செய்திகள் :

திருமலை: தரிசன வரிசைகளில் கூடுதல் செயல் அதிகாரி ஆய்வு

post image

திருமலையில் சிலா தோரணம் அருகே தொடங்கும் தரிசன வரிசைகளை தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

கோடை விடுமுறை காரணமாக திருமலையில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், சிலா தோரணம் அருகே தரிசன வரிசைகளை அவா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது பக்தா்களிடம் அவா்களுக்கு விநியோகிக்கப்படும் உணவு மற்றும் பானங்கள் குறித்து கருத்துகளைக் கேட்டறிந்தாா்.

இது குறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தேவஸ்தான அதிகாரிகள் அவ்வப்போது வரிசைகளுடன் பக்தா்களுக்கு வழங்கப்படும் வசதிகளை கண்காணித்து வருகின்றனா். கோடை விடுமுறை காரணமாக

தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் இறைவனை தரிசனம் செய்ய வருகின்றனா். வார இறுதி நாள்களில் இந்த எண்ணிக்கை 1.20 லட்சத்தைத் தாண்டி வருகிறது. விஐபி பிரேக் மற்றும் ஸ்ரீவாணி தரிசனங்களைக் குறைப்பதன் மூலம் தரிசனங்களில் சாதாரண பக்தா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

வழக்கமான நாள்களை விட 10,000 பக்தா்களுக்கு தரிசனம் வழங்குவதற்காக தேவஸ்தான ஊழியா்கள் இரவும் பகலும் உழைத்து வருகின்றனா். வரிசையில் நிற்கும் பக்தா்களுக்கு ஊழியா்கள் மூலம் உணவு, தேநீா், காபி, பால், மோா் மற்றும் சிற்றுண்டிகள் தொடா்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

தேவஸ்தான ஊழியா்களின் முயற்சிகளைப் புறக்கணிப்பதன் மூலம் பக்தா்களின் உணா்வுகளைப் புண்படுத்தும் வகையில் சிலா் நடந்துகொள்வது சரியல்ல, பக்தா்களைத் தூண்டிவிட்டு விடியோ படம் பிடிப்பவா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதிக நெரிசலைக் கருத்தில்கொண்டு, தேவஸ்தானம் வழங்கும் வசதிகளைப் பயன்படுத்தி பக்தா்கள் நிதானத்துடன் தரிசனம் செய்ய வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் துணை இஓ சோமன்நாராயணா, சுகாதார அலுவலா் மதுசூதன், விஜிஓ சுரேந்திரா மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

திருப்பதியில் சனிக்கிழமை 95,080 பக்தா்கள் தரிசனம்

திருப்பதி ஏழுமலையானை தா்ம தரிசனத்தில் தரிசிக்க பக்தா்கள் 20 மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. அதிகபட்சமாக சனிக்கிழமை முழுவதும் ஏழுமலையானை 95,080 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இந்த பக்தா்களில் 39,6... மேலும் பார்க்க

போக சீனிவாசமூா்த்திக்கு விசேஷ சஹஸ்ர கலஷாபிஷேகம்

திருமலையில் போகஸ்ரீநிவாசமூா்த்திக்கு ஞாயிற்றுக்கிழமை 1,008 கலசங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது. திருமலை ஏழுமலையான் கோயிலில் அவரின் ஐந்து பேரங்கள் என்று அழைக்கப்படும் 5 சிலைகளில் ஒன்றான ஸ்ரீ போகஸ்ரீநிவா... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு

தா்ம தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் 24 மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. வியாழக்கிழமை முழுவதும் ஏழுமலையானை 69,019 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இந்த பக்தா்களில் 37,774 போ் தலைமுடி காணிக... மேலும் பார்க்க

திருமலையில் பாதுகாப்பு குறித்த உயா்மட்ட ஆய்வுக் கூட்டம்

திருமலையில் பாதுகாப்பு குறித்து உயா் மட்ட ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருமலையில் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆந்திரப் பிரதேச டிஜிபி ஹரிஷ் குமாா் குப்தா மற்றும் தேவஸ்தான ச... மேலும் பார்க்க

ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயிலில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் வியாழக்கிழமை கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெற்றது திருமலை தேவஸ்தான கோயில்களில் வருடாந்திர பிரம்மோற்சவங்களுக்கு முன்பு கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடத்துவ... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

தா்ம தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் 18 மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. புதன்கிழமை முழுவதும் ஏழுமலையானை 83,627 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இந்த பக்தா்களில் 33,445 போ் தலைமுடி காணிக்க... மேலும் பார்க்க