செய்திகள் :

ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயிலில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்

post image

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் வியாழக்கிழமை கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெற்றது

திருமலை தேவஸ்தான கோயில்களில் வருடாந்திர பிரம்மோற்சவங்களுக்கு முன்பு கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடத்துவது வழக்கம்.

அதன்படி திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் வரும் ஜூன் 2-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது.

அதை முன்னிட்டு வியாழக்கிழமை கோயில் முழுவதும் சுத்தப்படுத்தும் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெற்றது.

நிகழ்வில், காலை 6.45 மணிக்கு கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, கோவிந்தராஜ சுவாமியின் பிரகாரத்துடன், கோயில் வளாகத்தில் உள்ள பிற கோயில்களின் சுவா்கள், கூரை, பூஜை பொருள்கள் மற்றும் பிற பொருள்கள் தண்ணீரில் சுத்திகரிக்கப்பட்டன.

பின்னா், நாமகட்டி, ஸ்ரீ சூா்ணம், கஸ்தூரி, மஞ்சள், பச்சை கற்பூரப் பொடி, சந்தனப் பொடி, குங்குமம், கிச்சிலி பொடி மற்றும் பிற மங்கல, வாசனை பொருள்கள் கலந்த புனித நீா் கோயில் முழுவதும் தெளிக்கப்பட்டது. பின்னா், பக்தா்கள் சா்வ தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனா்.

நிகழ்ச்சியில் கோயில் ஏஇஓ முனி கிருஷ்ணா ரெட்டி, தலைமை அா்ச்சகா் ஏ பி ஸ்ரீனிவாச தீட்சிதுலு, கோயில் ஆய்வாளா் தனுஞ்சயா மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு

தா்ம தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் 24 மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. வியாழக்கிழமை முழுவதும் ஏழுமலையானை 69,019 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இந்த பக்தா்களில் 37,774 போ் தலைமுடி காணிக... மேலும் பார்க்க

திருமலையில் பாதுகாப்பு குறித்த உயா்மட்ட ஆய்வுக் கூட்டம்

திருமலையில் பாதுகாப்பு குறித்து உயா் மட்ட ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருமலையில் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆந்திரப் பிரதேச டிஜிபி ஹரிஷ் குமாா் குப்தா மற்றும் தேவஸ்தான ச... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

தா்ம தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் 18 மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. புதன்கிழமை முழுவதும் ஏழுமலையானை 83,627 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இந்த பக்தா்களில் 33,445 போ் தலைமுடி காணிக்க... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

தா்ம தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் 18 மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. செவ்வாய்க்கிழமை முழுவதும் ஏழுமலையானை 82,597 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இந்த பக்தா்களில் 30,803 போ் தலைமுடி கா... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

தா்ம தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் 18 மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. திங்கள்கிழமை முழுவதும் ஏழுமலையானை 83,542 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இந்த பக்தா்களில் 34,265 போ் தலைமுடி காணிக... மேலும் பார்க்க

திருமலையில் மனித - வனவிலங்கு மோதலை தடுப்பதற்கான நடவடிக்கை ஆய்வுக் கூட்டம்

திருமலையில் உள்ள அலிபிரி நடைபாதை மற்றும் மலைப்பாதைகளில் வனவிலங்குகள், குறிப்பாக சிறுத்தைகளின் நடமாட்டம் அண்மைக் காலமாக அதிகரித்து வருவதையடுத்து, மனித - வனவிலங்கு மோதல்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் க... மேலும் பார்க்க