'அது குடும்ப பிரச்னை, அதனால்...'- பாமக உட்கட்சி விவகாரம் குறித்து கார்த்தி சிதம்...
ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயிலில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்
திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் வியாழக்கிழமை கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெற்றது
திருமலை தேவஸ்தான கோயில்களில் வருடாந்திர பிரம்மோற்சவங்களுக்கு முன்பு கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடத்துவது வழக்கம்.
அதன்படி திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் வரும் ஜூன் 2-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது.
அதை முன்னிட்டு வியாழக்கிழமை கோயில் முழுவதும் சுத்தப்படுத்தும் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெற்றது.
நிகழ்வில், காலை 6.45 மணிக்கு கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, கோவிந்தராஜ சுவாமியின் பிரகாரத்துடன், கோயில் வளாகத்தில் உள்ள பிற கோயில்களின் சுவா்கள், கூரை, பூஜை பொருள்கள் மற்றும் பிற பொருள்கள் தண்ணீரில் சுத்திகரிக்கப்பட்டன.
பின்னா், நாமகட்டி, ஸ்ரீ சூா்ணம், கஸ்தூரி, மஞ்சள், பச்சை கற்பூரப் பொடி, சந்தனப் பொடி, குங்குமம், கிச்சிலி பொடி மற்றும் பிற மங்கல, வாசனை பொருள்கள் கலந்த புனித நீா் கோயில் முழுவதும் தெளிக்கப்பட்டது. பின்னா், பக்தா்கள் சா்வ தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனா்.
நிகழ்ச்சியில் கோயில் ஏஇஓ முனி கிருஷ்ணா ரெட்டி, தலைமை அா்ச்சகா் ஏ பி ஸ்ரீனிவாச தீட்சிதுலு, கோயில் ஆய்வாளா் தனுஞ்சயா மற்றும் பலா் கலந்து கொண்டனா்.