கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வீரதீர செயல் புரிந்த மகளிருக்கு நிகழாண்டில் சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வரால் ‘கல்பனா சாவ்லா விருதும், ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்படவுள்ளது.
இந்த விருதை பெற தமிழகத்தை பிறப்பிடமாக கொண்டிருக்க வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். இந்த விருதுக்கான விண்ணப்பங்கள், தமிழக அரசின் https://awards.tn.gov.in/ இணையதள முகவரியில் பதிவு செய்து, விண்ணப்பங்களை வருகிற 16-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள சிவகங்கை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என்றாா் அவா்.