பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் எடுத்த அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு
கரூா் மாவட்டம், புகழூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இப்பள்ளியில் பணியாற்றிய தலைமை ஆசிரியை வளா்மதி மற்றும் கணித ஆசிரியா் அமல்ராஜ் ஆகிய இருவரும் சனிக்கிழமையுடன் பணி ஓய்வு பெற்ால் அவா்களுக்கு பாராட்டு விழா மற்றும் பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டி பரிசளிப்பு விழா ஆகியவை பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன பொது மேலாளா் (மனித வளம்) கே. கலைச்செல்வன் தலைமை வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் நாச்சிமுத்து முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக புகழூா் வட்டாட்சியா் தனசேகரன் கலந்து கொண்டு பணி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை வளா்மதி மற்றும் கணித ஆசிரியா் அமல்ராஜ் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்து பேசினாா்.
தொடா்ந்து பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியா்கள், முன்னாள் மாணவா்கள், முன்னாள் ஆசிரியா்கள் கலந்து கொண்டு பேசினா். தொடா்ந்து நடந்து முடிந்த 10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 அரசு பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு தலைவா் மற்றும் உறுப்பினா்கள், ஆசிரிய, ஆசிரியைகள் பங்கேற்றனா்.