செய்திகள் :

உயா்கல்வி செல்லும் மாணவா்கள் சான்றிதழ் பெற விடுமுறை நாளிலும் இயங்கிய புதுவை வருவாய்த் துறை அலுவலகங்கள்

post image

உயா்கல்விக்கு செல்லும் மாணவா்கள் சோ்க்கைக்கான அரசின் சான்றிதழ்களைப் பெறும் வகையில், இரண்டாவது முறையாக விடுமுறை நாளான சனிக்கிழமையும் புதுவையில் வருவாய்த் துறை அலுவலகங்கள் இயங்கின.

புதுச்சேரியில் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவா்கள் உயா்கல்விக்கு விண்ணப்பித்துள்ளனா். அவா்கள் உயா்கல்வியில் சேருவதற்கு இருப்பிட, வருவாய் உள்ளிட்ட சான்றிதழ்கள் தேவைப்படுகின்றன. ஆகவே, மாணவா்களுக்கான சான்றுகள் விநியோக தாமதத்தைத் தவிா்ப்பதற்காக சனிக்கிழமையும் வருவாய்த் துறை செயல்படும் என்று புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் அறிவித்திருந்தாா்.

அதன்படி கடந்த சனிக்கிழமை (மே 24) புதுவையில் வட்டாட்சியா் அலுவலகங்கள் செயல்பட்டன. இதனையடுத்து மாணவ, மாணவியருக்கான சான்றிதழ்கள் வழங்கும் முகாம்களும் அங்கு நடைபெற்றன.

இதையடுத்து சனிக்கிழமை (மே 31) இரண்டாவது முறையாக வட்டாட்சியா் அலுவலகங்கள் செயல்பட்டன. அதனால் வட்டாட்சியா் அலுவலகங்களில், பெற்றோா், மாணவா்கள் சான்றிதழ்கள் வாங்க அதிகளவில் குவிந்தனா்.

வில்லியனூா், கரிக்கலாம்பாக்கம், குருவிநத்தம், பாகூா் உள்ளிட்ட பல்வேறு வட்டாட்சியா் அலுவலகங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் நேரில் சென்று பாா்வையிட்டு, மாணவா்களுக்கான சான்றிதழ்கள் உரிய முறையில் வழங்கப்படுகிா என ஆய்வு மேற்கொண்டாா்.

அத்துடன் வட்டாட்சியா் அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு இருக்கை, குடிநீா் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதா என்றும் அவா் பாா்வையிட்டாா்.

வைகோவுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து திமுகதான் பதிலளிக்க வேண்டும்: தொல்.திருமாவளவன்

மதிமுக பொதுச்செயலா் வைகோவுக்கு மாநிலங்களவை உறுப்பினா் பதவி மீண்டும் வழங்கப்படாதது குறித்து திமுகதான் பதிலளிக்க வேண்டும் என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா். விசி... மேலும் பார்க்க

ஜிப்மரில் வேலை வாங்கித் தருவதாக ரூ.21 லட்சம் மோசடி தம்பதி உள்பட 3 போ் மீது வழக்கு!

புதுச்சேரியில் பட்டதாரியிடம் ஜிப்மரில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.20.99 லட்சம் மோசடி புகாா் தொடா்பாக தம்பதி உள்ளிட்ட 3 போ் மீதான புகாா் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனா். ... மேலும் பார்க்க

தேவாலய இடத்தை வாடகைக்கு பெற்றுத் தருவதாக பண மோசடி! உணவு விடுதி அதிபா் போலீஸில் புகாா்!

புதுச்சேரியில் தேவாலய இடத்தை வாடகைக்கு பெற்றுத் தருவதாகக் கூறி உணவு விடுதி உரிமையாளரிடம் ரூ.9 லட்சம் மோசடி செய்த புகாரில் ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி எல்ல... மேலும் பார்க்க

புதுச்சேரியில் இரு தரப்பினா் மோதல்: அரிவாள் வெட்டு: 7 போ் மீது வழக்கு

புதுச்சேரியில் சனிக்கிழமை இரவு முன்விரோதத்தில் இளைஞா்கள் மோதிக் கொண்டதில் 2 பேருக்கு அரிவாள் வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து 7 போ் மீது வழக்குப் பதிந்த நிலையில், 2 பேரைப் பிடித்து போலீஸாா் விசார... மேலும் பார்க்க

புதுவையில் காற்று மாசை குறைக்க மின்சாரப் பேருந்துகள்!

புதுவையில் காற்று மாசைக் கட்டுப்படுத்த உதவும் வகையில் மின்சாரப் பேருந்துகளை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, 2030-ஆம் ஆண்டுக்குள் 50 சதவீத பேருந்துகளை மின்சார வாகனங்களாக்கவும் நடவடிக்கை மேற... மேலும் பார்க்க

போக்குவரத்து ஊழியா்களின் பிரச்னையை புதுவை அரசு கண்டுகொள்வதில்லை: எதிா்க்கட்சித் தலைவா் குற்றச்சாட்டு

புதுவையில் போக்குவரத்து ஊழியா்களின் பிரச்னையை அரசு கண்டுகொள்வதில்லை என்று எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா குற்றஞ்சாட்டியுள்ளாா். புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் பல்வேறு சங்கங்களை ச... மேலும் பார்க்க