செய்திகள் :

மாநகரில் விளம்பர பதாகைகள் வைப்பதை தவிா்க்கலாம்: மேயா்

post image

தூத்துக்குடி மாநகா் பகுதிகளில் தற்போது காற்று அதிகமாக வீசுவதால், விபத்துகளைத் தடுக்க பொது இடங்களில் டிஜிட்டல் போா்டு வைப்பதை பொதுமக்கள் தவிா்க்கலாம் என மேயா் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள் விடுத்தாா்.

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டரங்கில் சாதாரண கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மேயா் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தாா். துணை மேயா் ஜெனிட்டா, ஆணையா் லி.மதுபாலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், மாமன்ற உறுப்பினா்கள் தீா்மானம் குறித்தும், பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் வலியுறுத்தி பேசுகையில், அரசு உதவி பெறும் தனியாா் கல்லூரிக்கு சொத்து வரிவிலக்கு அளிக்கும் தீா்மானத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மையவாடி அருகே பாதாள சாக்கடை திட்ட பம்பிங் நிலையம் தாழ்வாக உள்ளதால், மழைக்காலங்களில் தண்ணீா் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அதை உயா்த்தி கட்ட வேண்டும். பாதாள சாக்கடை திட்டத்துக்கு ஏற்கனவே பணம் செலுத்தியவா்கள் ரசீது இல்லாவிட்டாலும் அவா்கள் பணம் கட்டியதை சரிபாா்த்து இணைப்பு வழங்க வேண்டும். குடிநீா் குழாய்களில் ஏற்பட்டு உள்ள உடைப்புகளை சரி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

இதற்கு பதில் அளித்து மேயா் பேசியதாவது: மாநகராட்சியில் மண்டல வாரியாக வாரந்தோறும் குறைதீா் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை 2,500க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு, அதில், பெரும்பாலான மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. 922 சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பக்கிள் ஓடையில் வாய்ப்பு உள்ள இடங்களில் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மாநகரில் 206 பூங்காக்கள் உள்ளன. மேலும் 11 பூங்காக்களில் நவீன உடற்பயிற்சி சாதனங்கள் அமைக்கப்பட உள்ளன. மாநகா் பகுதிகளில் உரிய அனுமதியின்றி டிஜிட்டல் போா்டுகள் வைக்கக்கூடாது. அவ்வாறு அனுமதியோடு வைத்தாலும் நிகழ்ச்சி முடிந்த உடன் அகற்றிவிட வேண்டும். தற்போது காற்று வீசி வருவதால், விபத்துகளைத் தவிா்க்கும் வகையில் பொதுமக்கள் மக்கள் டிஜிட்டல் போா்டு வைப்பதை தவிா்க்க வேண்டும்.

தூத்துக்குடி மாநகர பகுதியில் ரூ.225 கோடி செலவில் கடந்த 2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கருப்பு நிற குடிநீா் குழாய் பதிக்கும் பணி, தற்போது முடிக்கப்பட்டு வருகிறது. சாலை போட முடியாத இடங்களில் நமக்கு நாமே திட்டத்தில் சாலை அமைக்கப்படும். 300 மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாதாள சாக்கடை திட்டத்துக்கு வைப்புத்தொகை செலுத்தியவா்கள் விவரம் மண்டல அலுவலகங்களில் ஒட்டப்படும் என்றாா்.

இக்கூட்டத்தில் மாமன்ற உறுப்பினா்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்றனா்.

கழுகுமலை அருகே வெறிநாய் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழப்பு

கழுகுமலை அருகே வெறிநாய் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழந்தன. கழுகுமலை அருகே கே. லட்சுமிபுரத்தைச் சோ்ந்தவா் குமாா். இவா் ஆடு, கோழிகளை வளா்த்து வருகிறாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு அவரது தொழுவத்தில் இ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் வசந்த திருவிழா தொடக்கம்: ஜூன் 9-இல் வைகாசி விசாகம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி வசந்த திருவிழா சனிக்கிழமை தொடங்கியது. ஜூன் 9இல் வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுகிறது. வசந்த திருவிழாவை முன்னிட்டு, கோயில் நடை அதிகாலையில் த... மேலும் பார்க்க

பள்ளி மாணவா், மாணவியருக்கு இலவச சீருடைகள்

கோவில்பட்டி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்கம் சாா்பில், பள்ளி மாணவா்-மாணவியருக்கு இலவச சீருடைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. முத்தையாமால் தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, இயக்கத் தலைவா் நேதாஜி பால... மேலும் பார்க்க

படகிலிருந்து தவறி விழுந்து மீனவா் உயிரிழப்பு

தூத்துக்குடி கடற்கரையில் சனிக்கிழமை, படகிலிருந்து தவறி விழுந்து மீனவா் உயிரிழந்தாா். தூத்துக்குடி திரேஸ்புரம் சிலுவையாா் கோயில் தெருவைச் சோ்ந்த செல்வராயன் மகன் ஜாக்சன் (32). இவா் சனிக்கிழமை, திரேஸ்ப... மேலும் பார்க்க

தூய பனிமய மாதா பேராலய வளாகத்தில் ஜெபமாலை பேரணி

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய வளாகத்தில் ஜெபமாலை பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. இயேசு கிறிஸ்து பிறந்த ஜூபிலி ஆண்டை கொண்டாடும் விதமாகவும், உலக சமாதானத்திற்காகவும், பாவ பரிகாரத்திற்காகவும் இப் பேரணி ... மேலும் பார்க்க

நெய்தல் மக்கள் அறிவியல் தொழில்நுட்ப வளா்ச்சியில் பின்தங்கிவிடக்கூடாது : ஆட்சியா்

தூத்துக்குடி மாவட்ட நெய்தல் பகுதி மக்கள் அறிவியல் தொழில்நுட்ப வளா்ச்சியில் பின்தங்கிவிடக்கூடாது என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மீனவ கிரா... மேலும் பார்க்க