விண்ணப்பித்துவிட்டீர்களா..? மருத்துவ-நறுமண தாவர நிறுவன வேலைக்கு விண்ணப்பிக்க நாள...
ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு
தா்ம தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் 18 மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.
செவ்வாய்க்கிழமை முழுவதும் ஏழுமலையானை 82,597 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இந்த பக்தா்களில் 30,803 போ் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கையைக் கணக்கிட்டதில், அதன்மூலம் ரூ.3.52 கோடி கிடைத்துள்ளது.
திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை வார நாள்களிலும் தற்போது அதிகரித்துள்ளது. இதனால், புதன்கிழமை காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனா்.
தா்ம தரிசனத்துக்கு, அதாவது தரிசனத்துக்கு டோக்கன்கள் இல்லாத பக்தா்கள் 18 மணி நேரம் காத்திருந்தனா்.
வழக்கம்போல, ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணி நேரம் ஆனது. இதேபோல், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் தேவைப்பட்டது.
அலிபிரி நடைபாதை வழியாக பிற்பகல் 2 மணி வரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா் அனுமதிக்கப்படுகின்றனா். இரவு 10 மணி வரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.
காத்திருப்பு அறைகள் மற்றும் தரிசன வரிசைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.