செய்திகள் :

கர்நாடக காங்கிரஸில் இருந்து விலகிய 200 இஸ்லாமிய பிரமுகர்கள்.. ராஜினாமா செய்ய காரணம் என்ன?

post image

கர்நாடகா மாநிலத்தின் தக்ஷின கன்னடா மாவட்டத்தில் 200 இஸ்லாமிய காங்கிரஸினர் ஒரேநாளில் கட்சி பொறுப்புகளிலிருந்து ராஜினாமா செய்துள்ளனர்.

மாநில காங்கிரஸ் அரசாங்கம் இம்தியாஸ் என்கிற அப்துல் ரஹீம் கொலை வழக்கை கையாளும்விதத்தை எதிர்த்து போராட்ட நடவடிக்கையாக இதை மேற்கொண்டுள்ளனர்.

ராஜினாமா செய்தவர்களில் கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் (கேபிசிசி) பொதுச் செயலாளர் எம்எஸ் முஹம்மது மற்றும் தட்சிண கன்னட சிறுபான்மை பிரிவு மாவட்டத் தலைவர் ஷாகுல் ஹமீது ஆகிய தலைவர்களும் அடங்குவர்.

மங்களூருவின் ஷாதி மஹாலில் நடந்த கூட்டத்தைத்தில் அப்துல் ரஹீம் கொலைவழக்கில் மாநில அரசின் நடவடிக்கைகள் குறித்து விவாதங்கள் எழுந்தன. இதில் ஷாகுல் ஹமீது மாநில அரசைப் பாராட்டிப் பேசியதற்கு உட்கட்சியினரிடமே கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

கூட்டத்தில் மாநில அரசாங்கம் தொடர் வகுப்புவாத கொலைகளை தடுக்க தவறியதாகவும், காங்கிரஸில் இஸ்லாமிய தலைவர்கள் ஓரங்கட்டப்படுவதாகவும் கடுமையான வாக்குவாதங்கள் எழுந்தன.

இஸ்லாமிய தலைவர்கள் கட்சிமீது ஆழமான அதிருப்திகளை வெளிப்படுத்தியதுடன், போராட்டம் எழுந்தன. ஷாகுல் ஹமீதுடன் பல முஸ்லிம் மாநகராட்சி உறுப்பினர்கள், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள் மற்றும் எட்டு சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

"நாங்கள் ராஜினாமா செய்துவிட்டோம். எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை, நாங்கள் கட்சி அலுவலகத்திற்குத் திரும்பிச் செல்ல மாட்டோம்" என ராஜினாமா செய்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் முறையான ராஜினாமா கடிதங்கள் சமர்பிக்காமல், அறிவிப்பாக மட்டுமே கூறியிருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இம்தியாஸ் என்கிற அப்துல் ரஹீம் கொலை

கடந்த மே 26-ம் தேதி பத்வால் பகுதியில் உள்ளூர் மசூதியின் செயலாளரும் ஓட்டுநருமான இம்தியாஸ், பட்டப்பகலில் அவரது வாகனத்தில் இருந்து மணல் இறக்கிக்கொண்டிருந்தபோது வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறையினர் கூறுவதன்படி, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இம்தியாஸ் மற்றும் அவர் உடனிருந்த கலந்தர் ஆகியோரை சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இம்தியாஸ் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். கலந்தர் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கோலட்டமஜலு பகுதியில் வசிக்கும் இம்தியாஸ் தெற்கு கனரா சன்னி கூட்டமைப்பின் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

"இந்த கொலை தொடர்பாக இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாநில அரசு வகுப்புவாத வன்முறை தடுப்பு பணிக்குழுவை செயல்படுத்த முடிவு செய்துள்ளது." என்று மாநில உள்துறை அமைச்சர் ஜி பரமேஸ்வரா நேற்று (மே 28) தெரிவித்தார்.

Doctor Vikatan: மீண்டும் அதிகரிக்கும் கொரோனா! தடுப்பூசி, லாக்டௌன் தேவையா?

Doctor Vikatan: ஒரு வழியாக நம்மைவிட்டுப் போய்விட்டது என நினைக்கவைத்தகொரோனா, மீண்டும் பரவத் தொடங்கியிருக்கிறது. ஒரே நேரத்தில் நான்கு வேரியன்ட்டுகள் பரவுவதாகவெல்லாம்சொல்கிறார்கள். மக்கள் மாஸ்க் அணிவதையே... மேலும் பார்க்க

``குடும்ப அரசியல் என்று எதிர்த்தீர்களே? இப்போது..'' - செய்தியாளர் கேள்விக்கு கமலின் ரியாக்ஷன் என்ன?

மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் கமல்ஹாசன் தமிழக முதல்வர் ஸ்டாலினை இன்று சந்தித்துப் பேசியிருக்கிறார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய கமல்ஹாசன், "முதல்வரை சந்தித்து நன்றி... மேலும் பார்க்க

``பாகிஸ்தானின் 81% ராணுவ தளவாடங்கள் சீனா உடையது தான்!'' - சசி தரூர் குற்றச்சாட்டு

ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்க, இந்திய அரசு நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுக்களை அமைத்துள்ளது. அந்தக் குழுக்கள் இப்போது வெளிநாட்டில் பயணம் மேற்கொண்டு வருகின்றன. அதில் நேற்று சசி தரூர் கொலம்பியாவிற்க... மேலும் பார்க்க

`கீழடி ஆய்வறிக்கையை திருப்பி அனுப்பிய இந்திய தொல்லியல் துறை' - கிளம்பிய சர்ச்சையும், விளக்கமும்!

அமர்நாத் ராமகிருஷ்ணன் கீழடி குறித்த தனது ஆய்வறிக்கையை இந்திய தொல்லியல் துறைக்கு 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் சமர்ப்பித்திருந்தார். இந்த அறிக்கையில் சில மாற்றங்களைச் செய்யுமாறு கடந்த வாரம் திருப்பி அனுப்ப... மேலும் பார்க்க

US Tariffs: `இறக்குமதி வரி ரத்து-க்கு தற்காலிக தடை!' - நீதிமன்ற தீர்ப்பு ட்ரம்ப்-க்கு வெற்றியா?

கடந்த ஏப்ரல் 2-ம் தேதி, பெரும்பாலான உலக நாடுகளுக்கு 'பரஸ்பர வரி'யை விதித்து உத்தரவிட்டார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அந்த நாளுக்கு 'விடுதலை நாள்' என்றும் பெயர் வைத்தார். 'பிற உலக நாடுகள் அமெரிக்காவின் ம... மேலும் பார்க்க

USA: `சீன மாணவர்களுக்கு ஸ்பெஷல் கண்டிஷன்' - வெளிநாட்டு மாணவர்களுக்கு ட்ரம்ப் வைக்கும் செக்!

அமெரிக்காவில் படிப்பு... அமெரிக்காவில் வேலை என்பது இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான உலக நாடுகளில் உள்ள இளைஞர்களின் கனவு. ஆனால், இனி அது அவ்வளவு எளிதாக இருக்காது. இதற்கு காரணம், 'அமெரிக்க அதிபர் ட்ரம்ப்'.அ... மேலும் பார்க்க