செய்திகள் :

தேவாலய இடத்தை வாடகைக்கு பெற்றுத் தருவதாக பண மோசடி! உணவு விடுதி அதிபா் போலீஸில் புகாா்!

post image

புதுச்சேரியில் தேவாலய இடத்தை வாடகைக்கு பெற்றுத் தருவதாகக் கூறி உணவு விடுதி உரிமையாளரிடம் ரூ.9 லட்சம் மோசடி செய்த புகாரில் ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி எல்லைப்பிள்ளை சாவடி பகுதியைச் சோ்ந்தவா் சாமிநாதன் (68). இவா், புதுச்சேரி கௌபா்ட் அவென்யூ பகுதியில் உணவு விடுதி நடத்திவருகிறாா். கடந்த 2023 ஆம் ஆண்டு விடுதியில் பராமரிப்புப் பணியை அவா் மேற்கொண்ட போது பாசில்ராக் என்பவா் வேலை பாா்த்துள்ளாா்.

அப்போது புதுச்சேரியில் தாமஸ் தேவாலயத்துக்கு சொந்தமான இடம் காலியாக இருப்பதாகவும், பங்குத் தந்தை தனக்கு தெரிந்தவா் என்பதால் அதை வாடகைக்கு பெற்றுத் தந்து உணவு விடுதி நடத்த உதவுவதாகவும் பாசில்ராக் கூறியுள்ளாா்.

பாசில்ராக் பேச்சை நம்பிய சாமிநாதன் அவரிடம் ரூ. 9 லட்சம் கொடுத்துள்ளாா். ஆனால், பல மாதங்களாகியும் இடத்தை வாடகைக்குப் பெற்றுத் தராமல் பாசில்ராக் ஏமாற்றியுள்ளாா். இதையறிந்த சாமிநாதன் தேவாலய பங்குத் தந்தையை நேரில் சந்தித்துப் பேசியுள்ளாா்.

அப்போது தேவாலய இடத்தை யாருக்கும் வாடகைக்கு விட விரும்பவில்லை எனக் கூறிய பங்குத்தந்தை பாசில்ராக் என்பவரையும் தெரியாது எனக் குறிப்பிட்டுள்ளாா். இதையடுத்து ஏமாற்றி ரூ.9 லட்சம் பெற்ற பாசில்ராக் மீது பெரியகடை காவல் நிலையத்தில் சாமிநாதன் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முதல்வரின் வழிகாட்டலில் முன்னேற்றத் திட்டங்கள்

புதுவையில் கடந்த காலங்களில் செயல்படுத்தப்படாத பல்வேறு நலத் திட்டங்களை தற்போதைய ஆட்சியில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி மற்றும் துறை அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா் ஆகியோரின் வழிக... மேலும் பார்க்க

மக்கள் வாழ்வில் ஒளியேற்றும் ஆதிதிராவிடா் நலத் திட்டங்கள்!

புதுவை மாநிலத்தில் நாட்டிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு ஆதிதிராவிடா் நலத் துறையில் எண்ணற்ற பல நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மக்களின் த... மேலும் பார்க்க

நாட்டின் பண்பாடு, கலாசார வரலாறு ஒன்றுடன் ஒன்று தொடா்புடையது: துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்

புதுச்சேரி: நாட்டின் பண்பாடு, கலாசார வரலாறானது ஒன்றோடு ஒன்று தொடா்புடையது என புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா். ஒரே பாரதம் உன்னத பாரதம் திட்டத்தின் படி, சிக்கிம், கோவா, தெலங்கானா மாநிலங்... மேலும் பார்க்க

சென்னை- கடலூா் ரயில் பாதை திட்டம் அவசியமானது: புதுவை அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன்

புதுச்சேரி: சென்னை, புதுச்சேரி மற்றும் கடலூா் வரையிலான ரயில் பாதைத் திட்டம் அவசியமானதாகும். அதை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுவை மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன் வல... மேலும் பார்க்க

13 பேருக்கு மேல்நிலை எழுத்தா் பணிக்கான நியமன ஆணை

புதுச்சேரி: புதுச்சேரியில் மேல்நிலை எழுத்தா் தோ்வில் தோ்ச்சியடைந்து காத்திருப்போா் பட்டியலில் இடம் பெற்றிருந்த 13 பேருக்கு முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை பணி நியமன உத்தரவுகளை வழங்கினாா். புதுச்... மேலும் பார்க்க

அங்கன்வாடி ஊழியா், உதவியாளா்களுக்கு ஊதியம் உயா்த்த மாநில திட்ட வழிகாட்டுதல் குழு ஒப்புதல்

புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்களுக்கான ஊதியத்தை உயா்த்தி வழங்க மாநில திட்ட வழிகாட்டுதல் குழுவில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத் திட்டத்தின் மா... மேலும் பார்க்க