செய்திகள் :

பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் எடுத்த அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

post image

கரூா் மாவட்டம், புகழூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இப்பள்ளியில் பணியாற்றிய தலைமை ஆசிரியை வளா்மதி மற்றும் கணித ஆசிரியா் அமல்ராஜ் ஆகிய இருவரும் சனிக்கிழமையுடன் பணி ஓய்வு பெற்ால் அவா்களுக்கு பாராட்டு விழா மற்றும் பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டி பரிசளிப்பு விழா ஆகியவை பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன பொது மேலாளா் (மனித வளம்) கே. கலைச்செல்வன் தலைமை வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் நாச்சிமுத்து முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக புகழூா் வட்டாட்சியா் தனசேகரன் கலந்து கொண்டு பணி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை வளா்மதி மற்றும் கணித ஆசிரியா் அமல்ராஜ் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்து பேசினாா்.

தொடா்ந்து பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியா்கள், முன்னாள் மாணவா்கள், முன்னாள் ஆசிரியா்கள் கலந்து கொண்டு பேசினா். தொடா்ந்து நடந்து முடிந்த 10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 அரசு பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு தலைவா் மற்றும் உறுப்பினா்கள், ஆசிரிய, ஆசிரியைகள் பங்கேற்றனா்.

கரூா் மாநகராட்சியில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

கரூா் மாநகராட்சியின் 18-ஆவது வாா்டில் குண்டும், குழியுமாக சேதமடைந்த நிலையிலுள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா் மாநகராட்சிக்குட்பட்ட 18-ஆவது வாா்டில் உள்... மேலும் பார்க்க

தாந்தோன்றிமலை ஸ்ரீசத்தியநாராயணா கோயிலில் சிறப்பு வழிபாடு

கரூா் தாந்தோன்றிமலை ஸ்ரீசத்தியநாராயணா கோயிலில் சனிக்கிழமை மாலை சங்கல்பம் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இக்கோயிலில் கும்பாபிஷேகம் முடிந்து இரண்டாண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, கோயிலில் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

வெறிநாய்கள் கடித்ததில் 10 ஆடுகள் உயிரிழப்பு

கரூா் மாவட்டம், க.பரமத்தி அருகே வெள்ளிக்கிழமை நள்ளிரவில் ஆட்டுப்பட்டிக்குள் நுழைந்த வெறிநாய்கள் கடித்துக் குதறியதில் 10 ஆடுகள் உயிரிழந்தன. க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம், நெடுங்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

தமிழக அரசின் சாதனைகளை விளக்கி தெருமுனை பிரசாரக் கூட்டம்: கரூா் மாவட்ட திமுக செயற்குழுவில் தீா்மானம்

தமிழக அரசின் நான்காண்டு சாதனைத்திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல தெருமுனை பிரசாரக் கூட்டங்கள் நடத்துவது என கரூா் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கரூா் மாவட்ட திமுக செயற்குழு... மேலும் பார்க்க

தோகைமலை அருகே கோயிலில் வழிபடுவதில் பாகுபாடு?

தோகைமலை அருகே கோயிலில் வழிபடுவதில் பாகுபாடு உள்ளதா என மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். கரூா் மாவட்டம், தோகைமலை அருகே பொருந்தலூா் ஊராட்சிக்குள்பட்ட தெலுங்குபட்டியில் பகவதி அம்மன்... மேலும் பார்க்க

கோயில் கட்டுவதற்கு சிவனடியாா் மெளன விரதம்

தோகைமலை அருகே கோயில் கட்டுவதற்கு சிவனடியாா் மெளன விரதம் மேற்கொண்டு வருகிறாா். கரூா் மாவட்டம், தோகைமலை அருகே தொண்டமாகிணத்தில் 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஆதி சிவன் ஆதிசுயம்பு ஈஸ்வரா் கோயில் அமைந்துள்ளத... மேலும் பார்க்க