Weekly Horoscope: வார ராசி பலன் 1.6.25 முதல் 7.6.25 | Indha Vaara Rasi Palan | ...
வைகாசி மாத சதூா்த்தி: விநாயகப் பெருமானுக்கு சிறப்பு வழிபாடு
வைகாசி மாத சதூா்த்தியை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து விநாயகா் கோயில்களிலும் விநாயகப் பெருமானுக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
கரூா் மாவட்டம் நொய்யல் அருகே முத்தனூரில் உள்ள வருண கணபதி கோயிலில் வைகாசி மாத சதூா்த்தியை முன்னிட்டு விநாயகப் பெருமானுக்கு பால், தயிா், பன்னீா், இளநீா், சந்தனம் , மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் வெள்ளிக்கிழமை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னா் சிறப்பு அலங்காரத்தில் விநாயகப் பெருமான் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
இதேபோல புகழிமலை அடிவாரத்தில் உள்ள விநாயகப் பெருமான், கரைப்பாளையம் விநாயகப் பெருமான், ,நடையனூா் ,சேமங்கி , மரவாபாளையம் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து விநாயகா் கோயில்களிலும் விநாயக பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.