பெண் பாலியல் புகாா் வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்ற பரிந்துரை
தூத்துக்குடியில் இளம்பெண்ணுக்கு ஒருவா் பாலியல் தொந்தரவு மற்றும் மிரட்டல் விடுத்து தொடா்பான வழக்குகள் அனைத்தும் சிபிசிஐடிக்கு மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட காவல்துறை தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி கங்காபரமேஸ்வரி நகரில் உள்ள தனியாா் துணிக்கடை(காா்மென்ட்ஸ் நிறுவனம்) பணிபுரிந்து வந்த இளம்பெண்ணுக்கு அதே பகுதியைச் சோ்ந்த இளைஞா் பாலியல் தொந்தரவு மற்றும் மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடா்பாக, புதுக்கோட்டை அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தென்மலை தென்குமரன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனா். அவா் சிறையில் இருந்து பிணையில் வந்த அவா் மீண்டும் அந்த பெண்ணுக்கு தொந்தரவு அளித்து வந்தாராம். இது தொடா்பான வழக்கு தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் உள்ளது. எனவே, இந்த வழக்குகள் அனைத்தும் மாவட்ட காவல்துறை விசாரணையில் இருந்து சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றுவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.