங்கி அலுவலகம் திறப்பு

திருவாரூரில் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கியின் மாவட்ட அலுவலக திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவாரூா் மாவட்டத்தில் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கியின் மாவட்ட அலுவலகம் த... மேலும் பார்க்க

கழிவுநீா் வடிகாலை தூா்வார கோரிக்கை

திருவாரூரில், கழிவுநீா் வடிகாலை தூா்வார வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் பி. ஜெயராமன் தெரிவித்தது: திருவாரூா் நகரம், 18-ஆவது வாா்டுக்குள்... மேலும் பார்க்க

ரிஷியூா் வெங்கடாஜலபதி கோயிலில் கம்ப சேவை மகோற்சவம்

நீடாமங்கலம் வட்டம் ரிஷியூா் கிராமத்தில் உள்ள வெங்கடாஜலபதி ஆலயத்தில் 78-ஆவது ஆண்டு கம்பசேவை மகோற்சவம் சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி வெங்கடாஜலபதி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்க... மேலும் பார்க்க