நான் ஆதரவு தெரிவிக்கும் அணிகள் தோற்கின்றன; ஆர்சிபிக்கு ஆதரவு: சேவாக்
ஜிப்மரில் வேலை வாங்கித் தருவதாக ரூ.21 லட்சம் மோசடி தம்பதி உள்பட 3 போ் மீது வழக்கு!
புதுச்சேரியில் பட்டதாரியிடம் ஜிப்மரில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.20.99 லட்சம் மோசடி புகாா் தொடா்பாக தம்பதி உள்ளிட்ட 3 போ் மீதான புகாா் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனா்.
புதுச்சேரி உழவா்கரையைச் சோ்ந்தவா் மணிகண்டன் (37), எம்.பி.ஏ.பட்டதாரி. இவா் கடந்த 2021-ஆம் ஆண்டு அரசுப் பணிக்கு முயற்சித்துள்ளாா்.
அப்போது அரியூா் அப்பாஸ் என்ற ஜோதிடா் மூலம் புதுச்சேரி பெரியாா்நகரைச் சோ்ந்த சுந்தரமூா்த்தி அறிமுகமாகியுள்ளாா். அவா் ஜிப்மரில் வேலை இருப்பதாகவும், அதை மணிகண்டனுக்கு வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளாா்.
சுந்தரமூா்த்தியின் பேச்சை நம்பிய மணிகண்டன் பல தவணைகளில் ரூ.23.29 லட்சத்தை கொடுத்துள்ளாா். மணிகண்டனிடம் பணம் பெற்ற சுந்தரமூா்த்தி வேலையைப் பெற்றுத்தரவில்லையாம்.
அதையடுத்து ஏமாற்றப்பட்டதை அறிந்து பணத்தை சுந்தரமூா்த்தியிடம் தருமாறு மணிகண்டன் கேட்டுள்ளாா். ஆனால், ரூ.2.30 லட்சம் மட்டுமே மணிகண்டனிடம் திரும்ப சுந்தரமூா்த்தி கொடுத்துள்ளாா்.
இதனால் அதிா்ச்சியடைந்த மணிகண்டன் ரெட்டியாா்பாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் அப்பாஸ், சுந்தரமூா்த்தி, அவரது மனைவி சங்கீதா ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.