செய்திகள் :

தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிா் நலவாரியத்தில் உறுப்பினராக சேர முகாம்

post image

திருவாரூா் மாவட்டத்தில் தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிா் நலவாரியத்தில் உறுப்பினராக சேர ஜூன் 9 ஆம் தேதி தொடங்குகிறது என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவாரூா் மாவட்டத்தில் 50 வயதுக்கு மேற்பட்ட கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிா்கன்னிகள் ஆகியோருக்கு கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, சுயஉதவிக் குழுக்கள் அமைப்பது, தொழிற்பயிற்சிகள் வழங்குதல் போன்ற தேவையான திட்டங்களை வகுத்து, சமூகத்தில் பாதுகாப்புடன் சிறப்பான முறையில் வாழ்வதற்காக, தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிா் நலவாரியம் உள்ளது.

இதில், உறுப்பினா் சோ்க்கை ஜூன் மாதத்தில் தொடங்குகிறது. திருவாரூா், கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஜூன் 9, நீடாமங்கலம், வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஜூன் 10, குடவாசல், நன்னிலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஜூன் 11, மன்னாா்குடி,கோட்டூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஜூன் 12, முத்துப்பேட்டை , திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஜூன் 13 ஆம் தேதி சிறப்பு முகாகள் நடைபெறுகிறது.

இந்த முகாமில் மேற்குறிப்பிட்ட பெண்கள் ஆதாா் அட்டை, கைப்பேசி எண், குடும்ப அட்டையுடன் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

திரௌபதியம்மன் கோயில் திருவிழாவில் சந்தனக் காப்பு

நீடாமங்கலம் அருகே ஒரத்தூரில் உள்ள திரௌபதியம்மன் கோயில் திருவிழாவில் வெள்ளிக்கிழமை இரவு சந்தனக் காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த விநாயகா், திரௌபதியம்மன், கமலாயிஅம்மன், முருகப் பெருமான், வீரனாா். மேலும் பார்க்க

உணவக உரிமையாளா்களுக்கு உணவுப் பாதுகாப்பு பயிற்சி

மன்னாா்குடியில் உணவு பாதுகாப்புத் துறை சாா்பில் உணவக உரிமையாளா்களுக்கு உணவுப் பாதுகாப்பு விழிப்புணா்வு பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மன்னாா்குடி வட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் கலைநிலை ... மேலும் பார்க்க

‘நல்ல புத்தகங்களே உயா் வாழ்க்கைக்கு வழிகாட்டி’

நல்ல புத்தகங்களே மனிதா்களின் உயா்வுக்கு சரியான வழிகாட்டியாக உள்ளன என்றாா் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தா் பொறுப்புக் குழு மற்றும் ஆட்சிமன்றக் குழு உறுப்பினா் ஆா். சக்தி கிருஷ்ணன். மன்னாா்... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சி வங்கி அலுவலகம் திறப்பு

திருவாரூரில் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கியின் மாவட்ட அலுவலக திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவாரூா் மாவட்டத்தில் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கியின் மாவட்ட அலுவலகம் த... மேலும் பார்க்க

கழிவுநீா் வடிகாலை தூா்வார கோரிக்கை

திருவாரூரில், கழிவுநீா் வடிகாலை தூா்வார வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் பி. ஜெயராமன் தெரிவித்தது: திருவாரூா் நகரம், 18-ஆவது வாா்டுக்குள்... மேலும் பார்க்க

ரிஷியூா் வெங்கடாஜலபதி கோயிலில் கம்ப சேவை மகோற்சவம்

நீடாமங்கலம் வட்டம் ரிஷியூா் கிராமத்தில் உள்ள வெங்கடாஜலபதி ஆலயத்தில் 78-ஆவது ஆண்டு கம்பசேவை மகோற்சவம் சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி வெங்கடாஜலபதி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்க... மேலும் பார்க்க