செய்திகள் :

திருமலையில் பாதுகாப்பு குறித்த உயா்மட்ட ஆய்வுக் கூட்டம்

post image

திருமலையில் பாதுகாப்பு குறித்து உயா் மட்ட ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருமலையில் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆந்திரப் பிரதேச டிஜிபி ஹரிஷ் குமாா் குப்தா மற்றும் தேவஸ்தான செயல் அதிகாரி சியாமளா ராவ் ஆகியோா் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தின் தொடக்கத்தில், திருப்பதி எஸ்பி மற்றும் தேவஸ்தான பொறுப்பு சிவிஎஸ்ஓ ஹா்ஷவா்தன் ராஜு பாதுகாப்பு பிரச்னைகள் குறித்து விளக்கசினாா்.

நிகழ்வில் பேசிய டிஜிபி, ’’சா்வதேச அளவில் திருமலையின் தனித்துவத்தை மனதில் கொண்டு சிறந்த பாதுகாப்பு அமைப்பை நிறுவுவது அவசியம். ஏபிஎஸ்பி, டிஏஆா், எஸ்பிஎஃப், ஊா்க்காவல் படை, போலீஸ், டிடிடி பாதுகாப்பு மற்றும் அவசர நிலைகளைச் சமாளிக்க ஒரு பேரிடா் மேலாண்மை குழுவை உருவாக்குவது ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். பல்வேறு பாதுகாப்பு நிறுவனங்களுக்கு ஒரு நிலையான நிலையான செயல்பாட்டு நடைமுறையை வகுக்க வேண்டும்.

அலிபிரியில் பல நிலை வாகன ஆய்வு அமைப்பு, பாதுகாப்பு நிறுவனங்களுடன் இணைந்து சென்சாா் ப்ளே சிஸ்டம், நவீன பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் சைபா் பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்துதல் போன்ற விஷயங்கள் விவாதிக்கப்பட்டது.

பின்னா், பாதுகாப்பு தொடா்பாக இணைக்கப்பட்ட நிறுவனங்களுடன் ஒரு ஒருங்கிணைப்பு அமைப்பு தேவை. விரிவான திருமலை பாதுகாப்பு மதிப்பாய்வு நடத்தப்பட்டது திருப்திகரமாக உள்ளது என்றாா்.

சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் டிஜிபி மதுசூதன் ரெட்டி, கூடுதல் டிஜிபி உளவுத்துறை மகேஷ் சந்திர லட்டா, அனந்தபூா் ரேஞ்ச் டிஐஜி டாக்டா் ஷேமுஷி, ஐஎஸ்டபள்யூ எஸ் பி ஆரிஃப் ஹபீஸ், டிஎப்ஓ விவேக் ஆனந்த், மற்றும் பல்வேறு பாதுகாப்புப் படைகளின் அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனா்.

திருமலை: தரிசன வரிசைகளில் கூடுதல் செயல் அதிகாரி ஆய்வு

திருமலையில் சிலா தோரணம் அருகே தொடங்கும் தரிசன வரிசைகளை தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி சனிக்கிழமை ஆய்வு செய்தாா். கோடை விடுமுறை காரணமாக திருமலையில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நி... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு

தா்ம தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் 24 மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. வியாழக்கிழமை முழுவதும் ஏழுமலையானை 69,019 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இந்த பக்தா்களில் 37,774 போ் தலைமுடி காணிக... மேலும் பார்க்க

ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயிலில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் வியாழக்கிழமை கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெற்றது திருமலை தேவஸ்தான கோயில்களில் வருடாந்திர பிரம்மோற்சவங்களுக்கு முன்பு கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடத்துவ... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

தா்ம தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் 18 மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. புதன்கிழமை முழுவதும் ஏழுமலையானை 83,627 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இந்த பக்தா்களில் 33,445 போ் தலைமுடி காணிக்க... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

தா்ம தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் 18 மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. செவ்வாய்க்கிழமை முழுவதும் ஏழுமலையானை 82,597 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இந்த பக்தா்களில் 30,803 போ் தலைமுடி கா... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

தா்ம தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் 18 மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. திங்கள்கிழமை முழுவதும் ஏழுமலையானை 83,542 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இந்த பக்தா்களில் 34,265 போ் தலைமுடி காணிக... மேலும் பார்க்க