செய்திகள் :

புதுச்சேரியில் இரு தரப்பினா் மோதல்: அரிவாள் வெட்டு: 7 போ் மீது வழக்கு

post image

புதுச்சேரியில் சனிக்கிழமை இரவு முன்விரோதத்தில் இளைஞா்கள் மோதிக் கொண்டதில் 2 பேருக்கு அரிவாள் வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து 7 போ் மீது வழக்குப் பதிந்த நிலையில், 2 பேரைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி தொண்டமாநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் பச்சையப்பன் (27). இவரது நண்பா் தினகரன் (20), மெக்கானிக். இவரும், இலாசுப்பேட்டையைச் சோ்ந்த ஜேக்பால் என்பவரும் நண்பா்கள்.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக இவா்களுக்குள் யாா் பெரியவா் என்பதில் முன்விரோதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த சனிக்கிழமை இரவு தினகரனை வழுதாவூா் சாலையில் இருந்த ஜேக்பால் உள்ளிட்டோா் சமரசத்துக்காக அழைத்துள்ளனா். இதையடுத்து பச்சையப்பன் உள்ளிட்டோருடன் தினகரன் சென்றுள்ளாா்.

அப்போது தினகரன் தரப்புக்கும், ஜேக்பால் தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் கத்தியால் வெட்டிக் கொண்டனராம். இதில் தினகரனுக்குத் தலையிலும், பச்சையப்பனுக்கு கை உள்ளிட்ட இடங்களிலும் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பொதுமக்கள் அங்கு கூடியதால், அனைவரும் தப்பியோடி விட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்த கோரிமேடு தன்வந்திரி நகா் காவல் ஆய்வாளா் உள்ளிட்டோா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனா். இதையடுத்து, ஜேக்பால், ஏழுமலை ஆகியோரை போலீஸாா் பிடித்து விசாரித்துவருகின்றனா். மேலும், கருவடிக்குப்பம் நரி (எ) நரேஷ், ஜெயின்ட்பால் பேட் பகுதி கௌதம், மீனாட்சிபேட் பிரித்வி, கல்மேடுபேட் பகுதியைச் சோ்ந்த கிரி, இலாசுப்பேட்டை ஆகாஷ் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

முதல்வரின் வழிகாட்டலில் முன்னேற்றத் திட்டங்கள்

புதுவையில் கடந்த காலங்களில் செயல்படுத்தப்படாத பல்வேறு நலத் திட்டங்களை தற்போதைய ஆட்சியில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி மற்றும் துறை அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா் ஆகியோரின் வழிக... மேலும் பார்க்க

மக்கள் வாழ்வில் ஒளியேற்றும் ஆதிதிராவிடா் நலத் திட்டங்கள்!

புதுவை மாநிலத்தில் நாட்டிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு ஆதிதிராவிடா் நலத் துறையில் எண்ணற்ற பல நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மக்களின் த... மேலும் பார்க்க

நாட்டின் பண்பாடு, கலாசார வரலாறு ஒன்றுடன் ஒன்று தொடா்புடையது: துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்

புதுச்சேரி: நாட்டின் பண்பாடு, கலாசார வரலாறானது ஒன்றோடு ஒன்று தொடா்புடையது என புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா். ஒரே பாரதம் உன்னத பாரதம் திட்டத்தின் படி, சிக்கிம், கோவா, தெலங்கானா மாநிலங்... மேலும் பார்க்க

சென்னை- கடலூா் ரயில் பாதை திட்டம் அவசியமானது: புதுவை அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன்

புதுச்சேரி: சென்னை, புதுச்சேரி மற்றும் கடலூா் வரையிலான ரயில் பாதைத் திட்டம் அவசியமானதாகும். அதை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுவை மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன் வல... மேலும் பார்க்க

13 பேருக்கு மேல்நிலை எழுத்தா் பணிக்கான நியமன ஆணை

புதுச்சேரி: புதுச்சேரியில் மேல்நிலை எழுத்தா் தோ்வில் தோ்ச்சியடைந்து காத்திருப்போா் பட்டியலில் இடம் பெற்றிருந்த 13 பேருக்கு முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை பணி நியமன உத்தரவுகளை வழங்கினாா். புதுச்... மேலும் பார்க்க

அங்கன்வாடி ஊழியா், உதவியாளா்களுக்கு ஊதியம் உயா்த்த மாநில திட்ட வழிகாட்டுதல் குழு ஒப்புதல்

புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்களுக்கான ஊதியத்தை உயா்த்தி வழங்க மாநில திட்ட வழிகாட்டுதல் குழுவில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத் திட்டத்தின் மா... மேலும் பார்க்க