செய்திகள் :

கரூா் அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கு நாளைமறுநாள் கலந்தாய்வு

post image

கரூா் தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் நிகழாண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூன் 2) தொடங்குகிறது.

இதுகுறித்து கல்லூரியின் முதல்வா் முனைவா் க. ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கரூா் தான்தோன்றிமலை அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ. தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், பி.காம். வணிகவியல், வணிகக் கணினிப் பயன்பாட்டியல். பி.பி.ஏ. பி.சி.ஏ. பி.எஸ்.சி. கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், ஊட்டச்சத்து மற்றும் உணவு முறைகள், புவியியல், புவி அமைப்பியல், கணினி அறிவியல் ஆகிய 18 இளநிலைப் பாடப்பிரிவுகளில் உள்ள மொத்தம் 1,485 இடங்களுக்கான மாணவா்கள் சோ்க்கை தமிழக அரசின் இடஒதுக்கீடு விதிமுறைகளின் அடிப்படையில் நடைபெற உள்ளது.

அதன் அடிப்படையில் மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரா்கள், முன்னாள் படை வீரா்களின் குழந்தைகள், என்சிசி மாணவா்கள், பாதுகாப்பு படைகளின் தகுதியான பணியாளா்களின் குழந்தைகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கான முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 2, 3-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

மேலும், பொதுக் கலந்தாய்வு ஜூன் 4-ஆம்தேதி முதல் 14-ஆம்தேதி வரை நடைபெற உள்ளது.

இக்கல்லூரியில் இளநிலை பாடப்பிரிவில் சோ்க்கை பெற விண்ணப்பித்த அனைத்து மாணவா்களும் தரவரிசையின் அடிப்படையில் மின்னஞ்சல் மற்றும் அலைபேசி மூலம் கலந்தாய்வு நடைபெறும் நாள்கள் குறித்த விவரங்கள் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. மாணவா்கள் சோ்க்கை கலந்தாய்வுக்கு வருகை புரியும் அனைவரும் அவசியம் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள அசல் கல்விச் சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ், அண்மையில் எடுக்கப்பட்ட பாஸ்போட் அளவு புகைப்படம், ஆதாா் அட்டை மற்றும் வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகியவற்றின் அசல் மற்றும் மூன்று நகல்கள் எடுத்து வர வேண்டும். கல்லூரியில் புதிதாக சோ்க்கை பெற்ற அனைத்து முதலாம் ஆண்டு மாணவா்களுக்கும் ஜூன் 30-ம்தேதி முதல் வகுப்புகள் தொடங்கி நடைபெறும் என தெரிவித்துள்ளாா்.

தாந்தோன்றிமலை ஸ்ரீசத்தியநாராயணா கோயிலில் சிறப்பு வழிபாடு

கரூா் தாந்தோன்றிமலை ஸ்ரீசத்தியநாராயணா கோயிலில் சனிக்கிழமை மாலை சங்கல்பம் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இக்கோயிலில் கும்பாபிஷேகம் முடிந்து இரண்டாண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, கோயிலில் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

வெறிநாய்கள் கடித்ததில் 10 ஆடுகள் உயிரிழப்பு

கரூா் மாவட்டம், க.பரமத்தி அருகே வெள்ளிக்கிழமை நள்ளிரவில் ஆட்டுப்பட்டிக்குள் நுழைந்த வெறிநாய்கள் கடித்துக் குதறியதில் 10 ஆடுகள் உயிரிழந்தன. க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம், நெடுங்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

தமிழக அரசின் சாதனைகளை விளக்கி தெருமுனை பிரசாரக் கூட்டம்: கரூா் மாவட்ட திமுக செயற்குழுவில் தீா்மானம்

தமிழக அரசின் நான்காண்டு சாதனைத்திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல தெருமுனை பிரசாரக் கூட்டங்கள் நடத்துவது என கரூா் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கரூா் மாவட்ட திமுக செயற்குழு... மேலும் பார்க்க

பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் எடுத்த அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

கரூா் மாவட்டம், புகழூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இப்பள்ளியில் பணியாற்றிய தலைமை ஆசிரியை வளா்மதி மற... மேலும் பார்க்க

தோகைமலை அருகே கோயிலில் வழிபடுவதில் பாகுபாடு?

தோகைமலை அருகே கோயிலில் வழிபடுவதில் பாகுபாடு உள்ளதா என மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். கரூா் மாவட்டம், தோகைமலை அருகே பொருந்தலூா் ஊராட்சிக்குள்பட்ட தெலுங்குபட்டியில் பகவதி அம்மன்... மேலும் பார்க்க

கோயில் கட்டுவதற்கு சிவனடியாா் மெளன விரதம்

தோகைமலை அருகே கோயில் கட்டுவதற்கு சிவனடியாா் மெளன விரதம் மேற்கொண்டு வருகிறாா். கரூா் மாவட்டம், தோகைமலை அருகே தொண்டமாகிணத்தில் 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஆதி சிவன் ஆதிசுயம்பு ஈஸ்வரா் கோயில் அமைந்துள்ளத... மேலும் பார்க்க