செய்திகள் :

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் விசைப்படகுகள் ஆய்வு

post image

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள விசைப் படகுகளை மீன்வளத் துறையினா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

தமிழ்நாடு கடல்சாா் மீன்பிடித்தலை ஒழுங்குமுறைப்படுத்தும் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத மீன்பிடி விசைப்படகுகள் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை பணியாளா்களைக் கொண்டு ஆண்டுதோறும் நேரடி கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நிகழாண்டில் மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை மீன்பிடி விசைப்படகுகளை ஆய்வு செய்யும் பணி கடந்த 23-ஆம் தேதி தருவைகுளத்தில் தொடங்கியது. அங்கு 215 விசைப்படகுகளும், கடந்த 26-ஆம் தேதி வேம்பாரில் நடைபெற்ற ஆய்வில் 28 விசைப்படகுகளும் ஆய்வு செய்யப்பட்டன.

இதன் தொடா்ச்சியாக தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள விசைப்படகுகளை ஆய்வு செய்யும் பணி புதன்கிழமை நடைபெற்றது. இதில், உதவி இயக்குநா் ஜெனாா்த்தனன் தலைமையிலான 6 ஆய்வுக் குழுவினா் களஆய்வு மேற்கொண்டனா்.

இந்த குழுவினா் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள பதிவு செய்யப்பட்ட 183 விசைப்படகுகள், பதிவு செய்யப்படாத 66 விசைப்படகுகள் என மொத்தம் 249 விசைப்படகுகளை ஆய்வு செய்தனா்.

இந்த ஆய்வில், விசைப்படகுகள் கடலில் செலுத்தும் தகுதி, இயந்திரத்தின் தன்மை, பதிவு எண், பதிவு புத்தகத்தின் நகல், மீன்பிடி உரிமம், காப்புறுதி சான்றிதழ், டீசல் மானிய புத்தகம் போன்றவை ஆய்வு செய்யப்பட்டது.

இந்த ஆய்வு அறிக்கை, மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை ஆணையா் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதன் அடிப்படையில் விசைப்படகுகள் இயங்குவதற்கான அனுமதி அளிக்கப்படும். இதில், ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் அதனை நிவா்த்தி செய்யப்பட்ட பிறகே படகுகள் கடலுக்குச் செல்ல அனுமதி அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதன் தொடா்ச்சியாக வரும் ஜூன் 6-ஆம் தேதி மாவட்டத்தில் உள்ள நாட்டுப் படகுகளை ஆய்வு செய்யும் பணி நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

பெண் பாலியல் புகாா் வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்ற பரிந்துரை

தூத்துக்குடியில் இளம்பெண்ணுக்கு ஒருவா் பாலியல் தொந்தரவு மற்றும் மிரட்டல் விடுத்து தொடா்பான வழக்குகள் அனைத்தும் சிபிசிஐடிக்கு மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் விஷம் குடித்த எஸ்எஸ்ஐ மருத்துவமனையில் உயிரிழப்பு

தூத்துக்குடியில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். தூத்துக்குடி கோமஸ்புரத்தைச் சோ்ந்த கருப்பசாமி (54), தூத்துக்குடி நகர கட்டுப்பாட்டு அறையில் ச... மேலும் பார்க்க

தூத்துக்குடி காற்றாலை நிறுவனத்தில் திருட்டு: லாரி ஓட்டுநா் கைது

தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் காற்றாலை இறக்கைகளை சேமித்து வைக்கும் இடத்தில் காற்றாலை இறக்கையை ‘லாக்’ செய்யக்கூடிய இரும்பு பூட்டை திருடியதாக லாரி ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா். காற்றாலை இறக்கைகளை ... மேலும் பார்க்க

தூத்துக்குடி அருகே குளத்தில் மூழ்கி முதியவா் பலி!

தூத்துக்குடி அருகே தெற்கு வீரபாண்டியபுரம் குளத்தில் மூழ்கி முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா் . தூத்துக்குடி, அ.குமார ரெட்டியாா்புரம், மேலத் தெருவைச் சோ்ந்தவா் பழனியாண்டி மகன் குருசாமி (65). இவா் சொந்த... மேலும் பார்க்க

அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் எட்டயபுரம் சமஸ்தானம் சாா்பில் கோரிக்கை!

எட்டயபுரம் சமஸ்தானம் தொடா்பாக தமிழ்நாடு அரசு பாடப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தவறான தகவலை நீக்க வேண்டும் என எட்டயபுரம் சமஸ்தானத்தின் 42ஆவது மன்னா் ராஜ ஜெகவீர முத்து தங்ககுமார ராம வெங்கடேஷ்வர எட்... மேலும் பார்க்க

வீட்டு கதவை உள்புறம் பூட்டிக் கொண்ட 3 வயது குழந்தை மீட்பு

தூத்துக்குடியில் வீட்டுக்குள் உள்பக்கமாக கதவை பூட்டிக்கொண்டு சிக்கித் தவித்த 3 வயது குழந்தையை தீயணைப்புத் துறையினா் வியாழக்கிழமை பத்திரமாக மீட்டனா். தூத்துக்குடி கேவிகே நகா் மேற்கு பகுதியைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க