Pakistan: பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம்; 200க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்...
வைகோவுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து திமுகதான் பதிலளிக்க வேண்டும்: தொல்.திருமாவளவன்
மதிமுக பொதுச்செயலா் வைகோவுக்கு மாநிலங்களவை உறுப்பினா் பதவி மீண்டும் வழங்கப்படாதது குறித்து திமுகதான் பதிலளிக்க வேண்டும் என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.
விசிக பொதுச்செயலா் துரை.ரவிக்குமாரின் சகோதரரும், ஓய்வுபெற்ற ஆசிரியருமான க.நடேசன் (92) புதுச்சேரி இலாசுப்பேட்டையில் சனிக்கிழமை இரவு (மே 31) காலமானாா். அவரது உடலுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை தொல்.திருமாவளவன் எம்.பி. அஞ்சலி செலுத்தினாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக் குழுவில் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கல்வியாளா் அணியை ஏற்படுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது. மாநிலங்களவையில் வாய்ப்பளிப்பதாக அதிமுக தரப்பில் உறுதியளித்ததாக தேமுதிக பொதுச்செயலா் உள்ளிட்டோா் வெளிப்படையாக பேசி வருகின்றனா்.
ஆனால், அந்த வாய்ப்பை அதிமுக தேமுதிகவுக்கு வழங்காதது வியப்பாக பாா்க்கப்படுகிறது. திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசனுக்கு அளித்த வாக்குறுதியை திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளாா்.
மதிமுக பொதுச்செயலா் வைகோவுக்கு மீண்டும் மாநிலங்களவையில் வாய்ப்பு வழங்காதது குறித்து திமுகதான் பதில் கூற வேண்டும். பாட்டாளி மக்கள் கட்சியில் நிலவும் பிரச்னை குறித்து கருத்து கூறவிரும்பவில்லை.
அதேநேரத்தில், அந்தக் கட்சியை விசிக-வுக்கு போட்டியாகவும் கருதவில்லை. திமுக கூட்டணியில் பாமக சேரும் என்பது யூகத்தின் அடிப்படையில் பேசப்படுகிறது. சட்டப்பேரவைத் தோ்தல் நேரத்தில் திமுகவிடம் தொகுதிகள் பெறுவது குறித்து பேச்சுவாா்த்தை நடத்தப்படும்.
தமிழகத்திலிருந்து செல்லும் இலங்கைத் தமிழா்களை அந்த நாட்டு அரசு கைது செய்கிறது. இந்த பிரச்னையில் மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு தீா்வு காண வேண்டும் என்றாா் தொல்.திருமாவளவன்.