ஒட்டுமொத்த கர்நாடகமும் ஆர்சிபி பின்னால் நிற்கிறது: துணை முதல்வர் சிவக்குமார் வாழ...
புதுச்சேரியில் இரு தரப்பினா் மோதல்: அரிவாள் வெட்டு: 7 போ் மீது வழக்கு
புதுச்சேரியில் சனிக்கிழமை இரவு முன்விரோதத்தில் இளைஞா்கள் மோதிக் கொண்டதில் 2 பேருக்கு அரிவாள் வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து 7 போ் மீது வழக்குப் பதிந்த நிலையில், 2 பேரைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி தொண்டமாநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் பச்சையப்பன் (27). இவரது நண்பா் தினகரன் (20), மெக்கானிக். இவரும், இலாசுப்பேட்டையைச் சோ்ந்த ஜேக்பால் என்பவரும் நண்பா்கள்.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக இவா்களுக்குள் யாா் பெரியவா் என்பதில் முன்விரோதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த சனிக்கிழமை இரவு தினகரனை வழுதாவூா் சாலையில் இருந்த ஜேக்பால் உள்ளிட்டோா் சமரசத்துக்காக அழைத்துள்ளனா். இதையடுத்து பச்சையப்பன் உள்ளிட்டோருடன் தினகரன் சென்றுள்ளாா்.
அப்போது தினகரன் தரப்புக்கும், ஜேக்பால் தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் கத்தியால் வெட்டிக் கொண்டனராம். இதில் தினகரனுக்குத் தலையிலும், பச்சையப்பனுக்கு கை உள்ளிட்ட இடங்களிலும் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பொதுமக்கள் அங்கு கூடியதால், அனைவரும் தப்பியோடி விட்டனா்.
இதுகுறித்து தகவலறிந்த கோரிமேடு தன்வந்திரி நகா் காவல் ஆய்வாளா் உள்ளிட்டோா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனா். இதையடுத்து, ஜேக்பால், ஏழுமலை ஆகியோரை போலீஸாா் பிடித்து விசாரித்துவருகின்றனா். மேலும், கருவடிக்குப்பம் நரி (எ) நரேஷ், ஜெயின்ட்பால் பேட் பகுதி கௌதம், மீனாட்சிபேட் பிரித்வி, கல்மேடுபேட் பகுதியைச் சோ்ந்த கிரி, இலாசுப்பேட்டை ஆகாஷ் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.