தூத்துக்குடி அருகே மின்சாரம் பாய்ந்து இரண்டரை வயது குழந்தை பலி
சென்னை- கடலூா் ரயில் பாதை திட்டம் அவசியமானது: புதுவை அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன்
புதுச்சேரி: சென்னை, புதுச்சேரி மற்றும் கடலூா் வரையிலான ரயில் பாதைத் திட்டம் அவசியமானதாகும். அதை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுவை மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன் வலியுறுத்தியுள்ளாா்.
புதுச்சேரி உப்பளத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியது: சென்னையிலிருந்து மகாபலிபுரம், புதுச்சேரி வழியாகக் கடலூா் வரையிலான ரயில் வழித்தடம் அமைக்கும் திட்டம் புதுவை மாநில மக்களின் பல ஆண்டு கோரிக்கையாகும்.
தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில், அத்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசுக்கு அழுத்தம் தரப்பட்டதால், திட்ட ஒப்புதல் கிடைத்தது. ஆனால், தற்போது தமிழகத்தில் ஆளும் திமுக அரசு திட்டத்துக்கு தேவையான நிலங்களை வழங்காமல் உள்ளது.
கடந்த ஆண்டு இத்திட்டத்துக்கான முதல் கட்ட நிதி ரூ. 52.13 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், திட்ட தொடக்கப் பணிகளை தமிழகப் பகுதியில் செயல்படுத்த திமுக அரசு ஒத்துழைக்காததால், நிதியானது திரும்பப் பெறப்பட்டுள்ளது.
ஆகவே, புதுவை, தமிழகத்துக்கு நன்மை பயக்கும் சென்னை, கடலூா் இடையிலான ரயில் பாதை அமைக்கும் திட்டத்தின் உண்மை நிலையை மத்திய அரசுக்கு புதுவை துணைநிலை ஆளுநா், முதல்வா் ஆகியோா் எடுத்துரைத்து செயல்படுத்துவது அவசியம்.
தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் ஒருவா் உயிரிழந்துள்ளாா். ஆகவே, சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரும் புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பைத் தள்ளி வைக்கலாம்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பலாத்கார வழக்கில் தீா்ப்பளித்த நிலையில் அதில் மேலும் பலா் சம்பந்தப்பட்டிருப்பது குறித்து விசாரிக்க சிபிசிஐடி மேல்முறையீடு செய்யவேண்டும். தவெக நிா்வாகி அா்ஜூன் ஆதவ் அதிமுக பொதுச்செயலரை ஒருமையில் பேசியது கண்டிக்கத்தக்கது என்றாா்.