செய்திகள் :

`தாக்குதல் நடத்தியவர்கள் சுதந்திரமாக சுற்ற, நமது எம்.பிகள் விளக்கமளிக்க..' - ஜெய்ராம் ரமேஷ் காட்டம்

post image

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட நான்கு தீவிரவாதிகள் இன்னும் சுதந்திரமாக சுற்றித் திரிகிறார்கள் என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், ``பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ள தீவிரவாதிகள் வேறு நான்கு தாக்குதல்களிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். இப்போது வரை அவர்கள் கைது செய்யப்படவில்லை. அவர்கள் சுதந்திரமாக சுற்றித் திரிகிறார்கள். காங்கிரஸின் கேள்விகளுக்கு பா.ஜ.க பதிலளிக்கவில்லை.

ஜெய்ராம் ரமேஷ்

பயங்கரவாதிகள் மீது இருக்க வேண்டிய தாக்குதல் காங்கிரஸ் கட்சி மீதுதான் இருக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பயங்கரவாதிகள் கைது செய்யப்பட வேண்டும். ஆனால் ஒவ்வொரு நாளும் ஏவப்படும் ஏவுகணைகள் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக ஏவப்படுகின்றன. ஒருபக்கம் தாக்குதல் நடத்தியவர்கள் சுதந்திரமாக சுற்றித் திரிகிறார்கள். இன்னொருபக்கம் தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க நம் எம்.பி-கள் உலகம் முழுவதும் சுற்றுகிறார்கள். இந்த முரண்பாடு குறித்து காங்கிரஸ் தொடர்ந்து கேள்வி எழுப்புகிறது" என்றார்.

தொடர்ந்து, பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனாவாலா, "இதுதான் காங்கிரஸ் எங்கள் இராணுவத் தாக்குதலை, எங்கள் ராஜதந்திர தாக்குதலை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. இதற்காக நாடாளுமன்றம் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாதா?.

‘ஆபரேஷன் சிந்தூர்’

உலகளாவிய மக்கள் தொடர்புக் குழுவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி-க்கள் அடங்குவர் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். பிரதிநிதிகளில் முக்கியமானவர் சசி தரூர், அவர் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக விளக்கமளிக்க அனைத்துக் கட்சிக் குழுவிற்கு தலைமை தாங்குகிறார்." என்றார். தீவிரவாதிகள் கைது செய்யப்படாதது குறித்த காங்கிரஸின் கேள்விக்கு பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.

Doctor Vikatan: மீண்டும் அதிகரிக்கும் கொரோனா! தடுப்பூசி, லாக்டௌன் தேவையா?

Doctor Vikatan: ஒரு வழியாக நம்மைவிட்டுப் போய்விட்டது என நினைக்கவைத்தகொரோனா, மீண்டும் பரவத் தொடங்கியிருக்கிறது. ஒரே நேரத்தில் நான்கு வேரியன்ட்டுகள் பரவுவதாகவெல்லாம்சொல்கிறார்கள். மக்கள் மாஸ்க் அணிவதையே... மேலும் பார்க்க

``குடும்ப அரசியல் என்று எதிர்த்தீர்களே? இப்போது..'' - செய்தியாளர் கேள்விக்கு கமலின் ரியாக்ஷன் என்ன?

மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் கமல்ஹாசன் தமிழக முதல்வர் ஸ்டாலினை இன்று சந்தித்துப் பேசியிருக்கிறார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய கமல்ஹாசன், "முதல்வரை சந்தித்து நன்றி... மேலும் பார்க்க

``பாகிஸ்தானின் 81% ராணுவ தளவாடங்கள் சீனா உடையது தான்!'' - சசி தரூர் குற்றச்சாட்டு

ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்க, இந்திய அரசு நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுக்களை அமைத்துள்ளது. அந்தக் குழுக்கள் இப்போது வெளிநாட்டில் பயணம் மேற்கொண்டு வருகின்றன. அதில் நேற்று சசி தரூர் கொலம்பியாவிற்க... மேலும் பார்க்க

`கீழடி ஆய்வறிக்கையை திருப்பி அனுப்பிய இந்திய தொல்லியல் துறை' - கிளம்பிய சர்ச்சையும், விளக்கமும்!

அமர்நாத் ராமகிருஷ்ணன் கீழடி குறித்த தனது ஆய்வறிக்கையை இந்திய தொல்லியல் துறைக்கு 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் சமர்ப்பித்திருந்தார். இந்த அறிக்கையில் சில மாற்றங்களைச் செய்யுமாறு கடந்த வாரம் திருப்பி அனுப்ப... மேலும் பார்க்க

US Tariffs: `இறக்குமதி வரி ரத்து-க்கு தற்காலிக தடை!' - நீதிமன்ற தீர்ப்பு ட்ரம்ப்-க்கு வெற்றியா?

கடந்த ஏப்ரல் 2-ம் தேதி, பெரும்பாலான உலக நாடுகளுக்கு 'பரஸ்பர வரி'யை விதித்து உத்தரவிட்டார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அந்த நாளுக்கு 'விடுதலை நாள்' என்றும் பெயர் வைத்தார். 'பிற உலக நாடுகள் அமெரிக்காவின் ம... மேலும் பார்க்க

USA: `சீன மாணவர்களுக்கு ஸ்பெஷல் கண்டிஷன்' - வெளிநாட்டு மாணவர்களுக்கு ட்ரம்ப் வைக்கும் செக்!

அமெரிக்காவில் படிப்பு... அமெரிக்காவில் வேலை என்பது இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான உலக நாடுகளில் உள்ள இளைஞர்களின் கனவு. ஆனால், இனி அது அவ்வளவு எளிதாக இருக்காது. இதற்கு காரணம், 'அமெரிக்க அதிபர் ட்ரம்ப்'.அ... மேலும் பார்க்க