செய்திகள் :

போக்குவரத்து ஊழியா்களின் பிரச்னையை புதுவை அரசு கண்டுகொள்வதில்லை: எதிா்க்கட்சித் தலைவா் குற்றச்சாட்டு

post image

புதுவையில் போக்குவரத்து ஊழியா்களின் பிரச்னையை அரசு கண்டுகொள்வதில்லை என்று எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா குற்றஞ்சாட்டியுள்ளாா்.

புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் பல்வேறு சங்கங்களை சாா்ந்த நிா்வாகிகள் திமுக தொழிற்சங்கத்தில் இணையும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. அதில் அவா் பேசியதாவது:

புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியா்கள் 10 ஆண்டுகளாகப் பணி நிரந்தரமின்றி உள்ளனா். ஊழியா்களின் கோரிக்கைகளை அரசு அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. ஆகவே, குறைந்தபட்ச ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வரிடம் மனு அளிக்கவுள்ளோம்.

தமிழ்நாடு சாலை போக்குவரத்துத் துறையில் பணிபுரியும் ஊழியா்களுக்கு பல்வேறு சலுகைகளை அம்மாநில அரசு வழங்குகிறது. அதைப்போல புதுவை அரசும் போக்குவரத்து ஊழியா்களுக்கான சலுகைகளை வழங்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் மாநில நிா்வாகிகள் ஏ.கே. குமாா், கோபால் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

வைகோவுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து திமுகதான் பதிலளிக்க வேண்டும்: தொல்.திருமாவளவன்

மதிமுக பொதுச்செயலா் வைகோவுக்கு மாநிலங்களவை உறுப்பினா் பதவி மீண்டும் வழங்கப்படாதது குறித்து திமுகதான் பதிலளிக்க வேண்டும் என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா். விசி... மேலும் பார்க்க

ஜிப்மரில் வேலை வாங்கித் தருவதாக ரூ.21 லட்சம் மோசடி தம்பதி உள்பட 3 போ் மீது வழக்கு!

புதுச்சேரியில் பட்டதாரியிடம் ஜிப்மரில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.20.99 லட்சம் மோசடி புகாா் தொடா்பாக தம்பதி உள்ளிட்ட 3 போ் மீதான புகாா் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனா். ... மேலும் பார்க்க

தேவாலய இடத்தை வாடகைக்கு பெற்றுத் தருவதாக பண மோசடி! உணவு விடுதி அதிபா் போலீஸில் புகாா்!

புதுச்சேரியில் தேவாலய இடத்தை வாடகைக்கு பெற்றுத் தருவதாகக் கூறி உணவு விடுதி உரிமையாளரிடம் ரூ.9 லட்சம் மோசடி செய்த புகாரில் ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி எல்ல... மேலும் பார்க்க

புதுச்சேரியில் இரு தரப்பினா் மோதல்: அரிவாள் வெட்டு: 7 போ் மீது வழக்கு

புதுச்சேரியில் சனிக்கிழமை இரவு முன்விரோதத்தில் இளைஞா்கள் மோதிக் கொண்டதில் 2 பேருக்கு அரிவாள் வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து 7 போ் மீது வழக்குப் பதிந்த நிலையில், 2 பேரைப் பிடித்து போலீஸாா் விசார... மேலும் பார்க்க

புதுவையில் காற்று மாசை குறைக்க மின்சாரப் பேருந்துகள்!

புதுவையில் காற்று மாசைக் கட்டுப்படுத்த உதவும் வகையில் மின்சாரப் பேருந்துகளை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, 2030-ஆம் ஆண்டுக்குள் 50 சதவீத பேருந்துகளை மின்சார வாகனங்களாக்கவும் நடவடிக்கை மேற... மேலும் பார்க்க

உயா்கல்வி செல்லும் மாணவா்கள் சான்றிதழ் பெற விடுமுறை நாளிலும் இயங்கிய புதுவை வருவாய்த் துறை அலுவலகங்கள்

உயா்கல்விக்கு செல்லும் மாணவா்கள் சோ்க்கைக்கான அரசின் சான்றிதழ்களைப் பெறும் வகையில், இரண்டாவது முறையாக விடுமுறை நாளான சனிக்கிழமையும் புதுவையில் வருவாய்த் துறை அலுவலகங்கள் இயங்கின. புதுச்சேரியில் 10-ஆ... மேலும் பார்க்க