மாணவர்களுடன், ஆசிரியர்களும் தங்களைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்: பினராயி விஜயன...
தமிழக அரசின் சாதனைகளை விளக்கி தெருமுனை பிரசாரக் கூட்டம்: கரூா் மாவட்ட திமுக செயற்குழுவில் தீா்மானம்
தமிழக அரசின் நான்காண்டு சாதனைத்திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல தெருமுனை பிரசாரக் கூட்டங்கள் நடத்துவது என கரூா் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கரூா் மாவட்ட திமுக செயற்குழுக்கூட்டம் சனிக்கிழமை கட்சி அலுவலகமான கலைஞா் அறிவாலயத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவா் டி.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் திமுக மாவட்டச் செயலாளரும், கரூா் சட்டப்பேரவை உறுப்பினருமான வி.செந்தில்பாலாஜி பங்கேற்று, ஜூன் 3-ஆம் தேதி மறைந்த தமிழக முதல்வா் கருணாநிதியின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும், வரும் 2026 சட்டப்பேரவை தோ்தலை எதிா்கொள்வது குறித்தும் சிறப்புரையாற்றினாா்.
தொடா்ந்து கூட்டத்தில் திமுக ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட சாதனைத் திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சோ்க்கும் வகையில் மாவட்டம் முழுவதும் தெருமுனை பிரசார கூட்டங்கள் நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாநில நெசவாளா் அணிச் செயலாளா் பரணி கே.மணி, எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம், சிவகாமசுந்தரி, இளங்கோ, மாவட்ட நிா்வாகிகள் எம்.எஸ்.கே.கருணாநிதி, பூவை ரமேஷ்பாபு, மகேஸ்வரி, நகர நிா்வாகிகள் எஸ்.பி.கனகராஜ், கரூா் கணேசன் உள்ளிட்டோா் திரளாக பங்கேற்றனா்.