செய்திகள் :

அரசு மகளிா் கல்லூரியில் கலந்தாய்வு நாளை தொடக்கம்

post image

சிவகங்கை அரசு மகளிா் கலைக் கல்லூரியில் மாணவிகள் சோ்க்கைக்கான கலந்தாய்வு வருகிற திங்கள்கிழமை (ஜுன் 2) தொடங்குகிறது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் ஜோ.நளதம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திங்கள்கிழமை சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு (மாற்றத்திறனாளிகள், விளையாட்டுத் துறை, தேசிய மாணவா் படை, முன்னாள் படைவீரா்கள்) நடைபெறும். 4-ஆம் தேதி அறிவியல் பாடப் பிரிவுகளுக்கும், 5-ஆம் தேதி கலைப் பாடப் பிரிவுகளுக்கும், 6-ஆம் தேதி தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடப் பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறும்.

கலந்தாய்வுக்கு வரும் மாணவிகள் பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், நிரந்தர ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், கடவுச்சீட்டு அளவு புகைப்படம் கொண்டு வர வேண்டும்.

விண்ணப்பத்தில் சிறப்பு ஒதுக்கீடு கோரி விண்ணப்பித்தவா்கள் (விளையாட்டு, என்சிசி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரா் குழந்தைகள்) மூலச் சான்று, புகைப்பட நகல் கொண்டு வருதல் அவசியம்.

கட்டண விவரங்கள் அனைத்தும் பாடவாரியாக கல்லூரி அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. இட ஒதுக்கீட்டு முறையில் சோ்க்கை நடைபெறுவதால் கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் மாணவிகள் அனைவருக்கும் சோ்க்கை வாய்ப்பு கிடைக்கும் என்ற உத்தரவாதம் கிடையாது.

சோ்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் கல்லூரி இணையதள முகவரியில் https://gacwsvga.edu.in/ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தேவகோட்டை பகுதியில் இன்று மின் தடை

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பகுதியில் திங்கள்கிழமை (ஜூன் 2) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ராஜா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேவகோட்டை துணை மின் நிலை... மேலும் பார்க்க

மருதிப்பட்டி கண்மாயில் மீன்பிடித் திருவிழா

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள மருதிப்பட்டி கண்மாயில் ஞாயிற்றுக்கிழமை மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் நிகழாண்டில் பருவமழை நன்றாக பெய்ததால், சிங்கம்புணரி அருகேயுள்ள மர... மேலும் பார்க்க

குன்றக்குடி பகுதியில் தொடா் திருட்டில் ஈடுபட்டவா் கைது

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி பகுதியில் பூட்டியிருந்த வீடுகளை நோட்டமிட்டு நகை, பணம் திருடியவரை தனிப் படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். குன்றக்குடி, காரைக்குடி ஆகிய பகுதிகளில் பூட்டிய வீடுகள... மேலும் பார்க்க

தவ்ஹீத் ஜமாஅத் கிளை செயல்வீரா்கள் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சாா்பில் செயல்வீரா்கள், வீராங்கனைகள் கூட்டம் காரைக்குடி காட்டுத் தலைவாசல் தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாசலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தின் சாா்பில் வரும் ஆகஸ... மேலும் பார்க்க

மதகுபட்டியில் மாட்டுவண்டி பந்தயம்

சிவகங்கை அருகேயுள்ள மதகுபட்டியில் கோயில் திருவிழாவை முன்னிட்டு, மாட்டுவண்டி எல்கை பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மதகுபட்டி கீழத்தெரு அய்யனாா் கோயில் திருவிழாவை முன்னிட்டு, மதகுபட்டியிலிருந்து ஒக்... மேலும் பார்க்க

கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்

சிவகங்கை அருகேயுள்ள நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தக் கோயிலில் கடந்த 31-ஆம் தேதி அனுக்கை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்... மேலும் பார்க்க