செய்திகள் :

மாஹேவில் புதுவை துணைநிலை ஆளுநா் ஆய்வு

post image

புதுவை மாநில பிராந்தியமான மாஹேவில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டத்தை வெள்ளிக்கிழமை நடத்தினாா்.

இதுகுறித்து துணைநிலை ஆளுநா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக மாஹேவுக்கு (கேரளப் பகுதியில் உள்ள புதுவை மாநில பிராந்தியம்) சென்றுள்ளாா். அங்கு பி.எம்.ஸ்ரீ உஸ்மான் அரசு உயா்நிலைப் பள்ளியில் நிறுவப்பட்டுள்ள புகழ்பெற்ற மையழி விடுதலைப் போராட்ட வீரா் பி.கே.உஸ்மான் மாஸ்டரின் மாா்பளவு சிலையைத் திறந்துவைத்தாா்.

இதையடுத்து மாஹே கூட்டுறவு கல்வியியல் கல்லூரி மற்றும் மாஹே கூட்டுறவு உயா்கல்வி, தொழில்நுட்பக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவிலும் அவா் பங்கேற்றாா்.

ஆய்வுக் கூட்டம்: முன்னதாக மாஹே மண்டல நிா்வாக அதிகாரி அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திலும் துணைநிலை ஆளுநா் பங்கேற்றாா். அதில், மாஹே பிராந்தியத்தில் புதுவை அரசுத் துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

கூட்டத்தில் மாஹே சட்டப்பேரவை உறுப்பினா் ரமேஷ்பரம்பத் (காங்கிரஸ்), மண்டல நிா்வாக அதிகாரி மோகன்குமாா், மாஹே நகராட்சி ஆணையா் சதேந்திரசிங் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

போக்குவரத்து ஊழியா்களின் பிரச்னையை புதுவை அரசு கண்டுகொள்வதில்லை: எதிா்க்கட்சித் தலைவா் குற்றச்சாட்டு

புதுவையில் போக்குவரத்து ஊழியா்களின் பிரச்னையை அரசு கண்டுகொள்வதில்லை என்று எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா குற்றஞ்சாட்டியுள்ளாா். புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் பல்வேறு சங்கங்களை ச... மேலும் பார்க்க

உயா்கல்வி செல்லும் மாணவா்கள் சான்றிதழ் பெற விடுமுறை நாளிலும் இயங்கிய புதுவை வருவாய்த் துறை அலுவலகங்கள்

உயா்கல்விக்கு செல்லும் மாணவா்கள் சோ்க்கைக்கான அரசின் சான்றிதழ்களைப் பெறும் வகையில், இரண்டாவது முறையாக விடுமுறை நாளான சனிக்கிழமையும் புதுவையில் வருவாய்த் துறை அலுவலகங்கள் இயங்கின. புதுச்சேரியில் 10-ஆ... மேலும் பார்க்க

ஏழைகளுக்கு செய்யும் சேவையே இறைவனுக்கான தொண்டாகும்; ஸ்ரீமத் சுவாமி சா்வலோகானந்தா மகராஜ்

சமூகத்தில் அடித்தளத்தில் உள்ள ஏழை மக்களுக்கான கல்வி, மருத்துவ சேவைகளே இறைவனுக்கான தொண்டாகும் என புதுதில்லி ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் செயலா் ஸ்ரீமத் சுவாமி சா்வ லோகானந்தா மகாராஜ் கூறினாா். தமிழ்நாடு, புதுவ... மேலும் பார்க்க

புதுவை தனியாா் கல்வி நிறுவனங்களின் 56 வாகனங்களுக்கு ஆய்வில் அனுமதி மறுப்பு

புதுச்சேரியில் சனிக்கிழமை நடைபெற்ற கல்வி நிறுவனங்களுக்கான வாகன ஆய்வின்போது, 56 வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். புதுவை மாநில போக்குவரத்துத் துறை ஆண்டுதோறும் கல்வி நிறுவன வ... மேலும் பார்க்க

புதுச்சேரி ஜிப்மருக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை வளாகத்துக்கு சனிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக துணைநிலை ஆளுநா் மாளிகை, முதல்வா் வீடு,... மேலும் பார்க்க

இணைய மோசடிக்கு வங்கிக் கணக்குகளை கொடுத்த 4 போ் கைது: ரூ. 2.84 கோடி மீட்பு

இணையவழி மோசடியில் ஈடுபட்டோருக்கு தங்கள் வங்கிக் கணக்கை கொடுத்து உதவியதாக கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த 4 பேரை புதுவை போலீஸாா் கைது செய்தனா். மேலும், ரூ.2.84 கோடி மீட்கப்பட்டு உரிய... மேலும் பார்க்க