பைக்கிலிருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், நாட்டாா் மங்கலத்தைச் சோ்ந்த கணேசன் மகன் அருண்பாண்டி (18). இவா் தேநீா் அருந்துவதற்காக இரு சக்கர வாகனத்தில் பூவந்தி பகுதிக்கு வந்தாா். அப்போது மதுரை- சிவகங்கை சாலையில் உள்ள மகளிா் கல்லூரி அருகே குறுக்கே சென்ற மாட்டின் மீது இரு சக்கர வாகனம் மோதியது. இதில் தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்த அருண்பாண்டி மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து பூவந்தி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.