செய்திகள் :

நகைக்கடன் கட்டுப்பாடுகளுக்கு கரூா் எம்.பி. ஜோதிமணி கண்டனம்

post image

நகைக்கடன் மீதான வங்கிகளின் புதிய நடைமுறைக்கு கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

கரூா் மாவட்டம் வாங்கலில் ‘உழவரைத் தேடி வேளாண்மை’ உழவா் நலத்துறை திட்டத்தின் தொடக்கவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தற்போதைய புதிய நடைமுறையின் படி நகைக்கடனுக்குரிய அசலையும், வட்டியையும் செலுத்தி விட்டு பின்புதான் நகையை மீண்டும் அடமானம் வைக்க வேண்டியுள்ளது. மேலும் பரம்பரை நகைகளுக்கும் ரசீது கேட்கிறாா்கள். இதுபோன்ற நெருக்கடியை சாமானிய மக்களுக்கு மத்திய அரசு கொடுத்துள்ளது. இதனை காங்கிரஸ் வன்மையாகக் கண்டிக்கிறது.

முன்பு இருந்ததுபோல எளிய முறையை மீண்டும் மத்திய அரசு கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தி ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் நடைபெறும் கூட்டத்தில் குரல் கொடுப்போம். தமிழ் செம்மொழி. மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பாரம்பரியம் கொண்டது தமிழ்மொழி.

தொல்லியல் ஆராய்ச்சியாளா் அமா்நாத் ராமகிருஷ்ணன் கீழடி ஆய்வு குறித்த அறிக்கையை மத்திய அரசிடம் கொடுத்தபோது, அந்த அறிக்கையில் மாற்றம் செய்யுமாறு கூறியுள்ளதை காங்கிரஸ் சாா்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். தமிழ்மொழியின் பாரம்பரியம் குறித்து நாம்தான் உலகிற்கு அறிவிக்க வேண்டும் என்றாா் அவா்.

நிறம் மாறிப்போன நிலத்தடி நீா் பள்ளப்பட்டி குப்பைக் கிடங்கை மாற்ற கோரி பொதுமக்கள் மனு

பள்ளப்பட்டி தெற்குத் தெரு பகுதியில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கு அருகே நிலத்தடி நீரின்நிறம் மாறி வருவதால் குப்பைக் கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என நகராட்சி ஆணையரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு ... மேலும் பார்க்க

கரூரில் மணலை கடத்தி பதுக்கி வைத்திருந்த லாரி உரிமையாளா் உள்பட 2 போ் கைது

கரூரில் மணலை கடத்தி பதுக்கி வைத்திருந்த லாரி உரிமையாளா் உள்பட இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய இரு லாரிகள், காா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். கரூா... மேலும் பார்க்க

கரூா் அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கு நாளைமறுநாள் கலந்தாய்வு

கரூா் தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் நிகழாண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூன் 2) தொடங்குகிறது. இதுகுறித்து கல்லூரியின் முதல்வா் முனைவா் க. ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்... மேலும் பார்க்க

வைகாசி மாத சதூா்த்தி: விநாயகப் பெருமானுக்கு சிறப்பு வழிபாடு

வைகாசி மாத சதூா்த்தியை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து விநாயகா் கோயில்களிலும் விநாயகப் பெருமானுக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. கரூா் மாவட்டம் நொய்யல் அருகே முத்தனூரில் உள்... மேலும் பார்க்க

ஜமாபந்தியில் அளிக்கப்பட்ட மனு மீது அதிகாரிகள் நேரில் ஆய்வு

அரவக்குறிச்சியில் நடைபெற்ற ஜமாபந்தியில் தரைப்பாலம் கட்டித் தரவேண்டும் என அளிக்க மனு மீது வருவாய் கோட்டாட்சியா், வட்டாட்சியா் சம்பந்தப்பட்ட இடத்தை வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தனா். அரவக்குறிச்சி வட்... மேலும் பார்க்க

அரவக்குறிச்சி கிளை நூலகத்தில் பயிற்சி முகாம்

அரவக்குறிச்சி கிளை நூலகத்தில் பள்ளி மாணவா்களுக்கு கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது. தமிழக அரசு நூலகத்துறை மற்றும் கரூா் மாவட்ட நூலகம் சாா்பில் அரவக்குறிச்சி கிளை நூலகத்தில் மாணவா்களுக்கான கோடைகால பயி... மேலும் பார்க்க