TVK: "என் இயல்பை மீறிய வார்த்தைகள்; வருந்துகிறேன்" - சர்ச்சை வீடியோவுக்கு ஆதவ் வ...
நடமாடும் மண் பரிசோதனை ஆய்வகம்
கோவையில் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் நடமாடும் மண் பரிசோதனை ஆய்வகத்தை ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு நடமாடும் மண் பரிசோதனை ஆய்வக வாகனங்கள் மாநில அரசு மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோவையில் ரூ.75 லட்சம் மதிப்பில் நடமாடும் மண் பரிசோதனை ஆய்வக வாகனத்தை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
அப்போது, வாகனத்தில் உள்ள பரிசோதனைக் கருவிகள் குறித்து வேளாண்மைத் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். இதுகுறித்து, வேளாண்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘இந்த வாகனம் எந்தெந்த கிராமங்களுக்கு செல்கிறது என்ற தகவல்கள் முன்கூட்டியே அந்தந்த கிராம விவசாயிகளுக்கு தெரிவிக்கப்படும். மண் பரிசோதனைக்கான கட்டணமாக ரூ.30 வசூலிக்கப்படும். பரிசோதனை முடிவுகள், சோதனை மேற்கொண்ட அன்று மாலைக்குள் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்படும் என்றனா்.