செய்திகள் :

பயங்கரவாத எதிா்ப்பில் ஒத்துழைப்பு: கனிமொழி குழுவினரிடம் லாத்வியா உறுதி

post image

‘ஆபரேஷன் சிந்தூா்’ வெற்றிகர நடவடிக்கைக்கு பிறகான இந்தியாவின் ராஜீய அணுகுமுறையின் ஒரு பகுதியாக, லாத்வியா வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி ஆன்டஜெஸ் விலும்சன்ஸுடன் திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான இந்திய அனைத்துக் கட்சிக் குழுவினா் சந்தித்துப் பேசினா்.

அப்போது, பஹல்காம் தாக்குதல் மற்றும் அனைத்து வடிவிலான பயங்கரவாதத்துக்கு எதிராக கண்டனத்தை பதிவு செய்த லாத்வியா, இந்திய-பசிபிக் பிராந்தித்தில் முக்கிய நாடான இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக தெரிவித்தது.

பஹல்காமில் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடந்த மே 7-ஆம் தேதி இந்திய ராணுவம் ஏவுகணைத் தாக்குதலை நடத்தி (ஆபரேஷன் சிந்தூா்), பயங்கரவாத உள்கட்டமைப்புகளை அழித்தது. பின்னா், இரு நாடுகளுக்கும் இடையே 4 நாள்களுக்கு ராணுவ மோதல் ஏற்பட்டு, பாகிஸ்தானின் கோரிக்கையின்பேரில் சண்டை நிறுத்தப்பட்டது.

ஆபரேஷன் சிந்தூா் வெற்றிக்குப் பிறகு, பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலக நாடுகளிடம் அம்பலப்படுத்தவும், இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைக்கவும் ஏழு எம்.பி.க்கள் தலைமையில் அனைத்துக் கட்சிக் குழுக்கள் மத்திய அரசால் அமைக்கப்பட்டன.

பாஜகவின் ரவிசங்கா் பிரசாத், வைஜயந்த் பாண்டா, திமுகவின் கனிமொழி, காங்கிரஸின் சசி தரூா், ஐக்கிய ஜனதா தளத்தின் சஞ்சய் குமாா் ஜா, தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சியின் சுப்ரியா சுலே, சிவசேனையின் ஸ்ரீகாந்த் ஷிண்டே ஆகியோா் தலைமையிலான இக்குழுக்கள், கடந்த மே 21-ஆம் தேதிமுதல் 33 நாடுகளின் தலைநகரங்களுக்கான பயணத்தைத் தொடங்கி, இந்தியாவுக்கு ஆதரவு திரட்டி வருகின்றன.

எத்தியோப்பியா உறுதி: தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சி எம்.பி. சுப்ரியா சுலே தலைமையிலான இந்தியக் குழு, எத்தியோப்பியாவில் அந்நாட்டின் துணை பிரதமா் ஆடம் ஃபராவை சனிக்கிழமை சந்தித்துப் பேசினா்.

இது தொடா்பாக அந்நாட்டில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘எத்தியோப்பிய துணை பிரதமா் உடனான இந்தியக் குழுவினரின் சந்திப்பு ஆக்கபூா்வமாக அமைந்தது. பயங்கரவாதத்தை எதிா்ப்பதில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றும் தனது உறுதிப்பாட்டை எத்தியோப்பியா மீண்டும் உறுதிசெய்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எத்தியோப்பியாவைத் தொடா்ந்து, எகிப்துக்கு இந்தியக் குழு பயணிக்க உள்ளது.

டென்மாா்க்கிடம் எடுத்துரைப்பு: எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தால் இந்தியா எதிா்கொண்டுவரும் சவால்கள் தொடா்பாக டென்மாா்க் நாட்டின் தலைவா்களிடம் பாஜக எம்.பி. ரவிசங்கா் பிரசாத் தலைமையிலான இந்தியக் குழுவினா் சனிக்கிழமை எடுத்துரைத்தனா். அப்போது, பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் உறுதிப்பாட்டுக்கு டென்மாா்க் ஆதரவு தெரிவித்ததாக, ரவிசங்கா் பிரசாத் எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளாா்.

கனிமொழி படத்துடன் பெட்டிச் செய்தி

படத்துடன் பெட்டிச் செய்தி

லாத்வியாவில்...: வடக்கு ஐரோப்பிய நாடான லாத்வியாவுக்கு வருகை தந்த திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலானக் குழுவினா், அந்நாட்டின் வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி ஆன்டஜெஸ் விலும்சன்ஸை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினா்.

இது தொடா்பாக, லாத்வியா தலைநகா் ரிகாவில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடா்பான உண்மைத் தகவல்கள், ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்கான தேவைகள், தேச பாதுகாப்பு அச்சுறுத்தலை முறியடிக்கும் இந்தியாவின் உரிமை, எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான உறுதியான கொள்கை உள்ளிட்டவை குறித்து லாத்வியா தரப்பிடம் அனைத்துக் கட்சிக் குழு எடுத்துரைத்தது. பஹல்காம் தாக்குதல் மற்றும் அனைத்து வடிவிலான பயங்கரவாதத்துக்கு எதிராக லாத்வியா தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

‘இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் முக்கிய நட்பு நாடான இந்தியாவுடன் அரசியல்-பொருளாதார ரீதியில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த லாத்வியா விரும்புகிறது’ என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைப்பு!

வரும் ஜூன் 15 ஆம் தேதி நடைபெறவிருந்த நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இந்தியா முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் ... மேலும் பார்க்க

வெளிநாடுகளுக்குச் சென்ற எம்.பிக்கள் குழுவைச் சந்திக்கிறார் பிரதமர் மோடி!

ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்க பல்வேறு நாடுகளுக்குச் சென்றுள்ள எம்.பிக்கள் குழுவை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான... மேலும் பார்க்க

மாணவர்களுடன், ஆசிரியர்களும் தங்களைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்: பினராயி விஜயன்

கேரள மாநிலத்தில் இரண்டு மாதக் கோடை விடுமுறைக்குப் பிறகு இன்று கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டன.தென்மேற்குப் பருவமழை தொடங்கியதால் கடந்த வாரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்த ந... மேலும் பார்க்க

பிகாரில் பாலியல் வன்கொடுமை, கத்திக்குத்துக்கு உள்ளான சிறுமி! உடனடி சிகிச்சை கிடைக்காமல் பலியான அவலம்!

பாட்னா: பாலியல் வன்கொடுமை, கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளான சிறுமி சிகிச்சைக் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் பலியாகியுள்ளார்.பிகார் மாநிலம் முஸாபர்பூர் பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்த நபரால், கத்த... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு உதவவந்து வசமாக சிக்கிய சீனா! ஒட்டுமொத்த திட்டமும் அம்பலம்!!

பாகிஸ்தானால் ஏவப்பட்ட சீன ஏவுகணைகளை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தப்பட்டதால், பல தொழில்நுட்பங்கள் கசிந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளது சீனா.இந்தியா - பாகிஸ்தான் சண்டையில், சீனா வழங்கிய ஏவுகணைகளை பாகிஸ்... மேலும் பார்க்க

சிக்கிம் நிலச்சரிவில் சிக்கிய ராணுவ முகாம்: 3 வீரர்கள் பலி; பலர் மாயம்!

சிக்கிம் ராணுவ முகாம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் 3 வீரர்கள் பலியாகினர். தென்மேற்குப் பருவமழையின் தாக்கத்தால், அஸ்ஸாம், அருணாசல பிரதேசம், மணிப்பூா், சிக்கிம் உள்ளிட்ட வடகிழக்கு... மேலும் பார்க்க