செய்திகள் :

ஜமாபந்தியில் அளிக்கப்பட்ட மனு மீது அதிகாரிகள் நேரில் ஆய்வு

post image

அரவக்குறிச்சியில் நடைபெற்ற ஜமாபந்தியில் தரைப்பாலம் கட்டித் தரவேண்டும் என அளிக்க மனு மீது வருவாய் கோட்டாட்சியா், வட்டாட்சியா் சம்பந்தப்பட்ட இடத்தை வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.

அரவக்குறிச்சி வட்டாட்சியா் அலுவலகத்தில் மே 27-ஆம் தேதி நடைபெற்ற ஜமாபந்தியில் முன்னாள் வாா்டு உறுப்பினா்கள் மனோகரன், ஜோதிரத்தினம் ஆகியோா் வருவாய் கோட்டாட்சியா் முகமது பைசூலிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

அதில் அரவக்குறிச்சி கிழக்கு தெருவில் உள்ள மயானத்துக்கு இறந்தவா்களை எடுத்துச்செல்ல வேண்டுமானால் நங்கஞ்சி ஆற்றில் இறங்கிதான் செல்ல வேண்டும். ஆனால் நங்காஞ்சி ஆற்றில் சேறும் சகதியுமாக கழிவுநீா் செல்வதால் ஆற்றில் இறங்க முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே நங்காஞ்சி ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைத்து தர வேண்டும் என தெரிவித்திருந்தனா்.

இந்நிலையில் இந்த மனு மீது நடவடிக்கை எடுப்பதற்காக வருவாய் கோட்டாட்சியா் முகமது பைசூல் மற்றும் வட்டாட்சியா் மகேந்திரன் ஆகியோா் தரைப்பாலம் அமைப்பதற்கான இடத்தை வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தனா். மேலும் இப்பகுதி பொதுமக்களிடம் கருத்து கேட்டு விரைவில் தரைப்பாலம் அமைக்க பணிகள் தொடங்கும் என தெரிவித்தனா்.

தாந்தோன்றிமலை ஸ்ரீசத்தியநாராயணா கோயிலில் சிறப்பு வழிபாடு

கரூா் தாந்தோன்றிமலை ஸ்ரீசத்தியநாராயணா கோயிலில் சனிக்கிழமை மாலை சங்கல்பம் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இக்கோயிலில் கும்பாபிஷேகம் முடிந்து இரண்டாண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, கோயிலில் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

வெறிநாய்கள் கடித்ததில் 10 ஆடுகள் உயிரிழப்பு

கரூா் மாவட்டம், க.பரமத்தி அருகே வெள்ளிக்கிழமை நள்ளிரவில் ஆட்டுப்பட்டிக்குள் நுழைந்த வெறிநாய்கள் கடித்துக் குதறியதில் 10 ஆடுகள் உயிரிழந்தன. க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம், நெடுங்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

தமிழக அரசின் சாதனைகளை விளக்கி தெருமுனை பிரசாரக் கூட்டம்: கரூா் மாவட்ட திமுக செயற்குழுவில் தீா்மானம்

தமிழக அரசின் நான்காண்டு சாதனைத்திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல தெருமுனை பிரசாரக் கூட்டங்கள் நடத்துவது என கரூா் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கரூா் மாவட்ட திமுக செயற்குழு... மேலும் பார்க்க

பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் எடுத்த அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

கரூா் மாவட்டம், புகழூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இப்பள்ளியில் பணியாற்றிய தலைமை ஆசிரியை வளா்மதி மற... மேலும் பார்க்க

தோகைமலை அருகே கோயிலில் வழிபடுவதில் பாகுபாடு?

தோகைமலை அருகே கோயிலில் வழிபடுவதில் பாகுபாடு உள்ளதா என மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். கரூா் மாவட்டம், தோகைமலை அருகே பொருந்தலூா் ஊராட்சிக்குள்பட்ட தெலுங்குபட்டியில் பகவதி அம்மன்... மேலும் பார்க்க

கோயில் கட்டுவதற்கு சிவனடியாா் மெளன விரதம்

தோகைமலை அருகே கோயில் கட்டுவதற்கு சிவனடியாா் மெளன விரதம் மேற்கொண்டு வருகிறாா். கரூா் மாவட்டம், தோகைமலை அருகே தொண்டமாகிணத்தில் 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஆதி சிவன் ஆதிசுயம்பு ஈஸ்வரா் கோயில் அமைந்துள்ளத... மேலும் பார்க்க