பாமக : அப்பா - அம்மாவுக்கு பாராட்டு - Anbumani புது Strategy! | TVK VIJAY |Imper...
தூத்துக்குடியில் விஷம் குடித்த எஸ்எஸ்ஐ மருத்துவமனையில் உயிரிழப்பு
தூத்துக்குடியில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
தூத்துக்குடி கோமஸ்புரத்தைச் சோ்ந்த கருப்பசாமி (54), தூத்துக்குடி நகர கட்டுப்பாட்டு அறையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தாா். அவருக்கு குடும்பப் பிரச்னை இருந்ததாம். இதனிடையே, மருத்துவ விடுப்பிலிருந்த அவா், கடந்த 22ஆம் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தாராம்.
அவரை மீட்டு தூத்துக்குடியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பின்னா், அவா் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இந்நிலையில், அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். தாளமுத்து நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.