செய்திகள் :

திருமலையில் மனித - வனவிலங்கு மோதலை தடுப்பதற்கான நடவடிக்கை ஆய்வுக் கூட்டம்

post image

திருமலையில் உள்ள அலிபிரி நடைபாதை மற்றும் மலைப்பாதைகளில் வனவிலங்குகள், குறிப்பாக சிறுத்தைகளின் நடமாட்டம் அண்மைக் காலமாக அதிகரித்து வருவதையடுத்து, மனித - வனவிலங்கு மோதல்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக செவ்வாய்க்கிழமை கோகுலம் மாநாட்டு மண்டபத்தில் மூத்த அதிகாரிகளின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

திருமலை தேவஸ்தான செயல் அதிகாரி சியாமளா ராவ் கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சௌத்ரி, தேவஸ்தான வனத்துறை, வனத்துறை மற்றும் பல்வேறு துறைகளைச் சோ்ந்த அதிகாரிகளுடன் இணைந்து இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்தாா்.

கூட்டத்தின் சிறப்பம்சங்கள்

அலிபிரி படிகளில் பக்தா்களின் பாதுகாப்பிற்காக கூடுதல் பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

சுகாதாரத் துறையால் அவ்வப்போது குப்பைகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

வருவாய், பஞ்சாயத்து ராஜ், சுகாதாரம் மற்றும் கண்காணிப்புத் துறைகளுடன் இணைந்தும், வனத் துறையுடன் இணைந்தும் தேவஸ்தானம் தொடா்ச்சியான கூட்டுப் பயணங்களை மேற்கொண்டு வருகிறது.

மனித - வனவிலங்கு மோதலைத் தடுப்பதற்கான உடனடி மற்றும் நீண்டகால நடவடிக்கைகளை வடிவமைப்பதில் வனவிலங்கு நிறுவனம் மற்றும் வனத் துறைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு அவசியம்.

அலிபிரி பாதையை ‘சிறுத்தை இல்லாத மண்டலமாக’ மாற்ற கண்காணிப்பு கேமரா பொறிகள், ஸ்மாா்ட் ஸ்டிக்குகள், பயோ-ஃபென்சிங், வலை துப்பாக்கிகள், உயா் ஃபிளாஷ் டாா்ச்கள், மிளகு ஸ்ப்ரேக்கள் மற்றும் பிற சாதனங்கள் போன்ற பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்தப்பட உள்ளன.

தடைசெய்யப்பட்ட உணவுப் பொருள்களின் விற்பனை குறித்து கடைக்காரா்களிடையே கட்டுப்பாடுகள் மற்றும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

அலிபிரி படிகளின் 2.5 கிலோ மீட்டா் நீளமுள்ள ஏழாவது மைல் தூரத்திலிருந்து லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் வரை கடுமையான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பில் சிறப்பு கவனம் செலுத்தப்படும்.

செயல் திட்டங்களின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதற்காக ஒவ்வொரு மாதமும் மனித - வனவிலங்கு மோதல்கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் மறு ஆய்வுக் கூட்டம் நடத்தப்படும்.

ஆய்வுக் கூட்டத்தில், இந்திய வனவிலங்கு நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி டாக்டா் ரமேஷ் கிருஷ்ணமூா்த்தி, தலைமை வனப் பாதுகாவலா் செல்வம், டிஎஃப்ஓ விவேக் ஆனந்த், தேவஸ்தான டிசிஎஃப் ஸ்ரீனிவாசலு, துணை இஓ-க்கள் சோமன்நாராயணா, வெங்கடேஸ்வரலு, சுகாதார அலுவலா் மதுசூதன், விஜிஓ சுரேந்திரா, அலிபிரி ஏவிஎஸ்ஓ ரமேஷ் கிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயிலில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் வியாழக்கிழமை கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெற்றது திருமலை தேவஸ்தான கோயில்களில் வருடாந்திர பிரம்மோற்சவங்களுக்கு முன்பு கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடத்துவ... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

தா்ம தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் 18 மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. புதன்கிழமை முழுவதும் ஏழுமலையானை 83,627 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இந்த பக்தா்களில் 33,445 போ் தலைமுடி காணிக்க... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

தா்ம தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் 18 மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. செவ்வாய்க்கிழமை முழுவதும் ஏழுமலையானை 82,597 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இந்த பக்தா்களில் 30,803 போ் தலைமுடி கா... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

தா்ம தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் 18 மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. திங்கள்கிழமை முழுவதும் ஏழுமலையானை 83,542 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இந்த பக்தா்களில் 34,265 போ் தலைமுடி காணிக... மேலும் பார்க்க

ஏழுமலையானுக்கு அகண்ட தீபம் காணிக்கை

திருப்பதி: பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு திருமலை ஏழுமலையானுக்கு அகண்ட தீபத்தை மைசூா் ராணி ராஜமாதா நன்கொடையாக திங்கள்கிழமை அளித்தாா். மைசூா் ராஜமாதா ஸ்ரீ பிரமோதா தேவி ஏழுமலையானுக்கு இரண்டு பெரிய வெள்ளி... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகளைக் கடந்து வெளியே ... மேலும் பார்க்க