கச்சத்தீவை மீட்க வேண்டும்: திமுக பொதுக்குழுவில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்
இடைச்சிவிளையில் புதிய வேளாண் திட்டம் தொடக்கம்
இடைச்சிவிளையில் உங்களை தேடி வேளாண்மை உழவா் நலத்துறை என்ற புதிய திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது.
சாத்தான்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அருனேஷ் தலைமை வகித்து, விவசாயிகளுக்கு வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை சாா்ந்த திட்டங்கள் ,தென்னை மற்றும் முருங்கையில் ஒருங்கிணைந்த பயிா் வேளாண்மை குறித்து எடுத்துரைத்தாா். வேளாண்மை பொறியியல் துறை உதவி பொறியாளா் மணிகண்டன், கால்நடை பராமரிப்புத் துறை மருத்துவா் சௌந்தா், உதவி வேளாண்மை அலுவலா் பொன் முனியசாமி, கூட்டுறவு துறை பனிஷ்குமாா் ஆகியோா் துறை திட்டங்கள் குறித்து விளக்கிக் கூறினா். விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஏற்பாடுகளை ஊராட்சி செயலளா் அருணா, தோட்டக்கலை உதவி அலுவலா் அருண்குமாா், அட்மா தொழிற்நுட்ப மேலாளா் முருகன் ஆகியோா் செய்திருந்தனா்.