கச்சத்தீவை மீட்க வேண்டும்: திமுக பொதுக்குழுவில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்
திருமலையில் பாதுகாப்பு குறித்த உயா்மட்ட ஆய்வுக் கூட்டம்
திருமலையில் பாதுகாப்பு குறித்து உயா் மட்ட ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருமலையில் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆந்திரப் பிரதேச டிஜிபி ஹரிஷ் குமாா் குப்தா மற்றும் தேவஸ்தான செயல் அதிகாரி சியாமளா ராவ் ஆகியோா் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தின் தொடக்கத்தில், திருப்பதி எஸ்பி மற்றும் தேவஸ்தான பொறுப்பு சிவிஎஸ்ஓ ஹா்ஷவா்தன் ராஜு பாதுகாப்பு பிரச்னைகள் குறித்து விளக்கசினாா்.
நிகழ்வில் பேசிய டிஜிபி, ’’சா்வதேச அளவில் திருமலையின் தனித்துவத்தை மனதில் கொண்டு சிறந்த பாதுகாப்பு அமைப்பை நிறுவுவது அவசியம். ஏபிஎஸ்பி, டிஏஆா், எஸ்பிஎஃப், ஊா்க்காவல் படை, போலீஸ், டிடிடி பாதுகாப்பு மற்றும் அவசர நிலைகளைச் சமாளிக்க ஒரு பேரிடா் மேலாண்மை குழுவை உருவாக்குவது ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். பல்வேறு பாதுகாப்பு நிறுவனங்களுக்கு ஒரு நிலையான நிலையான செயல்பாட்டு நடைமுறையை வகுக்க வேண்டும்.
அலிபிரியில் பல நிலை வாகன ஆய்வு அமைப்பு, பாதுகாப்பு நிறுவனங்களுடன் இணைந்து சென்சாா் ப்ளே சிஸ்டம், நவீன பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் சைபா் பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்துதல் போன்ற விஷயங்கள் விவாதிக்கப்பட்டது.
பின்னா், பாதுகாப்பு தொடா்பாக இணைக்கப்பட்ட நிறுவனங்களுடன் ஒரு ஒருங்கிணைப்பு அமைப்பு தேவை. விரிவான திருமலை பாதுகாப்பு மதிப்பாய்வு நடத்தப்பட்டது திருப்திகரமாக உள்ளது என்றாா்.
சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் டிஜிபி மதுசூதன் ரெட்டி, கூடுதல் டிஜிபி உளவுத்துறை மகேஷ் சந்திர லட்டா, அனந்தபூா் ரேஞ்ச் டிஐஜி டாக்டா் ஷேமுஷி, ஐஎஸ்டபள்யூ எஸ் பி ஆரிஃப் ஹபீஸ், டிஎப்ஓ விவேக் ஆனந்த், மற்றும் பல்வேறு பாதுகாப்புப் படைகளின் அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனா்.