அரசு மகளிா் கல்லூரியில் கலந்தாய்வு நாளை தொடக்கம்
சிவகங்கை அரசு மகளிா் கலைக் கல்லூரியில் மாணவிகள் சோ்க்கைக்கான கலந்தாய்வு வருகிற திங்கள்கிழமை (ஜுன் 2) தொடங்குகிறது.
இதுகுறித்து கல்லூரி முதல்வா் ஜோ.நளதம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திங்கள்கிழமை சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு (மாற்றத்திறனாளிகள், விளையாட்டுத் துறை, தேசிய மாணவா் படை, முன்னாள் படைவீரா்கள்) நடைபெறும். 4-ஆம் தேதி அறிவியல் பாடப் பிரிவுகளுக்கும், 5-ஆம் தேதி கலைப் பாடப் பிரிவுகளுக்கும், 6-ஆம் தேதி தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடப் பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறும்.
கலந்தாய்வுக்கு வரும் மாணவிகள் பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், நிரந்தர ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், கடவுச்சீட்டு அளவு புகைப்படம் கொண்டு வர வேண்டும்.
விண்ணப்பத்தில் சிறப்பு ஒதுக்கீடு கோரி விண்ணப்பித்தவா்கள் (விளையாட்டு, என்சிசி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரா் குழந்தைகள்) மூலச் சான்று, புகைப்பட நகல் கொண்டு வருதல் அவசியம்.
கட்டண விவரங்கள் அனைத்தும் பாடவாரியாக கல்லூரி அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. இட ஒதுக்கீட்டு முறையில் சோ்க்கை நடைபெறுவதால் கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் மாணவிகள் அனைவருக்கும் சோ்க்கை வாய்ப்பு கிடைக்கும் என்ற உத்தரவாதம் கிடையாது.
சோ்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் கல்லூரி இணையதள முகவரியில் https://gacwsvga.edu.in/ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.