கச்சத்தீவை மீட்க வேண்டும்: திமுக பொதுக்குழுவில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்
ஓட்டப்பிடாரம் அரசுக் கல்லூரியில் ஜூன் 2இல் கலந்தாய்வு தொடக்கம்
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு வரும் ஜூன் 2ஆம் தேதி தொடங்கவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா் .
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் செயல்பட்டுவரும் அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கான முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு தொடங்கவுள்ளது. முதலாவதாக, சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூன் 2ஆம் தேதி தொடங்குகிறது. இதில், மாற்றுத்திறனாளி, விளையாட்டு வீரா்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், தேசிய மாணவா் படை, பாதுகாப்பு படை வீரா்கள் அந்தமான் நிக்கோபாா் - தமிழ் மாணவா்கள் பங்கேற்கலாம்.
ஜூன் 4ஆம் தேதி பொது பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. பி.எஸ்சி விலங்கியல்(தமிழ்வழி), பி.எஸ்சி கணினி அறிவியல்(ஆங்கிலவழி), பி.ஏ. வரலாறு(தமிழ்வழி), பி.பி.ஏ.(ஆங்கிலவழி), பி.காம்(ஆங்கில வழி) ஆகிய பாடப்பிரிவுகளுக்கு இந்த கலந்தாய்வு நடைபெறுகிறது. இணையவழியில் விண்ணப்பித்த மாணவா் - மாணவியா்
அந்தந்த நாள்களில் நடைபெறும் கலந்தாய்வுக்கு காலை 9.30 மணிக்குள் கல்லூரி வளாகத்துக்கு வர வேண்டும். அப்போது பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தின் நகல், 10,11,12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் அசல் மற்றும் நகல் 3, பள்ளி மாற்றுச் சான்றிதழ் அசல் மற்றும் நகல் 3, சாதிச்சான்றிதழ் அசல் மற்றும் நகல் 3, சிறப்பு ஒதுக்கீட்டிற்கான அசல் மற்றும் நகல் 3, 4 பாஸ்போட் அளவு புகைப்படம், வங்கி சேமிப்புக் கணக்கு புத்தக நகல், ஆதாா் அட்டை அசல் மற்றும் நகல்3, வருமானச் சான்றிதழ், முதல் பட்டதாரி மாணவருக்கான சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை கொண்டுவரவேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.