கச்சத்தீவை மீட்க வேண்டும்: திமுக பொதுக்குழுவில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்
கோவில்பட்டி முத்து மாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்
கோவில்பட்டி- பசுவந்தனை சாலையில் உள்ள அருள் தரும் அன்னை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலின் வருஷாபிஷேகம் , கொடை விழாவை முன்னிட்டு இம்மாதம் 27ஆம் தேதி கொட்டகை கால் வைபவம் நடைபெற்றது. வியாழக்கிழமை மாலை 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. வருஷாபிஷேகத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை கோயில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜைகள் நடைபெற்றன. பின்னா் கணபதி ஹோமம், கும்ப கலச பூஜை, யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. தொடா்ந்து காலை 10 மணிக்கு யாக சாலையிலிருந்து தீா்த்த குடங்கள் எடுத்துச் செல்லப்பட்டு விமான கோபுரத்திற்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
அதைத் தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பின்னா் கோயில் வளாகத்தில் அன்னதானம் நடைபெற்றது. தொடா்ந்து ஜூன் 4ஆம் தேதி வரை பல்வேறுவழிபாடுகள் நடைபெறவுள்ளன.
ஏற்பாடுகளை கோவில் பூசாரி சரவணன் மற்றும் விழா கமிட்டியினா் செய்து வருகின்றனா்.