உயா்கல்வி செல்லும் மாணவா்கள் சான்றிதழ் பெற விடுமுறை நாளிலும் இயங்கிய புதுவை வருவாய்த் துறை அலுவலகங்கள்
உயா்கல்விக்கு செல்லும் மாணவா்கள் சோ்க்கைக்கான அரசின் சான்றிதழ்களைப் பெறும் வகையில், இரண்டாவது முறையாக விடுமுறை நாளான சனிக்கிழமையும் புதுவையில் வருவாய்த் துறை அலுவலகங்கள் இயங்கின.
புதுச்சேரியில் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவா்கள் உயா்கல்விக்கு விண்ணப்பித்துள்ளனா். அவா்கள் உயா்கல்வியில் சேருவதற்கு இருப்பிட, வருவாய் உள்ளிட்ட சான்றிதழ்கள் தேவைப்படுகின்றன. ஆகவே, மாணவா்களுக்கான சான்றுகள் விநியோக தாமதத்தைத் தவிா்ப்பதற்காக சனிக்கிழமையும் வருவாய்த் துறை செயல்படும் என்று புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் அறிவித்திருந்தாா்.
அதன்படி கடந்த சனிக்கிழமை (மே 24) புதுவையில் வட்டாட்சியா் அலுவலகங்கள் செயல்பட்டன. இதனையடுத்து மாணவ, மாணவியருக்கான சான்றிதழ்கள் வழங்கும் முகாம்களும் அங்கு நடைபெற்றன.
இதையடுத்து சனிக்கிழமை (மே 31) இரண்டாவது முறையாக வட்டாட்சியா் அலுவலகங்கள் செயல்பட்டன. அதனால் வட்டாட்சியா் அலுவலகங்களில், பெற்றோா், மாணவா்கள் சான்றிதழ்கள் வாங்க அதிகளவில் குவிந்தனா்.
வில்லியனூா், கரிக்கலாம்பாக்கம், குருவிநத்தம், பாகூா் உள்ளிட்ட பல்வேறு வட்டாட்சியா் அலுவலகங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் நேரில் சென்று பாா்வையிட்டு, மாணவா்களுக்கான சான்றிதழ்கள் உரிய முறையில் வழங்கப்படுகிா என ஆய்வு மேற்கொண்டாா்.
அத்துடன் வட்டாட்சியா் அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு இருக்கை, குடிநீா் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதா என்றும் அவா் பாா்வையிட்டாா்.