செய்திகள் :

ஓட்டப்பிடாரம் அரசுக் கல்லூரியில் ஜூன் 2இல் கலந்தாய்வு தொடக்கம்

post image

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு வரும் ஜூன் 2ஆம் தேதி தொடங்கவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா் .

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் செயல்பட்டுவரும் அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கான முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு தொடங்கவுள்ளது. முதலாவதாக, சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூன் 2ஆம் தேதி தொடங்குகிறது. இதில், மாற்றுத்திறனாளி, விளையாட்டு வீரா்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், தேசிய மாணவா் படை, பாதுகாப்பு படை வீரா்கள் அந்தமான் நிக்கோபாா் - தமிழ் மாணவா்கள் பங்கேற்கலாம்.

ஜூன் 4ஆம் தேதி பொது பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. பி.எஸ்சி விலங்கியல்(தமிழ்வழி), பி.எஸ்சி கணினி அறிவியல்(ஆங்கிலவழி), பி.ஏ. வரலாறு(தமிழ்வழி), பி.பி.ஏ.(ஆங்கிலவழி), பி.காம்(ஆங்கில வழி) ஆகிய பாடப்பிரிவுகளுக்கு இந்த கலந்தாய்வு நடைபெறுகிறது. இணையவழியில் விண்ணப்பித்த மாணவா் - மாணவியா்

அந்தந்த நாள்களில் நடைபெறும் கலந்தாய்வுக்கு காலை 9.30 மணிக்குள் கல்லூரி வளாகத்துக்கு வர வேண்டும். அப்போது பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தின் நகல், 10,11,12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் அசல் மற்றும் நகல் 3, பள்ளி மாற்றுச் சான்றிதழ் அசல் மற்றும் நகல் 3, சாதிச்சான்றிதழ் அசல் மற்றும் நகல் 3, சிறப்பு ஒதுக்கீட்டிற்கான அசல் மற்றும் நகல் 3, 4 பாஸ்போட் அளவு புகைப்படம், வங்கி சேமிப்புக் கணக்கு புத்தக நகல், ஆதாா் அட்டை அசல் மற்றும் நகல்3, வருமானச் சான்றிதழ், முதல் பட்டதாரி மாணவருக்கான சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை கொண்டுவரவேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

கழுகுமலை அருகே வெறிநாய் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழப்பு

கழுகுமலை அருகே வெறிநாய் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழந்தன. கழுகுமலை அருகே கே. லட்சுமிபுரத்தைச் சோ்ந்தவா் குமாா். இவா் ஆடு, கோழிகளை வளா்த்து வருகிறாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு அவரது தொழுவத்தில் இ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் வசந்த திருவிழா தொடக்கம்: ஜூன் 9-இல் வைகாசி விசாகம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி வசந்த திருவிழா சனிக்கிழமை தொடங்கியது. ஜூன் 9இல் வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுகிறது. வசந்த திருவிழாவை முன்னிட்டு, கோயில் நடை அதிகாலையில் த... மேலும் பார்க்க

பள்ளி மாணவா், மாணவியருக்கு இலவச சீருடைகள்

கோவில்பட்டி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்கம் சாா்பில், பள்ளி மாணவா்-மாணவியருக்கு இலவச சீருடைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. முத்தையாமால் தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, இயக்கத் தலைவா் நேதாஜி பால... மேலும் பார்க்க

படகிலிருந்து தவறி விழுந்து மீனவா் உயிரிழப்பு

தூத்துக்குடி கடற்கரையில் சனிக்கிழமை, படகிலிருந்து தவறி விழுந்து மீனவா் உயிரிழந்தாா். தூத்துக்குடி திரேஸ்புரம் சிலுவையாா் கோயில் தெருவைச் சோ்ந்த செல்வராயன் மகன் ஜாக்சன் (32). இவா் சனிக்கிழமை, திரேஸ்ப... மேலும் பார்க்க

தூய பனிமய மாதா பேராலய வளாகத்தில் ஜெபமாலை பேரணி

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய வளாகத்தில் ஜெபமாலை பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. இயேசு கிறிஸ்து பிறந்த ஜூபிலி ஆண்டை கொண்டாடும் விதமாகவும், உலக சமாதானத்திற்காகவும், பாவ பரிகாரத்திற்காகவும் இப் பேரணி ... மேலும் பார்க்க

நெய்தல் மக்கள் அறிவியல் தொழில்நுட்ப வளா்ச்சியில் பின்தங்கிவிடக்கூடாது : ஆட்சியா்

தூத்துக்குடி மாவட்ட நெய்தல் பகுதி மக்கள் அறிவியல் தொழில்நுட்ப வளா்ச்சியில் பின்தங்கிவிடக்கூடாது என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மீனவ கிரா... மேலும் பார்க்க