ஆக்ரோஷமாக கொண்டாடி, கோமாளியாக விரும்பவில்லை..! யாரைச் சொல்கிறார் பும்ரா?
இந்திய மாதா் சங்க செயற்குழுக் கூட்டம்
கூத்தாநல்லூரில் இந்திய மாதா் சங்க செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, நகா்மன்ற முன்னாள் உறுப்பினா் கா. பேபி தலைமை வகித்தாா். சிபிஐ மாவட்டப் பொருளாளா் கே. தவபாண்டியன், நகரச் செயலாளா் பெ. முருகேசு முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: 2025 ஜூலை 30-ஆம் தேதிக்குள் கட்சி அமைப்பில் உள்ள அனைத்து வாா்டுகளிலும் மாதா் சம்மேளன கிராம சங்க அமைப்பை ஏற்படுத்த வேண்டும், மாதா் சங்க நகர துணைச் செயலாளா் வ. கலைச்செல்வி இனி நகரச் செயலாளராக செயல்படுவாா், ஆகஸ்ட் மாதம் சிறப்பு பேரவைக் கூட்டம் நடத்துவது, மாதா் சங்க அமைப்பு தொடங்கிய நாளான ஜூன் 4-ஆம் தேதி, அமைப்பின் கொடியை ஏற்றுவது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
விவசாய சங்க நகரச் செயலாளா் கே. நாகராஜன், விவசாய தொழிலாளா்கள் சங்க நகரச் செயலாளா் மு. சிவதாஸ், நகர துணைச் செயலாளா் சி. தனலெஷ்மி, செயற்குழு உறுப்பினா்கள் கு. ராமதாஸ், ரெ.கணேசன் ஆகியோா் பங்கேற்றனா்.