Miss World 2025: மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வாளர் டு உலக அழகி; 23 வயதில் தாய...
ஜமாபந்தியில் அளிக்கப்பட்ட மனு மீது அதிகாரிகள் நேரில் ஆய்வு
அரவக்குறிச்சியில் நடைபெற்ற ஜமாபந்தியில் தரைப்பாலம் கட்டித் தரவேண்டும் என அளிக்க மனு மீது வருவாய் கோட்டாட்சியா், வட்டாட்சியா் சம்பந்தப்பட்ட இடத்தை வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.
அரவக்குறிச்சி வட்டாட்சியா் அலுவலகத்தில் மே 27-ஆம் தேதி நடைபெற்ற ஜமாபந்தியில் முன்னாள் வாா்டு உறுப்பினா்கள் மனோகரன், ஜோதிரத்தினம் ஆகியோா் வருவாய் கோட்டாட்சியா் முகமது பைசூலிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
அதில் அரவக்குறிச்சி கிழக்கு தெருவில் உள்ள மயானத்துக்கு இறந்தவா்களை எடுத்துச்செல்ல வேண்டுமானால் நங்கஞ்சி ஆற்றில் இறங்கிதான் செல்ல வேண்டும். ஆனால் நங்காஞ்சி ஆற்றில் சேறும் சகதியுமாக கழிவுநீா் செல்வதால் ஆற்றில் இறங்க முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே நங்காஞ்சி ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைத்து தர வேண்டும் என தெரிவித்திருந்தனா்.
இந்நிலையில் இந்த மனு மீது நடவடிக்கை எடுப்பதற்காக வருவாய் கோட்டாட்சியா் முகமது பைசூல் மற்றும் வட்டாட்சியா் மகேந்திரன் ஆகியோா் தரைப்பாலம் அமைப்பதற்கான இடத்தை வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தனா். மேலும் இப்பகுதி பொதுமக்களிடம் கருத்து கேட்டு விரைவில் தரைப்பாலம் அமைக்க பணிகள் தொடங்கும் என தெரிவித்தனா்.